‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் 7 வில்லன்கள் இவர்களா ?

‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் 7 வில்லன்கள் இவர்களா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கமல் ஏழு வில்லன்களை எதிர்கொள்ளும் உயர் அதிரடி காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் ஆகியோர் நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

The 7 villains of Kamal Haasan in ‘Indian 2’ revealed

எல்லா கொலைக்கும் காரணமிருக்கு.. என் கொலைக்கு.!? மிரட்டும் உதயநிதி டிரைலர்

எல்லா கொலைக்கும் காரணமிருக்கு.. என் கொலைக்கு.!? மிரட்டும் உதயநிதி டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கலகத் தலைவன்’ படத்தை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘கண்ணை நம்பாதே’.

இப்படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் என்பவர் இயக்கி இருக்கிறார்.

இதில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, வசுந்தரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சித்துக்குமார் இசையமைக்க ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரித்துள்ளார்.

க்ரைம் த்ரில்லராக உருவான ‘கண்ணை நம்பாதே’ படம் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலலர் இன்று மாலை வெளியானது.

இந்த ட்ரைலரில்…

#KannaiNambathe most awaited trailer is here …

@RedGiantMovies_
@Udhaystalin
@mumaran1
@im_aathmika
@Prasanna_actor
@bhumikachawlat
@Act_Srikanth
@actorsathish
@SubikshaOffl
@ivasuuu
@JalandharVasan
@Music_Siddhu
@Sanlokesh
@stuntsaravanan
@DoneChannel1

Udhayanidhi’s kannai Nambathe trailer goes viral

‘பிச்சைக்காரன்’ அம்மா நிஜ தொழில் அதிபராக மாறியது எப்படி ?

‘பிச்சைக்காரன்’ அம்மா நிஜ தொழில் அதிபராக மாறியது எப்படி ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’ படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானவர் நடிகை தீபா ராமானுஜம். பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனியின் பெரும் பணக்கார அம்மாவாக நடித்துள்ளார்.

2019-க்குப் பிறகு எந்தப் படத்திலும் தோன்றாத தீபா, 2020-ல் பெண்களுக்கான ஜீன்ஸ் பிராண்டைத் தொடங்கி தொழிலதிபராக மாறியுள்ளார். அந்த வணிகம் லாபகரமாக மாறியதால், அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்குச் சென்று கிளை ஒன்றைத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் தீபாவைப் பின்தொடரும் ரசிகர்கள், மாடர்ன் உடையில் அவரைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.

‘Pichaikkaran’ actress Dheepa Ramanujam turns a successful business woman in real life

‘ஜெயிலர்’ செட்டில் ஜாலியாக நெல்சன்.; பதட்டத்தில் சூப்பர் ஸ்டார்(ஸ்) ரசிகர்கள்

‘ஜெயிலர்’ செட்டில் ஜாலியாக நெல்சன்.; பதட்டத்தில் சூப்பர் ஸ்டார்(ஸ்) ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப் குமார்.

இதற்கு முன்பு ரஜினி நடித்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.. அதுபோல நெல்சன் இயக்கிய விஜய்யின் ‘பீஸ்ட்’ படமும் மோசமான விமர்சனங்களை பெற்றது.

தற்போது ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணி அமைந்துள்ளதால் இந்த படத்தை சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எனவே அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருவரும் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க தீவிரமாக உழைத்து வருகின்றனர். தற்போது வரை ஜெயிலர் படத்தின் 80% ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ‘ஜெய்லர்’ பட செட்டில் இருந்து ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நெல்சன் ஜாலியாக பேசிக்கொண்டு திரிவதாக உள்ளது.

இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள்..” நாம தான்யா டென்ஷன்ல இருக்கோம்.. இந்த ஆளு ஜாலியா சுத்திட்டு இருக்காரு.. தலைவருக்கு ஹிட்டு கொடுத்துடுவாரா.? என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரீஃப், தமன்னா ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பல இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பான் படமாக உருவாக்கி வருகிறது என்பது கூடுதல் தகவல்.

Netizens comment on Nelson at Jailer sets video

அரியவனுக்கு வந்த சோதனை.; பதிலடி கொடுத்த இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர்

அரியவனுக்கு வந்த சோதனை.; பதிலடி கொடுத்த இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 3ல் வெளியாகவுள்ள ‘அரியவன்’ படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து ரசித்து மித்ரன் ஜவஹர் இயக்கி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஈஷான், டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர் குட் சுப்பிரமணி உட்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

கே எஸ் விஷ்ணு ஸ்ரீ இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய,ஜேம்ஸ் வசந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், டீசர், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

இந்த படம் உலகம் முழுவதும் மார்ச் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவில்லை என இணையத்தில் சிலர் தகவலை பரப்பி வருகின்றனர். அந்த தகவலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மித்ரன் ஆர் ஜவஹர் அவர்கள் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து இயக்கி இருப்பதாகவும் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பதில் பாராட்டையும் பெரும் வகையில் ‘அரியவன்’ திரைப்படம் இருக்கும் என தெரிவித்துள்ளது.

அதற்கேற்றார் போல் தற்போது இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mithran R Jawahar responds on ariyavan rumours

சினிமா லைட்மேன்களுக்கு உதவ ஏஆர். ரஹ்மான் திட்டம்.; அரசும் நடிகர்களும் உதவ FEFSI கோரிக்கை

சினிமா லைட்மேன்களுக்கு உதவ ஏஆர். ரஹ்மான் திட்டம்.; அரசும் நடிகர்களும் உதவ FEFSI கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சார்பில் அனைவருக்கும் வணக்கம்..!

திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆபத்தான, சிரமமான நிலையிலேயே இருந்துள்ளது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படத் தயாரிப்பாளிடமும், சின்னத்திரை தயாரிப்பாளர்களிடமும் கலந்து பேசியோ, வற்புறுத்தியோ, வேண்டுகோள் விடுத்தோ எங்கள் சம்பளத்தை ஓரளவு உயர்த்திவருகிறோம்.

திரைப்படத் துறையில் சாதாரண தொழிலாளர்கள் சம்பளம் இன்று ரூ. 1000/- தொடுவதற்கு 100 ஆண்டுகள் கடக்க வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுதிரைப்படத் துறைக்கு செய்யும் உதவிகள் மேலோட்டமாகவே நின்று விடுகிறது. அஸ்திவாரமான தொழிலாளர்களை சென்று அடைவதில்லை.

இதுவரை திரைப்படத்துறையில் பணிபுரியும்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்களை காப்பாற்ற எந்த வழியும் இல்லை.

ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரியும்போது இறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஒரு உதவி கிடைக்கிறது. ஆனால் சிரமப்பட்டு திரைப்படம் தாயாரிக்கின்ற சிறு தயாரிப்பாளர்களின் படங்களில் பணிபுரியும்போது விபத்து ஏற்பட்டால் அவர்களை காப்பாற்ற எந்த நாதியுமில்லை.

எனவே திரைப்படத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற நிதியாண்டு பட்ஜெட்டில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள் வழங்குகின்ற திட்டத்தை அறிவிக்குமாறு தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாக இசையமைப்பாளர் திரு. A.R.ரகுமான் அவர்கள் ஒரு நற்பணியை துவக்குகின்றார். திரைப்படத் துறையில் ஒரு அங்கமான லைட்மேன்கள் பணிபுரியும்போது விபத்து நேர்ந்தால் அவர்களுக்கு உதவ ஒரு நிதியாதாரத்தை (CORPUS FUND) ஏற்படுத்த உள்ளார்.

இதற்காக வருகின்ற மார்ச் 19ஆம் தேதி நேரு உள்ளரங்கில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதில் திரட்டப்படுகின்ற நிதியை பணிபுரியும் லைட்மேன்கள் விபத்தில் இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு உதவ, இந்த நிதியை பயன்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார். தானாக முன்வந்து இந்த உதவியை செய்கின்ற அவருக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் எங்கள் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிதி லைட்மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டும் ஆகும். இது போன்றே அனைத்து தொழிலாளர்களுக்கும் உதவுகின்ற திட்டத்தை சம்மேளனம் செய்யுமானால் நான் உடனிருந்து ஒத்துழைப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.

இது, A.R.ரகுமான் அவர்களை முன் உதாரணமாக கொண்டு திரைப்படத்துறையில் உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இது போன்றே தொழிலாளர்களுக்கு உதவ முன் வரவேண்டும் என பணிவன்புடன் கோரிக்கை வைக்கின்றோம்.

திரைப்படத் துறையில் உள்ள அனைவரும் அவர்களின் சம்பாத்தியத்தில் 1 % சதவிகித்தை நன்கொடையாக வழங்கினால் திரைப்படத்துறையில் அனைத்து தொழிலாளர்களும் காப்பாற்றப்படுவார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம். அது போன்றே தமிழக அரசும் திரைப்பட டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு ரூபாய் என பிடித்தம் செய்து ஒரு நிதியாதாரத்தை உருவாக்கி 60 வயது கடந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு மாத ஓய்வு ஊதியம் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு மறைந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்ட வழங்கிய பையனூர் இடத்தில் திரைப்பட அரங்குகள் கட்டப்பட்டுவருகின்றன மேலும் கலைஞர் நகரம் என்று பெயரிடப்பட்ட முகப்பு நுழைவாசலையும், கலைஞர் திருவுருவச்சிலையையும் அமைத்து வருகின்றோம்.

இத்திருவுருவச்சிலை மற்றும் முகப்பு வாசலை திறந்து வைக்குமாறும், தாங்கள் தந்தை திரைப்பட துறையினருக்கு குடியிருப்புகள் கட்ட வழங்கிய இடத்தில் குடியிருப்புகள் கட்ட உதவி செய்யுமாறும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி…!

26-02-2023

ஆர்.கே.செல்வமணி, தலைவர்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்

AR Rahman plans to help fefsi workers

More Articles
Follows