தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தன் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இதனால் பல உயிர்கள் பலியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட போதிலும் மக்கள் கொரோனா பயம் அறியாது ஊர்களில் சுற்றித் திரிந்த வண்ணம் உள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுக்க போராடி வருகின்றன. இந்த திட்டத்திற்கு பல கோடிகளை ஒதுக்கியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்களின் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80 (g)-ன் கீழ் 100 சதவீத வரி விலக்கு உண்டு.
பொது நிவாரண தொகையை முதலமைச்சரிடம் மற்றும் அரசு அலுவலர்களிடம் நேரடியாக வழங்க வேண்டாம்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சத்திற்கும் மேல் உதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர்
பத்திரிகைகளில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையை செலுத்த வேண்டிய வங்கி எண் இதோ….
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமை செயலகம், சென்னை, 600009. சேமிப்பு கணக்கு எண்: 117201000000070, IFSC:IOBA0001172 என்ற கணக்கில் பணம் அளிக்கலாம்.
Tamil Nadu govt seeks public donation to combat Corona