2021ல் கூட தியேட்டரை திறக்க தயார்.; தயாரிப்பாளர்கள் கெடுபிடியால் தியேட்டர்கள் அதிபர்கள் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த 7 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு கிடக்கின்றன.

தற்போது நவம்பர் 10ம் தேதி முதல் தியேட்டர்களை திறந்துகொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

எனவே திரையரங்குகளை திறக்க தியேட்டர் உரிமையாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில், VPF கட்டணங்களை எங்களால் செலுத்த இயலாது என்றும் அதனை திரையரங்கு உரிமையாளர்கள்தான் செலுத்த வேண்டும் என நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில்… “திரையரங்கு உரிமையாளர்களும் புரொஜெக்டர் நிறுவனங்களும் தொடர்ந்து VPF கட்டணங்களை வசூலித்து வருகிறார்கள்.

இனிமேல் எங்களால் அதனைச் செலுத்த இயலாது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும்வரை திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பாக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது..

இந்த பிரச்சினை இப்போது பேசப்பட வேண்டிய அவசியமில்லை.

நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளை மட்டும் நிரப்பி திரையரங்குகளை திறக்க முடிவு செய்துள்ள்ளோம்.

எங்கள் தரப்பில் நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தாலும் தொழில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம்.

தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து புது கோரிக்கைகளை வைக்கும்போது அதை ஏற்க முடியாது.

தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்தால் மேலும் 2 மாதங்களுக்கு (2020 டிசம்பர் வரை) திரையரங்குகளை மூடிவைப்பதால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை” என கூறியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன்.

Tamil film producers Vs theatre owners stalemate continous

எந்த நாட்டில் ஆதரவு இருக்கோ அங்கு ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும்..; என் கட்சி இல்லாத நாடே இல்லை.. – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன்… ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது. அவர் உடல் நலத்தை பார்க்கட்டும். அவரை கெஞ்சி கேட்கிறேன் என சீமான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நாள் பெரு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசினார். அப்போது…

”எந்த நாட்டில் ரஜினிக்கு ஆதரவு இருக்கிறதோ அங்கு சென்று கட்சி துவங்க சொல்லுங்கள்.

எனக்கும்தான் உலகம் முழுவதும் கட்சி உள்ளது. என் கட்சி இல்லாத நாடே இல்லை.”

இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Seeman talks about Rajini’s political entry

முருகா-ன்னு சொன்னா என் முகம்தான் மக்கள் நினைவுக்கு வரும்.. – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை போரூர் அருகே வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் உள்ளது.

அங்கு தமிழ்நாடு நாள் பெரு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசியபோது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது…

தைப்பூசத்திற்கும், தமிழ்நாடு உருவாகிய நாளைக்கும் தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்.

நாட்டில் இட ஒதுக்கீடு, நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே வேல் யாத்திரையை பாஜக கையில் எடுத்துள்ளது.

அயோத்தியில் ராமர் வைத்து அரசியல் செய்தனர். அது போல, கேரளாவில் ஐயப்பனை வைத்து அரசியல் செய்ய நினைத்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை.

வேலை வைத்து இவர்கள் நடத்தும் அரசியல் செல்லாது. முருகா என்றால் சீமான் முகம் தான் மக்களின் நினைவுக்கு வரும்.

வேல் யாத்திரையை நடத்த நாங்கள் விடமாட்டோம். அதற்கு தடை விதிக்க வேண்டும்.”

இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Seeman speech about lord Murugan

தொகுதி பணி உங்களுக்கு… கூட்டணி பணி எங்களுக்கு..; மநீம நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்தாண்டு 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

இதன்பின்னர் இன்று தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் கமலஹாசன்.

இன்று தொடங்கி 3 நாட்கள் எட்டு பகுதிகளாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாம்.

கோவை, மதுரை, கடலூர், நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 100 தொகுதி பொறுப்பாளர்களை கமலஹாசன் இன்று சந்தித்துள்ளார்.

அப்போது பேசிய கமல்ஹாசன்..

தேர்தல் கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.

நீங்கள் தேர்தல் பணி மற்றும் தொகுதி பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். உங்களுடைய பணி மிகவும் கடினமான பணி. அதைச் சிறப்பாக செய்யுங்கள்” என கட்டளை போட்டாராம்.

Kamal Haasan announced not alliance with Dravidan parties at today meeting

சிங்க பாதையா? பூ பாதையா? வேட்டையாட வா தலைவா… தமிழகத்தை அதிர வைக்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என 2017 டிசம்பர் 31ல் அறிவித்தார்.

ஆனால் அந்த அறிவிப்பு வந்து 3 ஆண்டுகளாகியும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை.

தற்போது கொரோனா ஊரடங்கு & தன் உடல்நிலை பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளால் கட்சி அறிவிப்பில் தாமதம் செய்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதனால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அவரின் ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

இதனையொட்டி ரஜினி விரைவில் அரசியலுக்கு வரவேண்டுமென ரசிகர்கள் தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

அந்த போஸ்டர்களில்…

அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்… இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல… ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குத்தான்.. சிங்க பாதையா? பூ பாதையா.? முடிவெடு தலைவா… என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

வேலூர் மாவட்ட பகுதிகளில்.. ”மக்களின் ரத்தத்தை குடிக்கும் ஓநாய் கூட்டத்தையும் கழுகு கூட்டத்தையும் வேட்டையாட சிங்கப்பாதையில்தான் செல்ல வேண்டும்”… ”மக்களாட்சி இனிதே ஆரம்பம்” என்றெல்லாம் ரஜினி படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

என்ன செய்ய போகிறார் தலைவர்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Rajini fans put up posters all over Tamil Nadu

அர்ச்சனாவை அடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சிங்கர் சுசித்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே நடிகை ரேகா வெளியேறினார்.

முன்னதாக வைல்ட் கார்டு எண்ட்ரியாக விஜே அர்ச்சனா அந்த வீட்டுக்குள் சென்றார்.

அவரைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பாடகி சுசித்ரா சென்றுள்ளார்.

இன்றைய நிகழ்ச்சியில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார். இதற்கான புரொமோ வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியவர் சுசித்ரா.

அவரின் வரவு அங்கு என்ன விளைவுகளை ஏற்படுத்த போகிறதோ? என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.

Singer suchitra makes her entry in Bigg Boss 4 Tamil

More Articles
Follows