தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது.
அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்தனர்.
கடந்த வெள்ளி (மார்ச் 19) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.
ஏழாயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 22ம் தேதி ஆகும்.
முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 25 பேர்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி நாயக்கனூர் தொகுதியில் 33 பேர்.
திமுக தலைவர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 41 பேர்
அமமுக தலைவர் தினகரனின் கோவில்பட்டி தொகுதியில் 19 பேர்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் 19 பேர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருவொற்றியூர் தொகுதியில் 24 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிகபட்சமாக கரூரில் 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சுயேட்சையாக மட்டும் 59 பேர் போட்டியிடுகின்றனர்.
இன்றைய நிலவரப்படி, மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட ஏழாயிரத்து 255 மனுக்களில் இரண்டாயிரத்து 171 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவாயிரத்து 663 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலோடு இடைத் தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் 13 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த வசந்தகுமார் அவர்களின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.
Tamil Nadu Assembly Elections Nominations and Rejection