நடிகர் விவேக் பெயரில் சாலை.; தமிழக முதல்வருக்கு உதயா நன்றி

நடிகர் விவேக் பெயரில் சாலை.; தமிழக முதல்வருக்கு உதயா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா காமெடியன்களில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விவேக்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுக்காலம் ரசிகர்களை தன் நகைக்சுவையாலும் சிந்தனை கருத்துக்களாலும் மகிழ்வித்து வந்த இவர் கடந்த 2021 ஏப்ரல் 17ல் மரணமடைந்தார்.

தற்போது ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தார்.

விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு விவேக் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்து இருந்தார்.

அதன்படி நேற்று மே 1ஆம் தேதி சின்னக் கலைவாணர் விவேக் சாலை என்று அந்த சாலைக்கு பெயரிட்டனர்.

இந்த நிலையில் அரசாணை வெளிட்டு பெயரிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் உதயா.

அவரின் அறிக்கையில்….

உதயா,
திரைப்பட நடிகர்

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல்வர்
உயர்திரு மு.க. ஸ்டாலின் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை.

பெருமதிப்பிற்குரிய ஐயா,

அன்பு வணக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் திரு விவேக் அவர்களின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சியில், அவரது கலை உலக மற்றும் சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக அவர் வாழ்ந்த சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அவரது நண்பனாகவும், சக நடிகராகவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தேன்.

உடனடியாக அதை தங்களின் மேலான கவனத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் அண்ணன் திரு பூச்சிமுருகன் அவர்கள் எடுத்துச் சென்ற நிலையில், நடிகர் திரு விவேக் அவர்களின் குடும்பத்தினரும் தங்களை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் கோரிக்கைகள் போன்ற எந்த ஒரு விஷயத்திலும் எள்ளளவும் தாமதமின்றி எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயலாற்றும் தாங்கள் இந்த கோரிக்கையையும் உடனடியாக பரிசீலித்து நடிகர் விவேக் அவர்கள் வாழ்ந்த சாலைக்கு அவரது பெயரைச் சூட்டும் அரசாணையை வெளியிட்டுள்ளீர்கள்.

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மாடர்ன் மனுநீதி சோழனாகவும், கலைஞர்களை கவுரவிப்பதில் அதியமானின் அப்டேடட் வெர்ஷனாகவும் உள்ளீர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

எங்களது கோரிக்கையை ஏற்று சின்னக் கலைவாணர் விவேக் சாலை குறித்த அரசாணைக்காக *தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

என்றும் தங்கள் உண்மையுள்ள,

உதயா
திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்

Tamil Govt GO passed In Chennai road named late Actor Vivek

உங்க வீட்ல குட்டீஸ் இருக்காங்களா.? அப்படின்னா ‘துணிகரம்’ பாருங்க..

உங்க வீட்ல குட்டீஸ் இருக்காங்களா.? அப்படின்னா ‘துணிகரம்’ பாருங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்ச் சினிமாவில் எத்தனையோ கடத்தல் கதைகள் கூறப்பட்டுள்ளன. சில கடத்தல் சம்பவங்கள் நெஞ்சை உலுக்கும். கடத்தல்காரர்களின் கொடூர செயல்கள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியுள்ளார் இயக்குனர் பாலசுதன்.

குழந்தைக் கடத்தல் பின்னால் உள்ள கடத்தல் கும்பல்களின் துணிகரமான செயல்களும் அவர்களின் நெட்வொர்க்கும் எப்படிப்பட்டது என்று பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

புதிதாக உருவாகியுள்ள ‘துணிகரம்’ படத்தில் குழந்தைக் கடத்தல் கும்பல்களைப் பற்றி விரிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒரு தம்பதி மிக மிக அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அந்த வாகனத்துக்குள் திடீரென்று ஒரு குழந்தைக் கடத்தல் கும்பல் ஏறிக் கொள்கிறது. அவர்கள் கண்ணெதிரே குழந்தை கடத்தப் பட்டு இருப்பதை அறிகிறார்கள். அவர்கள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியும் இருக்கிறது. அவர்கள் தாங்கள் புறப்பட்ட படி மருத்துவமனைக்குச் சென்றார்களா? கடத்தப்பட்ட குழந்தை மீட்புக்கு ஏதாவது உதவி செய்தார்களா? என்பதே படத்தின் கதை.

இப்படி ஒரு குழந்தையின் கடத்தலைச் சுற்றிப் பயணிக்கின்ற திரைக்கதையே முழுப் படமாகி உள்ளது.

இப்படத்தை “ஏ4 மீடியா ஒர்க்ஸ் ” சார்பில் டாக்டர். வீரபாண்டியன் மற்றும் டாக்டர் .டெய்சி வீரபாண்டியன் தயாரித்துள்ளனர்.

முழுக்க முழுக்க பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இது உருவாகி உள்ளது.

இயக்குநர் மிஷ்கினின் பாணியில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருப்பதாக திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இயக்குநர் பாலசுதன் கூறுகிறார்.

இப்படத்தின் கதையை டினோ எழுதியுள்ளார்.
படத்திற்கு ஒளிப்பதிவு- மெய்யேந்திரன் கெம்புராஜ், இசை – பி.ஷான் கோகுல்,
பாடல்கள் -கு. கார்த்திக், பி..ஷான் கோகுல்
,நடனம்- ராஜு , படத்தொகுப்பு – என். பிரகாஷ்.

“விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் துணிகரம் படத்தின் இரண்டாவது பாதியின் கதை முழுக்க ஒரு ஆம்புலன்சில் பயணிக்கிறது. விரைவாக ஓடும் ஆம்புலன்சுடன் கதையும் பரபரப்பாக ஓடுகிறது.

இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். இப்படம் குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் இளம் தம்பதியினருக்கும் மறக்க முடியாத படமாகவும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி ?அவர்களுக்கு எந்த வகையில் எல்லாம் ஆபத்துக்கள் வரும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய படமாகவும் இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் பாலசுதன்.

‘துணிகரம் ‘ திரைப்படத்தை மே 6ஆம் தேதி உலகெங்கும் ஆக்சன் – ரியாக்சன் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

The first Indian In Ambulance survival thriller Thunikaram

பிருந்தாவன மேடை… கவித்துமான செட்டப்.. மைக்கை வீசிய பார்த்திபன்… ‘இரவின் நிழல் விழா ஹைலைட்ஸ்

பிருந்தாவன மேடை… கவித்துமான செட்டப்.. மைக்கை வீசிய பார்த்திபன்… ‘இரவின் நிழல் விழா ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு தேசிய விருதை வென்ற படம் ‘ஒத்த செருப்பு’.

பார்த்திபனின் இந்த முயற்சிக்கு ’ஸ்பெஷல் ஜூரி’ தேசிய விருது, ரசூல் பூக்குட்டிக்கும் சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கவுள்ளதாக அறிவித்தப்படம் ‘இரவின் நிழல்’.

இந்த படம் நான் லீனியர் முறையில் ஒரே ஷாட்டில் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் பார்த்திபன் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் வரலட்சுமி, பிரிகிடா (பவி டீச்சர்) உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜீன் 5ஆம் தேதி மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று மே 1 உழைப்பாளர் தினத்தில் சென்னையில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக்கை திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் வெளியிட்டனர். இயக்குனர் கரு பழனியப்பன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் முன்னாள் நீதியரசர் சந்துரு, இயக்குநர்கள் சசி, எழில், சமுத்திரக்கனி, சுரேஷ் காமாட்சி, ஞானவேல் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்தினர்.

இந்த படத்தை ஏற்கெனவே பார்த்த பிரபலங்கள் பார்த்திபன் மற்றும் ஏஆர். ரஹ்மானை பாராட்டி பேசினர்.

மேடை அழகாக அலங்கரிப்பட்டு இருந்தது. அழகான பூங்கா போல சேர்கள் போடப்பட்டு இருந்தன. பாடல் ஒலிக்கும்போது கவித்துவமான அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.

ஆனால் ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறு டென்ஷனில் தான் வைத்திருந்த கைக்கை வீசி எறிந்தார் பார்த்திபன். இதனைப் பார்த்த ஏஆர். ரஹ்மான் கொஞ்சம் ஷாக்காகி போனார்.

‘இரவின் நிழல்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான மாயவா மாயவா என்று தொடங்கும் பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். அந்த பாடலை வெளியிட்டனர். த்வானி நிறுவனம் சார்பில் இப்பாடல் வெளியிடப்பட்டது.

இந்த பாடலில் பார்த்திபன் மற்றும் பிரிகிடா காதல் ஜோடிகளாக நடித்துள்ளனர்.

இந்த விழாவில் ரஹ்மானுக்கு அவரது தந்தை, தாய் உருவம் பதித்த நினைவுப் பரிசை பார்த்திபன் வழங்கினார்.

Parthibans Single shot movie Iravin Nizhal single track launch

‘தோட்டா’ ஆல்பம்…; ரீல்ஸ் ரசிகர்களுக்கு ரம்யா பாண்டியன் கோரிக்கை

‘தோட்டா’ ஆல்பம்…; ரீல்ஸ் ரசிகர்களுக்கு ரம்யா பாண்டியன் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NOISE and GRAINS வழங்கும், ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் “தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு !*

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது.

Noise and Grains தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் “கண்ணம்மா என்னம்மா” ஆல்பம் பாடலின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அந்நிறுவனம் தயாரித்திருக்கும் அடுத்த ஆல்பம் பாடல் “தோட்டா”. இப்பாடலை பிரேம்ஜி, நித்யஶ்ரீ பாடியுள்ளனர்.

இப்பாடலில் ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிக்க, தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார்.

நேற்று இப்பாடலின் வெளியீட்டு விழா, சின்னத்திரை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் படக்குழுவினருடன் பிக்பாஸ் புகழ் ராஜு, அபிராமி, ஜூலி, சக்ரவர்த்தி, கேப்ரியல்லா, உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இயக்குநர் பிரிட்டோ பேசியதாவது..*

கண்ணம்மா பாடல் ஹிட்டான பிறகு இந்த பாடல் செய்யலாம் என முடிவெடுத்த போது முதலில் ரியோ தான் செய்ய வேண்டும் என நினைத்தேன். அவரிடம் ரம்யா இந்த பாடலை செய்தால் நன்றாக இருக்குமென்று சொன்னேன். அவர் ஒப்புக்கொள்வார் என்றால் ஓகே என்றார்.

ரம்யா ஒப்புக்கொண்டு பணியாற்றி தந்ததற்கு நன்றி. என்னை நம்பி கடுமையாக உழைத்த என் குழுவினருக்கு நன்றி. இந்த பாடலை அட்டகாசமாக பாடி தந்த பிரேம் ஜி மற்றும் நித்யஶ்ரீ இருவரும்கும் நன்றி. இந்த பாடலையும் பெரிய அளவில் வெளியிடும் Noise & Grains அவர்களுக்கு நன்றி.

*நடிகர் பிக்பாஸ் பிரபலம் ராஜு பேசியதாவது…*

நானும் ரியோவும் வாய்ப்பு தேடிய காலத்திலிருந்தே மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர் எப்போதும் சின்ஸியராக இருப்பார். அவர் ரொம்பவும் திறமைசாலி. இந்த பாடலில் நடனம் அற்புதமாக இருந்தது. ரம்யாவின் ரசிகன் நான், அவருக்காகவே பலமுறை பாடல் பார்த்தேன்.

திரைப்பட பாடல் வெளியீட்டு விழா தான் இவ்வளவு பெரிதாக நடக்கும் இந்த பாடலுக்கு நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ரியோவுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

*நடிகர் ரியோ ராஜ் பேசியதாவது…*

கண்ணம்மா பாடல் ஒரு மொட்டை மாடியில் எதேச்சையாக உருவானது. அது மிகப்பெரிய ஹிட்டானது. இந்த பாடல் பற்றி Noise & Grains அவர்களிடம் தெரிவித்தவுடன் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கு தான் பெரிய நன்றி சொல்ல வேண்டும்.

மாதேஷ் மாணிக்கம் பெரிய பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்பவர் எங்கள் டீமில் அவர் மட்டும் தான் பெரிய ஆள், அவர் இந்த பாடலை செய்து தந்ததற்கு நன்றி. பிரிட்டோ மிக அற்புதமாக இயக்கியுள்ளார். அவர் இன்னும் பெரிதாக வளர்வார். பிக்பாஸில் சண்டை போட்டுக்கொண்டாலும் நானும் ரம்யாவும் நண்பர்கள் அவர் இதில் நடித்தது மகிழச்சி. எங்களை பாராட்ட வந்த அனைவருக்கும் நன்றி.

*நடிகை ரம்யா பாண்டியன் பேசியதாவது…*

நான் இதுவரை எந்த ஆல்பம் பாடலும் செய்ததில்லை. பிரிட்டோ சொன்ன ஐடியா பிடித்திருந்தது. உடனே ஒப்புக்கொண்டேன் இந்த டீம் ஜாலியான டீம். இப்பாடலில் வேலை பார்த்த அனுபவம் மிக சந்தோசமாக இருந்தது. இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ரீல்-ஸில் எங்கள் நடனத்தை ஆடி இப்பாடலை ஹிட் செய்யுங்கள் அனைவருக்கும் நன்றி

இயக்கம் – பிரிட்டோ JB
இசை – தேவ் பிரகாஷ்
பாடல்கள் – A S தாவூத்
பாடியவர்கள் – பிரேம் ஜி , நித்யஶ்ரீ
நடனம் – அபு & சால்ஸ்
ஒளிப்பதிவு – மாதேஷ் மாணிக்கம்
படத்தொகுப்பு – கிருஷ்ணா குமார் கிரியேட்டிவ் டைரக்டர் – கார்த்திக் ஶ்ரீனிவாஷ்
பிஸினஸ் டைரக்டர் – மஹாவீர் அசோக்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

Rio Raj and Ramya Pandiyan launch Album song Thotta

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை 4 மொழிகளில் சொல்லும் ‘விட்னஸ்’

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை 4 மொழிகளில் சொல்லும் ‘விட்னஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாம் கண்டும், காணாது, கடந்து போகும் தூய்மைப்ப ணியாளர்களின் வாழ்வை பேசுகிற படமாக வெளிவரவிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம்.

தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.“விட்னஸ்”

நகரத்தில் நடைபெறும் பல தினசரிக் குற்றங்களில் ஒன்று தான் இதுவும். இதற்கு முன் பலமுறை நடந்திருந்தாலும் ஒரு சிறிய அதிர்வைக் கூட இது ஏற்படுத்தியதில்லை.

ஆனால் இம்முறை, பல்வேறு காரணங்களால் இதை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக நடக்கும் விசாரணையில், பல கண்ணியமான மனிதர்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வருகிறது.

தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்த “விட்னஸ்” திரைப்படம், பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.

தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’, ஒரு அழுத்தமான, அதே சமயம் உணர்வுபூர்வமான திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது.

“தி பீப்பிள் மீடியா பேக்டரி” என்ற பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் டி.ஜி.விஷ்வபிரசாத். அவருடன் இணைந்து இதைத் தயாரித்திருப்பவர் விவேக் குச்சிபோட்லா.

இத்திரைப்படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பவர் தீபக். திரைக்கதை எழுதியவர்கள் முத்துவேல் மற்றும் ஜே.பி. சாணக்யா.

படத்தொகுப்பு செய்திருப்பவர் பிலோமின் ராஜ். இசையமைப்பு செய்திருப்பவர் இரமேஷ் தமிழ்மணி.

ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் இதில் நடித்துள்ளனர்.

தமிழில் நேரடியாக வெளியாகவிருக்கும் இத்திரைப்படம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் வெளியாகவிருக்கிறது ‘விட்னஸ்’.

Witness movie story based on Cleanliness workers

சனிக்கிழமைன்னாலே பார்ட்டிதான்…; சிவகார்த்திகேயன் தந்த பிரைவேட் பார்ட்டி

சனிக்கிழமைன்னாலே பார்ட்டிதான்…; சிவகார்த்திகேயன் தந்த பிரைவேட் பார்ட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் இணைந்துள்ள படம் ’டான்’.

இவர்களுடன் எஸ்ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரித்து உள்ளார். சிவகார்த்திகேயனும் கோ புரொடியூசராக இணைந்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.

இந்த படம் மே 13ஆம் தேதி வெளியாக உள்ளது.

எனவே இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே ஜலபுல ஜங், பே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் 3வது பாடலான பிரைவேட் பார்ட்டி பாடலை படக்குழுவினர் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி ’சனிக்கிழமை என்றாலே பார்ட்டிதான், எனவே சனிக்கிழமை டான்’ படத்தின் ’பிரைவேட் பார்ட்டி’ என்ற பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகும் என சிவகார்த்திகேயன் பதிவிட்டு இருந்தார்.

அதன்படி இன்று சற்றுமுன் அந்த பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடல் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Private party song from Sivakarthikeyan’s Don is released

More Articles
Follows