தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவில் ஹிந்தி மற்றும் தமிழ் சினிமாவிற்கு நிகரான மார்கெட் உள்ள மாநிலம் என்றால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை கூறலாம்.
இதனால்தான் தமிழ் சினிமா உருவாகும்போதே தெலுங்கையும் குறி வைத்து அதற்கேற்ப காட்சிகளை வைக்கின்றனர்.
இதனிடையில் ஆந்திராவில் சினிமா டிக்கெட்டுகளை அரசு கண்காணிப்பில் விற்க வேண்டும் என்ற திரைப்பட ஒழுங்குமுறை திருத்த சட்டம் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வந்தன.
மேலும் அரசு இணையத்தளங்களில் சினிமா டிக்கெட்டுகள் விற்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இது சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஓகே. ஆனால் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
அரசின் இந்த புதிய திரைப்பட ஒழுங்குமுறை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபாஸ், மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளிட்ட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சிலர் இன்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பில், ரிலீசாகி சில தினங்களுக்கு 5 காட்சிகள் திரையிடுப்படுவது, Pan India திரைப்படங்களுக்கு சிறப்பு டிக்கெட் கட்டணங்கள், விசாக பட்டிணத்தில் திரைத்துறை இயங்குவதற்கான சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் முதல்வரை சந்தித்துப் பேச ஐதராபாத்திலிருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இன்று மகேஷ் பாபுவின் திருமண நாள் என்பதால் அவருக்கு விமானத்திலேயே வாழ்த்து சொல்லி அந்த படங்களையும் பிரபலங்கள் பகிர்ந்துள்ளனர்.
Telugu super stars met Andhra CM for this purpose