தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு சில நடிகர்கள் மட்டுமே சினிமாவை தொழிலாக நினைக்காமல் ஒரு கலையாக நினைத்து அதற்காகவே தங்களை அர்ப்பணித்து வருகின்றனர்.
சண்டைக் காட்சிகளில் கூட டூப் எதுவும் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்து வருகின்றனர். அதில் அஜித்தும் முக்கியமானவர்.
இவர் தற்போது வினோத் இயக்கும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவருடன் வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் நடிக்க யுவன் இசையமைக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார்.
இதன் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கும் பஞ்சமில்லையாம். ஒரு அதிரடியான மழை சண்டை காட்சியை அண்மையில் படமாக்கினார்களாம்.
அதில் டூப் நடிகரை பயன்படுத்தாமல் அஜித்தே ரிஸ்க் எடுத்து நடித்தாராம்.
ஏற்கெனவே இதுபோன்ற ரிஸ்க் காட்சிகளில் நடித்து அடிப்பட்டு உடம்பில் பலமுறை அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர் அஜித்.
இவரின் ரிஸ்க் அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
Thala fans in fear because of Ajiths risk in Stunts