தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்ற பிறகு திருட்டு விசிடி ஒழிப்பு, படங்கள் வெளியீடு தேதிக்கு குழு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்தார்.
ஆனால் கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றவில்லை என எதிர்தரப்பினர் கூறி வந்தனர்.
விஷாலின் நண்பர்கள் ஆர்.கே. சுரேஷ் & உதயா ஆகியோரும் விஷாலை குறை கூறி பதவி விலகினர்.
இந்நிலையில் ஜே.கே.ரித்திஷ், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட எதிர்தரப்பினர் சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில் இன்று (டிசம்பர் 19) தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு ஒன்றாகச் சென்று கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம் என்றனர்.
அதன்படி இன்று ஜே.கே.ரித்தீஷ் தலைமையில் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு சென்றனர்.
அங்கு சங்க துணைத் தலைவர் கதிரேசன் எதிரணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் இரு தரப்பிலும் சமரசம் ஏற்படவில்லை.
திடீரென விஷால் அறைக்கு பூட்டு போட்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
மேலும், சங்கத்திற்கும் பூட்டுப் போட்டனர்.
இதனையடுத்து சங்கத்தின் சாவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுக்க உள்ளதாக எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
இதனால் காலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.