தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் எந்தவொரு புதிய தமிழ் படமும் வெளியாகவில்லை.
விஷால் தலைமையிலான திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவு படி இந்த வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
தனியார் கார்பரேட் நிறுவனங்களின் க்யூப் டிஜிட்டல் சேவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த நிறுவனங்கள் டீசர், டிரைலர் உள்ளிட்டவைகளை தியேட்டர்களின் திரையிடும் போது அதற்கு கட்டணங்களை தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்று வருகின்றன.
இதனால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரையிட லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் நிலையுள்ளது.
இந்த கட்டண குறைப்பு குறித்து பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றாலும், சுமூக தீர்வு ஏற்படவில்லை.
ஆனால் தியேட்டர் அதிபர்கள் பழைய ஹிட்டான தமிழ் படங்களையும் மற்ற மொழி புதுப்படங்களையும் திரையிட்டு வருகின்றன.
இதனை வைத்து க்யூப் நிறுவனங்கள் தங்களை பிழைப்பை எந்தவொரு இடையூறும் இல்லாமல் செய்து வருகின்றன.
இந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்ட நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வகையில் ஏப்ரல் 8 ஞாயிறு முதல் தமிழகத்தில் தெலுங்கு படங்கள் வெளியாகாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அண்மையில் வெளியாகி ஹிட்டான ராம்சரணின் ரங்கஸ்தலம் படத்தை கூட அன்றுமுதல் தமிழகத்தில் திரையிட மாட்டோம் என அந்த படத் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறாராம்.
Telugu Producer council decided not to screen Telugu movies to supports TN producers