தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா மற்றும் கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்தவர் ஞானவேல் ராஜா.
இவையில்லாமல் ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட அடல்ட் ஒன்லி படங்களையும் விநியோகம் செய்துள்ளார்.
இந்த நிலையில் இந்தி மொழியை கற்றுக் கொள்வது குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது…
மத்திய அரசு, ஒரு போதும் இந்தி மொழியை திணிக்கவில்லை. மற்றொரு மொழியை தெரிந்து கொள்வதில், ஒருபோதும் தவறு இல்லை.
ஒரு மொழி இருப்பதால், இன்னொரு மொழி அழியும் என்ற பிரசாரம், ஒரு கும்பலால் தவறாக பரப்பப்படுகிறது.
இதன் காரணமாக, இன்று 90 சதவீத தமிழர்களுக்கு, மத்திய அரசின் திட்டம் தெரிவதில்லை” என பேசியுள்ளார்.
Tamil wont be destroyed if we learn Hindi says Gnanavel Raja