தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே தமிழகம் முழுவதும் உள்ள போராட்டக்களத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அதிகாலையில் போராட்டத்தை கலைத்து இளைஞர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை தொகுத்துள்ளோம்.
- திருவல்லிக்கேணியில் போராட்டக்காரர்களின் தாக்குதலைத் தொடர்ந்து வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு
- சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டம் கலைப்பு.
- மெரினாவில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
- மதுரை அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- அனைவரும் அவரவர் ஊர்களில் நடக்கும் போராட்டக்களத்திற்கு உடனே வரவும். மாணவருடன் மக்கள் கைகோர்க்கவும் – மக்களுக்கு போராட்டகளம் அழைப்பு.
- மெரினாவில் உள்ள போராட்டக்காரர்களுக்கு உணவு எடுத்து செல்ல தடை தற்போது மெரினாவில் உள்ள போராட்டக்காரர்களுக்கு கடல் வழியாக படகு மூலம் உணவு எடுத்து வந்து உணவு வழங்கும் பணி தீவிரம்.
- வலுக்கட்டாயமாக மாணவர்களை அப்புறப்படுத்தியது கண்டனத்திற்குரியது என்று தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.
- திருச்சியில் 5 நாட்களாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது 5 கோரிக்கைகளை முன் நிறுத்தி போராட்டத்தை வாபஸ் பெற்றனர் இளைஞர்கள்.
- கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என திருச்சி இளைஞர்கள் அறிவித்துள்ளனர். நெல்லையிலும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர் இளைஞர்கள்.
- காஞ்சிபுரம் , பரமக்குடி அரியலூர் , சேலம் , பெரம்பலூர் , கருர் ஆகிய உள்ள மாணவர்கள் வெளியேற்றம்.
- சென்னை ராயப்பேட்டையில் பேரணியாக சென்ற இளைஞர்கள் மீது தடியடி.
- சென்னையில் பொது மக்கள் கொந்தளிப்பு ஆங்காங்கே பொது மக்ககளும் அமர்ந்து சாலை மறியல்.
- திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற்ற போராட்ட களத்திலிருந்து பிரிந்து சென்ற மற்ற பிரிவினர் சாலையில் அமர்ந்து போராட்டம்.
- மெரினாவில் வலுக்கட்டாயமாக வெளியேற்றபடுவதால் இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டம்.
- சென்னை மெரினாவில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது மணல், செருப்பு வீச்சு
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- அலங்காநல்லூர் போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை.
- சென்னை ராயப்பேட்டையில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தது போலீஸ்
- போராட்டத்தின் காரணமாக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
- மதுரை தமுக்கம் மைதானத்தில் இளைஞர்கள்- காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு
- சென்னை கடற்கரை பகுதிகளில் கண்ணீர் புகை குண்டு வீசி கலைக்க முயற்சி
- சேலம் சிறை பிடிக்கப்பட்டிருந்த ரெயிலை அதிரடியாக போலீஸ் மீட்டது ரெயிலின் முன்பிருந்த ஆர்பாட்டக்காரர்கள் விரட்டியடிக்கப் பட்டனர்.
- ஆனாலும் போராட்டத்தை நடத்துவோம் என மாணவர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.