தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மெர்சல் படத்துக்கான சென்சார் சர்ட்டிபிகேட்டை திரும்பப் பெறக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட் மெர்சல் படத்தில் அப்படி என்ன குறை கண்டீர்கள்? அதை படமாக மட்டுமே பார்க்க வேண்டும்.
அதில் பேசப்பட்ட வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?
கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு என தீர்ப்பளித்தது கோர்ட்.
இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது…
சினிமா போன்ற பெரு ஊடகத்தில் தவறான கருத்தை பதிவிடுவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என்றார்.
மேலும் ஒரு கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அது சுதந்திரம் இல்லை. கருத்து திணிப்பு என்றும் கூறியுள்ளார்.
Tamilisai Soundararajan questions to Mersal judgement today