கபாலி தோல்வியா.? வைரமுத்துக்கு பதிலடி கொடுத்த தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் ஒவ்வொரு படத்திலும் அவரது அறிமுக பாடல் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும்.

அதற்கு முக்கிய காரணம் வைரமுத்துவின் வரிகளும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் வளமும் என்று சொன்னால் அது மிகையல்ல.

ஆனால் அண்மையில் வெளியான கபாலி படத்தில் இந்த கூட்டணி இடம் பெறவில்லை.

மாறாக தனக்கு பரிச்சயமான கூட்டணியை ரஞ்சித் களமிறக்கினார்.

இந்நிலையில் கபாலி படம் தோல்வி படம் என வைரமுத்து ஒரு மேடையில் வெளிப்படையாகவே பேசினார்.

இதுகுறித்து தாணு கூறியதாவது.. “வைரமுத்து அவர்களின் கோபம் புரிகிறது. ஒருவேளை கபாலியில் அவருக்கு பாட்டெழுத வாய்ப்பளித்திருந்தால் ஓஹோ என்று புகழ்ந்திருப்பார்.

வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். கபாலி மிக வெற்றிப் படம்.

இந்திய திரையுலகமே பார்த்திராத சாதனைகளை வசூலில் கபாலி படைத்து வருகிறது” என்றார் தாணு.

ரஜினியை சித்ரவதை செய்த கபாலி தயாரிப்பாளர்… கடிதம் ஏற்படுத்திய சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவை அதிர வைக்கும் அளவுக்கு கபாலிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

எனவே டிக்கெட் கட்டணமும் வெகு வேகமாக உயர்ந்தது.

ரூ. 1000க்கும் அதிகமாக சில தியேட்டர்களில் டிக்கெட் விற்கப்பட்டது நாம் அறிந்ததே.

இப்படம் பார்த்த சிலர், இது ரஜினி படம் இல்லை. நாங்கள் எதிர்பார்த்தது கபாலியில் இல்லை என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் ரஞ்சித் அவர்கள்… பாட்ஷா படத்தை எதிர்பார்த்து வராதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் படம் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் சீனியர் சிட்டிசன் ரஜினியை சித்ரவதை செய்து ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வைத்துள்ளதாக கூறப்பட்ட ஒரு கடிதம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

மேலும் இக்கடிதம் காவல் துறை ஆணையருக்கு எழுதப்பட்டுள்ளது என்பது குறப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் இடத்தில் விஷால்-ஆர்யா.. பொன்ராம் எடுத்த முடிவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பொன்ராம்.

இதில் இவருடன் சிவகார்த்திகேயன், சூரி, இமான் ஆகியோர் இணைந்து பணியாற்றினர்.

இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெறவே, ரஜினிமுருகன் படத்திலும் இணைந்தது.

இதனையடுத்து மூன்றவாது படத்திலும் சிவகார்த்திகேயனை பொன்ராம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது ரெமோ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து மோகன் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கவிருக்கிறார்.

எனவே, அப்படங்களை சிவகார்த்திகேயன் முடிப்பதற்குள் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் பொன்ராம்.

இதற்கான ஸ்கிரிப்ட் ஒன்று தயாராகவுள்ளதால், ஆர்யா, விஷால் உள்ளிட்டோரிடம் கால்ஷீட் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள இக்திரைக்கதையில் நிச்சயம் சூரி இருப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியுடன் நடிக்க முடியாமல் ‘கபாலி’யுடன் செல்பி எடுத்த நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியை வெள்ளித்திரையிலும், தூரத்தில் இருந்து பார்க்கும் ரசிகர்களை போலவே திரையுலகில் இருக்கும் நட்சத்திரங்களும் அவர் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர்.

ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே பலரது லட்சியமாக இருந்து வருகிறது.

இதனிடையில் கபாலி படம் அறிவிக்கப்பட்ட உடனே அதில் ரஜினிக்கு வயதான வேடம் என்றும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கக்கூடும் என்ற செய்திகள் வந்தன.

அதன் பின்னர்தான் ராதிகா ஆப்தே அந்த வேடத்திற்கு கமிட் ஆனார்.

இந்நிலையில் கபாலி படத்தை வித்யா பாலன் தனது கணவர் சித்தார்த் ராய் கபூருடன் மும்பையில் உள்ள ஆரோரா திரையரங்கில் பார்த்துள்ளார்.

அதன்பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கபாலி பேனர்கள் முன்பு தன் கணவருடன் போட்டோ எடுத்துள்ளார் வித்யாபாலன்.

முதல் வேலையாக நண்பர் கமலை சந்திக்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னதான் தங்களது ரசிகர்கள் முட்டி மோதினாலும் தங்களின் நெருக்கமான நட்பால் ரசிகர்களை ஒன்றிணைத்தவர்கள் ரஜினி-கமல்.

(இதை மற்ற நடிகர்களும் பின்பற்றினால் சமூக வலைத்தளங்களில் பாதி பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.)

இந்நிலையில் அமெரிக்காவில் சிகிக்சையை முடித்துக் கொண்டு கடந்த ஞாயிறு அன்று (ஜீலை 24) சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

எனவே தன் முதல் வேலையாக எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தன் நண்பர் கமல்ஹாசனை சந்திக்கவிருக்கிறாராம்.

அவர் எப்போது? சந்திக்கப் போகிறார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

எம்ஜிஆர் பட தலைப்புக்கு விஜய் ஓகே சொல்ல என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை.

அதுவரை தற்காலிகமாக விஜய் 60 எனவும் தளபதி 60 எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என பெயரிட விஜய் ஓகே சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலில் இப்பெயருக்கு விஜய் மறுத்து வந்தாராம்.

ஆனால் கதை ஓட்டத்தின் படி இத்தலைப்பே பொருத்தமாக உள்ளதால் தற்போது ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

எம்ஜிஆர் நடிப்பில் வெளியான எங்க வீட்டு பிள்ளை இன்றும் தமிழக ரசிகர்களால் மறக்க முடியாத படமாக உள்ள நிலையில் அதே பெயரில் விஜய் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows