இஸ்லாமியர் நெற்றியில் திலகமிட முடியுமா? ராஜமௌலிக்கு பாஜக MP எச்சரிச்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோமரம் பீம், அல்லூரி சீதாராம ராஜு ஆகிய உண்மையான போராளிகளின் கதைக்களத்தை வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி.

இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.

முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அண்மையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கோமரம் பீம் கேரக்டரின் புரொமோ வீடியோ ஒன்று வெளியானது.

அதில் இஸ்லாமியரைப் போல பீம் கேரக்டர் உடை அணியும் காட்சியுள்ளது.

இதற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் தெலங்கானா மாநில பாஜக தலைவரும், கரீம்நகர் எம்.பி.யுமான பந்தி சஞ்சய் குமார்.

அவர் பேசியதாவது… “பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்று கோமரம் பீம் தலையில் ராஜமௌலி குல்லா அணிவித்தால் நாங்கள் அமைதியாக இருப்போமா?

கோமரம் பீம் அவர்களை குறைவாக மதிப்பிட்டோ, ஆதிவாசிகளின் உரிமைகளை, உணர்வுகளைத் தாழ்த்தியோ பட கதை இருந்தால் படம் ஓடும் தியேட்டர்களை எரிப்போம்.

ராஜமௌலிக்கு தைரியம் இருந்தால் ஒரு இஸ்லாமியத் தலைவரை நெற்றியில் திலகத்தோடு, காவி உடை அணியும் போல காட்சி வைக்க முடியுமா?”” என கேள்வி கேட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Telungana BJP MP warns Director Rajamouli

விஜய்-நயன்தாரா தங்கையிடம் பரதம் கற்கும் நடிகர் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா காலத்தில் எவருமே எதிர்பாராத வகையில் தனது உடல் எடையை 30 கிலோ குறைத்துள்ளார் சிம்பு.

சில தினங்களாக வெளியாகும் சிம்புவின் ஸ்லிம் படங்களை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியத்தில் உறைந்துள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இந்த படத்திற்காக களரி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல வித்தைகளை கற்று வருகிறாராம் சிம்பு.

நடிகை சரண்யாவிடம் பரதநாட்டியம் கற்கும் சிம்பு படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாகவும் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும் நடித்தவர் சரண்யா என்பது குறிப்பிடத்தக்கது.

STR learns Bharatanatyam from Saranya Mohan

மலையாள படம் ரீமேக்…? வெற்றிமாறன் சசிகுமார் கதிரேசன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் இணைகின்றனர்.

ஒரு புதிய படத்தை தயாரிப்பதற்காக இவர்கள் இணைந்துள்ளனர்.

மேலும் கதை மற்றும் திரைக்கதையை வெற்றிமாறன் எழுதுகிறார்.

இதில் நாயகனாக சசிகுமார் நடிக்கிறார் என அறிவித்துள்ளனர்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு இப்பட சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

ஆனால் இப்படத்தின் இயக்குனர் யார்? என்பதை அறிவிக்கவில்லை.

மலையாளத்தில் பிரித்விராஜ்-பிஜுமேனன் நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட்டான ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்க்காக இந்த படம் இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனென்றால் அப்பட தமிழ் ரீமேக் உரிமையை கதிரேசன் வாங்கியுள்ளார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

மேலும் அதன் தமிழ் ரீமேக்கில், சசிகுமார் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த படம் அந்த படமா? என்பதை படக்குழு அறிவிக்கும் வரை காத்திருப்போம்.

Vetri Maaran and Sasi Kumar joins for a new tamil film

பாபா கா தாபா மோசடி..; நல்லது செய்யவே மறுக்கும் மக்கள்… – மாதவன் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டெல்லியில் பாபா கா தாபா என்று பெயரிடப்பட்ட ஒரு உணவகத்தை வயதான தம்பதியினர் நடத்தி வந்தனர்.

காந்தா பிரசாத் தம்பதியினர் அந்த பகுதியில் பிரபலம்.

அவர்களை குறித்து ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார் யூடியுப் சேனல் நடத்தும் கவுரவ் வாசன்.

அந்த வீடியோவில்… கொரோனா பிரச்சினை காரணமாக காந்தா பிரசாத் நடத்தி வரும் ஓட்டலுக்கு யாரும் யாரும் சாப்பிட வருவதில்லை. அவர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர் என வீடியோ பதிவிட்டார்.

இதனால் சில நாட்களில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றாக திரண்டு அந்த ஓட்டலில் சாப்பிட்டனர். இதனால் அவர்களுக்கு வருமானம் கூடியது.

மேலும் நல்ல உள்ளங்கள் பலரும் அந்த உணவகத்துக்கு நிதியுதவி அளிக்க தொடங்கினர்.

ஆனால் இந்த நிதியுதவியை கவுரவ் வாசன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தன் வங்கி கணக்கில் ஏற்றிக் கொண்டார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தெரிந்துக் கொண்ட காந்தா பிரசாத் டெல்லி தெற்கு மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து நிதியுதவி அளித்தவர்கள் கவுரவ் வாசனை கடுமையான திட்டத் தொடங்கினர்.

இந்த நிலையில் இந்த தகவல்கள் அறிந்துக் கொண்ட நடிகர் மாதவன் தன் ட்விட்டரில்…

பாபா கா தாபா உணவக உரிமையாளர் ஏமாற்றப்பட்டுள்ளார்.

இது போன்ற சம்பவங்களால் தான் மக்கள் நல்லது செய்ய முன்வர மறுக்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

அவர்களை ஏமாற்றிய அந்த மோசடிக்கார ஜோடி (கவுரவ் மற்றும் அவரது மனைவி) கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால் மட்டுமே நீதி நிலைநாட்டப்படும். டெல்லி காவல்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது”.

இவ்வாறு மாதவன் பதிவிட்டுள்ளார்.

Actor Madhavan reacts to Baba Ka Dhaba cheating allegation

மனித இனத்துக்கு கடவுளின் பரிசு சோனு சூட்..; விஷால் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமே ஹீரோக்களாக வாழும் வேளையில் நிஜத்திலும் ஹீரோவாக மாறியவர் நடிகர் சோனு சூட்.

ஹிந்தி நடிகரான இவர் தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கரோனா ஊரடங்கால் இந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

செல்வந்தர்கள் தங்கள் குடும்பத்தோடு ஊரடங்கை கழிக்க ஏழை மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

அப்போது பல்வேறு உதவிகளை செய்து வந்தார் நடிகர் சோனு சூட்.

இதனால் தற்போது வரை பலரும் உதவி கோர சளைக்காமல் உதவி செய்து வருகிறார் இந்த ரியல் ஹீரோ.

தற்போது தன் சினிமா சூட்டிங்கில் பிசியகிவிட்டார்.

இந்த நிலையில் ஹைதராபாத் வந்திருந்த சோனு சூட்டைச் சந்தித்துப் பேசி அவருடன் போட்டோ எடுத்து அதை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் விஷால்.

அதில்… “அற்புதமான ஆன்மா அன்பு சகோதரர் சோனு சூட்டைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் மனித இனத்துக்குக் கடவுள் தந்த பரிசு. நீங்கள் செய்து கொண்டிருக்கும், சமூகப் பணிகள் மூலம் எனக்கு ஊக்கம் அளித்துள்ளீர்கள்.

அறிமுகமே இல்லாதவர்களின் குடும்பங்களுக்காகப் பலரும் இம்மாதிரியான முயற்சிகளைச் செய்ய மாட்டார்கள். நீங்கள் செய்த பணிகளை கேள்விப்பட்டு வாயடைத்துப் போய்விட்டேன். தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுங்கள்”.

இவ்வாறு விஷால் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Actor Vishal lauds Sonu Sood in twitter

குமரியில் ஆரம்பம்.. அதிரடி திட்டம்.. தமிழகத்தை சுற்ற ரெடியாகும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த வருடம் மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தன் மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் கமல்ஹாசன்.

சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளர் என அந்த கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் கட்சி சின்னத்தை தன் சட்டையில் டிசைன் செய்து அதையும் பிரபலப்படுத்தி வருகிறார்.

தற்போது கடந்த சில தினங்களாக தன் கட்சி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் கமல்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கமலின் மூன்று திட்டங்கள் பற்றி தெரிய வந்துள்ளது.

அதில்…

2021 ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல தயாராகி வருகிறார் கமல்.

கன்னியாகுமரியில் தனது பயணத்தை தொடங்கவுள்ளார்.

முதற்கட்டமாக நெல்லை, திருச்சி, சென்னை என 3 இடங்களில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்த முடிவு.

Kamal Haasan starts his party’s campaign in Kanya Kumari

More Articles
Follows