BREAKING ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது.; நடிகர் விஜய்க்கு ஐகோர்ட் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து காட்டம்

BREAKING ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது.; நடிகர் விஜய்க்கு ஐகோர்ட் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து காட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayகடந்த 2012ல் நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை வாங்கினார்.

இதற்கு இந்தியாவில் வரி கட்ட வேண்டும்.

ஆனால் வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரியிருந்தார் நடிகர் விஜய்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்..

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றம் கண்டனம்..

மேலும் நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும்.

ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.

வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு எனவும் உயர் நீதிமன்றம் விஜய் மீது காட்டமாக தெரிவித்துள்ளது.

Thalapathy Vijay fined 1 lac by Madras High Court

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் பாராட்டை பெற்ற அதர்வா படம்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் பாராட்டை பெற்ற அதர்வா படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shiva rajkumarஇயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான “அட்ரஸ்” திரைப்படத்தின் டீஸர் திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

அந்த வகையில் இப்படத்தின் டீஸரை பார்த்த கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் அவர்கள் பெரும் ஆச்சர்யத்துடன் இயக்குநரை பாரட்டியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தின் டீஸரை பகிர்ந்ததோடு, படத்தை பாராட்டி வீடியோ பதிவும் வெளியிட்டுள்ளார்.

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் கூறியதாவது…

இயக்குநர் இராஜமோகன் எனது நீண்ட கால நண்பர் சமீபத்தில் அவரை சந்தித்தபோது, அவரின் “அட்ரஸ்” படம் குறித்து கேளிப்பட்டேன். கதையின் மையமே மிக வித்தியாசமாக இருந்தது. படத்தின் டீஸரை எனக்கு காட்டினார். டீஸர் மிக அற்புதமாக இருந்தது. படத்தின் டைட்டிலே கதை சொல்வதாக இருந்தது.

இந்தப்படம் ஒரு மாற்றத்தை தரும் மக்களின் படைப்பாக இருக்கும். காட்சிகள் எல்லாம் அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது. அதர்வா நன்றாக நடித்திருந்தார்.

இந்தக்குழு கடுமையாக உழைத்திருப்பது டீஸரிலேயே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றிபெற எனது வாழ்த்துகள் என்றார்.

இது குறித்து இயக்குநர் இராஜமோகன் பகிந்துகொண்டதாவது..

நான் விஜய் மில்டன் அவர்களிடம் பல காலமாக உதவியாளராக வேலை பார்த்தவன். திரையுலகில் அவர் தான் என் குரு. இயக்குநராக மாறிய பின்னரும் அவர் அழைக்கும் பொது அவர் படங்களில் வேலை பார்ப்பேன்.

விஜய் மில்டன் சார் இப்போது கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் அவர்களை வைத்து, படம் இயக்கி கொண்டிருக்கிறார்.

அதில் நானும் வேலை பார்த்தேன். எனக்கு சிவராஜ்குமார் அவர்களை முன்பிருந்தே தெரியும். அவர் என்னை குறித்து விசாரித்த போது, என் படத்தின் டீஸரை காட்டினேன். ஆச்சர்யப்பட்டு படத்தை குறித்து அனைத்து விசயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

என்னை வெகுவாக பாராடியதோடு படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடத்திலும் இந்த படம் குறித்து பாரட்டி பேசினார். ஒரு சூப்பர் ஸ்டார் இவ்வளவு மெனக்கெடலுடன் அனைவர் முன்னிலையிலும் பாரட்டியதுபெரும் மகிழ்ச்சியை தந்தது. ஆனால் அவர் அத்தோடு நில்லாமல் டீஸை கேட்டு வாங்கி அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்.

மேலும் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி ஒரு வீடியோ பதிவு செய்து இதை வெளியிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். மிக உச்சத்தில் இருக்கும் நடிகர், எங்கள் படத்தை இந்தளவு பாராட்டியது ,மிகப்பெரும் மகிழ்ச்சியையும், உற்சாக்த்தையும் தந்துள்ளது.

அட்ரஸ் படத்தின் டீஸருக்கு ரசிகர்களிடமிருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஜனரஞ்சகமான படைப்பாக இருக்கும் என்றார்.

மொழி வாரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழக கேரளா எல்லைக்களுக்கிடையில் சிக்கி கொண்டு அட்ரஸ் இல்லாமல் பல காலமாய் தவித்த ஒரு கிராமத்தின் கதை தான் இந்த “அட்ரஸ்” திரைப்படம் இயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் இப்படத்தினை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கிறார்.

Kannada Super Star Shiva Rajkumar praises Address team for their teaser

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்..; மக்கள் மன்றத்தை கலைச்சிட்டு மேற்கு வங்கம் பறக்கும் ரஜினி

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்..; மக்கள் மன்றத்தை கலைச்சிட்டு மேற்கு வங்கம் பறக்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரஜினி உடல்நிலை & கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஜனவரி மாதம் இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

பின்னர் சிறப்பு அனுமதியுடன் ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்புடன் செட் போடப்பட்டு படப்பிடிப்பை நடத்தினர்.

தன் காட்சிகளை முடித்துவிட்டு மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினி.

அங்கு மருத்துவ பரிசோதனை முடித்து 2 வாரங்கள் ஓய்வில் இருந்தார்.

இதன் பின்னர் சென்னை வந்த ஓரிரு தினங்களில் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

“தனது அரசியல் பிரவேசத்திற்காக மாற்றம் செய்யப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.

இதே நிர்வாகிகள் ரஜினி ரசிகர் நற்பணி மன்றங்களில் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவார்கள்.

இனி எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரப்போவதில்லை.” என அறிக்கை வெளியிட்டார்

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நாளை மறுநாள் (ஜூலை 14) மேற்கு வங்கம் செல்கிறாராம் ரஜினி.

அங்கு 4 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இத்துடன் தான் நடிக்கவேண்டிய காட்சிகளை நிறைவு செய்கிறார் ரஜினி.

‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ல் தீபாவளிக்கு ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா..*. இந்த பாடல் ஏனோ தற்போது நினைவுக்கு வருகிறதே…

Rajini is leaving for West Bengal on July 14 for the final shoot of Annaatthe

சிஸ்டத்தை சுத்தம் செய்ய வீரர்கள் தயார்.! தலைவர் யார்?.; வேலையை பாருங்க.. ரஜினியை கலாய்க்கும் கஸ்தூரி..?

சிஸ்டத்தை சுத்தம் செய்ய வீரர்கள் தயார்.! தலைவர் யார்?.; வேலையை பாருங்க.. ரஜினியை கலாய்க்கும் கஸ்தூரி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார் ரஜினிகாந்த் என செய்திகள் வந்தன.

அதன்படி இன்று 12 ஜூலை தன் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் ரஜினி.

ராகவேந்திரா மண்டபம் செல்வதற்கு முன் ‘அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? மக்கள் மன்றத்தை கலைக்கலாமா? என ஆலோசனை செய்யவுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ரஜினி.

ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார் ரஜினி.

“எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. மக்கள் மன்றம் கலைக்கப்படும். பழையபடி ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும்” என அறிவித்து அரசியலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி தன் ட்விட்டரில்…

” இன்றைய அறிவிப்பில் யாருக்கும் புதிதாய் அதிர்ச்சியோ பெரிய ஏமாற்றமோ இருந்திருக்க வாய்ப்பில்லை.

அண்ணாத்தே வெளியீட்டிற்கு பின் இன்னொரு அறிவிப்பையையும் எதிர்பார்க்கலாம்.

ரஜினி காட்டிய வழியில் ரசிகர்களும் சொந்த வேலையை கவனிக்க போகலாம்” என கஸ்தூரி கூறியுள்ளார்.

தன்னுடைய அடுத்த ட்வீட்டில்…

கெட்டு போன சிஸ்டத்தை
சுத்தம் செய்ய
போர் வீரர்கள் தயார்.
படைக்கு தலைவர் யார்?

என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

Actress Kasthuri teases super star Rajinikanth

மாணவர்களுக்கு கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக்க லியோனி திட்டம்

மாணவர்களுக்கு கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக்க லியோனி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

leoniதமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக பட்டிமன்ற பேச்சாளர் ஐ. லியோனி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த 2011ல் பேராசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் இவர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது பெண்கள் குறித்து இவர் பேசிய கருத்துகள் சர்ச்சையானது.

இதனால் லியோனியின் நியமனத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பதவியேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் லியோனி.

“பாடநூல்களை மாணவர்கள், விரும்பி மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் மாற்றுவதே என் நோக்கம்.

நான் பள்ளி மாணவராக இருந்த போது அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை மற்றும் அவரது பேச்சுகள் அப்போதைய பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது 1ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார் லியோனி.

Leoni wants to include Kalaignar life history in school books

2வது குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்..; அப்பாவே மகனாக பிறந்திருக்கிறார் என நெகிழ்ச்சி

2வது குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்..; அப்பாவே மகனாக பிறந்திருக்கிறார் என நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan-father-G.-Dossகோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தலில் மனைவியுடன் ஓட்டு போட வந்திருந்தார்.

அப்போது அவரது மனைவி 2வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் இன்று ஜூலை 12 சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு அழகிய மகன் பிறந்திருக்கிறார்.

இதனை சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் குறிப்பிட்டு சொல்லும்போது…

18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் – என பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் #KuttySK என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Actor Sivakarthikeyan blessed with a baby boy

More Articles
Follows