தேவையற்ற பிரச்சனையை திருமாவளவன் ஊதி நெருப்பாக்குகிறார்..; ரஜினி கட்சிக்காக காத்திருக்கும் தமிழருவி மணியன் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அவதூறான செய்தி குறித்து காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….
—————————
திரு தொல். திருமாவளவனைத் தாக்கி
ஒரு தரக்குறைவான
விமர்சனத்தை வெளியிட்டு
அதன்கீழ் என் படத்தையும்
எந்த மனநோயாளி போட்டிருக்கிறார் என்று
தெரியவில்லை.

ஐம்பதாண்டுகளுக்கு மேல்
அரசியல் களத்தில் இயங்கும் நான் எந்த நிலையிலும் எவ்வளவு
தவறான மனிதரையும்
தனிப்பட்ட முறையில் தரம்
தாழ்ந்து ஒரு வார்த்தையைக்
கூடப் பேசியதுமில்லை;
எழுதியதுமில்லை.

சமூக ஊடகங்கள் ஏன் இந்த அளவு பாழ்பட்டுக்
கிடக்கின்றன என்று எனக்குப் புரியவில்லை.

கழிப்பறை எழுத்துகள்
விமர்சனம் என்ற பெயரில்
பதிவேற்றம்
செய்யப்படுவதும்
யாரும் யாரையும் இழிந்த
வார்த்தைகளில் கீழிறங்கி
விமர்சிக்கலாம் என்ற நிலை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதும் சமூக ஆரோக்கியத்தையே
முற்றாகச் சிதைத்துவிடும்
என்ற அச்சம் என்னை
அலைக்கழிக்கிறது.

வெறுப்பு அரசியல் எல்லை
மீறிவிட்ட நிலையில் இந்த
இழிந்த அரசியல் களத்தை
விட்டே முற்றாக விலகி
விடுவதுதான் நல்லது என்ற எண்ணம் என்னுள் எழுகிறது.

எந்த வகையிலும் மக்களுக்கு நன்மை தராத,
சமூக நல்லிணக்கத்தைப்
பாதிக்கிற ஒரு தேவையற்ற
பிரச்சனையை ஏன் திருமாவளவன் ஊதிப் பெருநெருப்பாக வளர்த்தெடுக்கிறார் என்று
புரியவில்லை. இதற்குள்
நுண்ணரசியல் இருக்கக்கூடும்.

ரஜினி அவர்கள் அரசியல் சார்ந்து செயற்படும்வரை எந்த ஊடகத்திலும் என் கருத்தை
வெளிப்படுத்துவதில்லை
என்பதில் நான் உறுதியாக
இருக்கிறேன்.

காந்திய
மக்கள் இயக்க முகநூலில்
என் கையொப்பத்துடன்
இடம் பெறும் கருத்துகள்
மட்டுமே என்னைச் சார்ந்தவை. எந்தக்
கேவலத்திலும் கீழிறங்கி எவரையாவது பழிதூற்ற
வேண்டும் என்ற மன அரிப்பு என்னுள் என்றும் எழுந்ததில்லை.

இழிந்த
வாழ்க்கை வாழ்வதற்காக
நான் அரசியலில் அடியெடுத்து வைக்கவில்லை.

தமிழருவி மணியன்

Tamilaruvi Manian on Thiruma Valavan’s controversy

சீறும் பாம்பு… ஸ்லிம் பாடி… ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்கில் அசத்தும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக சிம்பு & சுசீந்திரன் இணையும் படத்தினை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் பாரதிராஜா, மனோஜ், நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

‘ஈஸ்வரன்’ என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (அக்டோபர் 26) விஜயதசமியை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.

உடல் எடையை குறைத்த நிலையில் ஸ்லிம் ஆகவுள்ளார் சிம்பு. கையில் பாம்புடன் காணப்படுகிறார்.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. சுமார் 40% படப்பிடிப்பை முடித்துவிட்டதாம் படக்குழு.

Simbu in Easwaran first look released

பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை.; பாண்டிய மன்னனுக்கு பிறகு அள்ளிக் கொடுத்த நகைக்கடை அதிபர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள உற்சவருக்கு தியாகராய நகரை சேர்ந்த நகை கடை அதிபர் ஜெயந்திலால் சலானி என்பவர் பாண்டியன் கொண்டை என்ற 3 கிலோ தங்கத்தினால் ஆன கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார்.

இதில் தங்கம் மட்டுமல்லாது வைரம் மரகதம் உள்ளிட்ட ஒன்பது வகையான விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 11 மாதங்களாக தனது நகை பட்டறையில் இதனை வடிவமைத்துள்ளார் ஜெயந்திலால்.

இதையடுத்து இன்று காலை தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து உற்சவருக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்தார்.

பாண்டியன் கொண்டை என்பது ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதருக்கு பாண்டிய மன்னன் தனது ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற கிரீடத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளார்.

அதன் பின்னர் முதல் முறையாக இவ்வளவு விலை உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Triplicane Lord Sri Parthasarathy gets 3 kg gold crown

Exclusive என் வளர்ச்சிக்காக அப்பாவின் புகழை கெடுக்க மாட்டேன்..- திவ்யா சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புரட்சித் தமிழன் சத்யராஜின் மகள் திவ்யா.

இவர் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமான ஊட்டச்சத்து நிபுணர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் நீட் தேர்வை எதிர்த்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அது அப்போது வைரலானது.

அண்மையில் கொரோனா ஊரடங்கு காரணமாகப் பெரும் இழப்புகளைச் சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் விவசாய துறைக்கு கோரிக்கை வைத்திருந்தார் திவ்யா.

இதன்பின்னர் ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த ‘மகிழ்மதி இயக்கம்’ அரசியல் கட்சியோ,, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம் என்பதை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பாஜக சார்பில் திட்டமிடப்பட்ட ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என தெரிவித்தார். அது சர்ச்சையாக மாறியது.

இருந்தபோதிலும் இரும்பு பெண்மணியாக இருந்து ரத யாத்திரை தடை கோரிக்கைக்காக மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்‌ திவ்யா.

இந்த நிலையில் திவ்யா அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தவுடன் வருகிற தேர்தலில் தன் மகளுக்கு ஆதரவாக சத்யராஜ் பிரச்சாரம் செய்வார் என்ற தகவல் பரவியது.

இது தொடர்பாக திவ்யாவிடம் நாம் கேட்டபோது…

“அப்பா என் உயிர் தோழன். என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார்.

ஆனால் முக்கியமான விஷயம்… I am selfmade. Independent person. சொந்த வளர்ச்சிக்காக ஒரு போதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்” என தெரிவித்தார் திவ்யா.

அரசியலில் வெற்றிக் கொடி கட்ட வாழ்த்துக்கள் திவ்யா…

Will Sathyaraj support his Daughter Divya in her Political path

.

‘களத்தில் சந்திப்போம்’… ஜீவா-அருள்நிதிக்கு கைகொடுக்கும் ஆர்யா-விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்.ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி இணைந்துள்ள படம் ‘களத்தில் சந்திப்போம்’.
இப்படம், ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும், 90வது படமாகும்.

நாயகிகளாக மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். ‘அப்பச்சி’ என்ற வித்தியாசமான வேடத்தில், ராதாரவி அசத்தியுள்ளார். மேலும், ரோபோ சங்கர், பாலசரவணன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம், இரண்டு நண்பர்களின் நட்பை மையமாக கொண்ட ஆக் ஷன், கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசரை நாளை அக்டோபர் 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆர்யா மற்றும் விஜய்சேதுபதி இணைந்து வெளியிடவுள்ளனர்.

இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Arya and Vijay Sethupathi to reveal the teaser of Kalaththil Sandhippom tomorrow

சிவாவை இயக்கும் ‘தில்லுக்கு துட்டு’ பட இயக்குனர்..; இப்படியொரு டைட்டிலா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தனியார் டிவியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இயக்குனர் ராம் பாலா.

இவர் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு-2 ஆகிய படங்களை இயக்கி பேய் ஹிட்டு கொடுத்தார்.

தற்போது மிர்ச்சி சிவாவை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

மிர்ச்சி சிவா மற்றும் நிக்கி கல்ராணி ஜோடியாகும் இந்த படத்திற்கு ‘இடியட்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் முழு நீள காமெடி பேய் படமாக உருவாகவுள்ளது.

தற்போது ‘இடியட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகிவருகிறது.

Director Ram Bala’s next is titled as Idiot

More Articles
Follows