எல்லாம் நிறுத்தனும்; சினிமா சம்பந்தப்பட்ட எதுவும் கூடாது…: விஷால்

எல்லாம் நிறுத்தனும்; சினிமா சம்பந்தப்பட்ட எதுவும் கூடாது…: விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil film Producers Council requested to stop everything related to Cinema

டிஜிட்டல் புரொஜக்டர் சம்பந்தப்பட்ட VPF கட்டணத்தை இனி தயாரிப்பாளர்கள் ஏற்க மாட்டோம் என தயாரிப்பாளர்கள் திடீரென அறிவித்தனர்.

புதிய தமிழ் சினிமா எதுவும் ரிலீஸ் ஆக கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக விஷால் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையொட்டி கடந்த 2 வாரங்களாக எந்த புது படமும் வெளியாகவில்லை.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள தியேட்டர்களும் காலவரையின்றி மூடப்பட உள்ளன.

மேலும் மார்ச் 16ஆம் தேதி உள்நாட்டில் நடைபெற்று வரும் எந்த படத்தின் சூட்டிங்கையும் நடத்தக்கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 23ஆம் தேதி முதல் வெளிநாட்டிலும் சூட்டிங் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

இவையில்லாமல் சினிமா சம்பந்தமான இசை வெளியீடு, டீசர் வெளியீடு போன்ற எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது.

புதிய படங்கள் சம்பந்தமாக எந்த ஒரு விளம்பரமும் பத்திரிகைகளுக்கு தரப்படாது எனவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால் கலந்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Tamil film Producers Council requested to stop everything related to Cinema

cinema strike

அஜித்துக்காக இரண்டு பாடல்களுடன் காத்திருக்கும் இமான்

அஜித்துக்காக இரண்டு பாடல்களுடன் காத்திருக்கும் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer Imman is ready with 2 songs for Ajith Viswasamஅஜித் நடிக்கும் பட சூட்டிங் ஆரம்பித்து விட்டால் படத்தலைப்பு என்ன? நாயகி யார்?, இசையமைப்பாளர் யார்? என்ற தகவல்கள் வெளியாக தாமதம் ஆகும்.

சூட்டிங் முடிவடையும் தருவாயில் கூட படத்தலைப்பு வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இந்த முறை படத்தின் சூட்டிங் ஆரம்பமாவதற்கு பல மாதங்களுக்கு முன் கிட்டதட்ட பாதி கலைஞர்களை அறிவித்துவிட்டனர்.

ஆனால் சூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. தற்போது ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் இன்னும் தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

சிவா இயக்கவுள்ள விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

சத்யஜோதி தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து இமான் கூறும்போது… இரண்டு பாடல்கள் தயார் செய்துவிட்டேன்.

விசுவாசம் படத்தின் முதற்கட்ட சூட்டிங் தொடங்கும்போதே இரண்டு பாடல்களையும் படமாக்கவுள்ளனர்” என தெரித்துள்ளார்.

சூட்டிங் எப்போ தல..?

Music Composer Imman is ready with 2 songs for Ajith Viswasam

பல விஷயங்களில் ரஜினி நழுவுகிறார்; நண்பரை கலாய்த்த கமல்!

பல விஷயங்களில் ரஜினி நழுவுகிறார்; நண்பரை கலாய்த்த கமல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini didnt give answer for many questions says Kamalகடந்த மாதம் பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற தன் அரசியல் கட்சியை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

அன்றுமுதல் தன் கட்சி தொடர்பான பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆலோசனை கூட்டங்களில் கலந்துக் கொண்டு வருகிறார்.

தற்போது கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்படுவதற்கு முன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்…

“குரங்கணி காட்டு தீ விபத்தை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இறந்தவர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால் எதிர்காலத்தின் ஒரு பகுதி தீக்கிரையாகி விட்டது” என்றார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை உள்ளிட்ட பல விஷயங்களில் பதில் சொல்லாமல் நழுவுகிறாரே என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு… ”பல விஷயங்களில் அவர் அப்படித்தான் பதில் சொல்லாமல் இருக்கிறார்” என்று பதிலளித்தார் கமல்.

Rajini didnt give answer for many questions says Kamal

முழுநேர அரசியல்வாதி ஆகல; ஆன்மிக பயணத்தில் அரசியல் கேள்விக்கு ரஜினி பதில்

முழுநேர அரசியல்வாதி ஆகல; ஆன்மிக பயணத்தில் அரசியல் கேள்விக்கு ரஜினி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Pilgrimage tour I wont talk about Politics I Pray for Amithab ji says Rajiniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.

இதனை அடுத்து தனது மன்றங்களில் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது… தலைவனுக்கான வெற்றிடம் உள்ளது. அதற்குதான் அரசியலுக்கு வருகிறேன். எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை கொடுப்பேன் என்று பேசினார்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன், தனது வழக்கமான ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.
ஹிமாச்சலில் அங்குள்ள பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று உத்தரகாண்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது…

“அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நான் தற்போது பதிலளிக்க விரும்பவில்லை.

கட்சி பெயரை அறிவிக்கவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை.

ஆன்மிகப் பயணமாக இமயமலை வந்துள்ளேன். இது அரசியல் பயணம் கிடையாது.

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிர் இழந்தவர்களுக்காக வருந்துகிறேன். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

In Pilgrimage tour I wont talk about Politics I Pray for Amithab ji says Rajini

rajini walk himalaya

லைகா தயாரிப்பில் இணைந்த சூர்யா-கேவி.ஆனந்த்-ஹாரிஸ்

லைகா தயாரிப்பில் இணைந்த சூர்யா-கேவி.ஆனந்த்-ஹாரிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya KV Anand Harris Jayaraj teams up for Lyca Productionசூர்யா நடித்த அயன் மற்றும் மாற்றான் ஆகிய படங்களை இயக்கியவர் கே. வி.ஆனந்த்.

இந்த இரு படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையைமத்திருந்தார்.

இப்போது இந்த மூவரும் ஒரு புதிய படத்திற்காக இணையவுள்ளனர்.

இப்படத்தை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது.

இப்படத்தின் வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதவிருக்கிறார்.

கேவ்மைக் யு ஆரி ஒளிப்பதிவு செய்த, கிரண் கலை பணிகளை கவனிக்கிறார்.

இது குறித்த தகவல்களை லைகா நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Suriya KV Anand Harris Jayaraj teams up for Lyca Production

தன் மகளுக்கு பர்கர்-பீட்சா கூட வாங்கி கொடுக்காத சிவகார்த்திகேயன்; ஏன்?

தன் மகளுக்கு பர்கர்-பீட்சா கூட வாங்கி கொடுக்காத சிவகார்த்திகேயன்; ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan wont buy Pizza for his daughter Aaradhanaதமிழக விவசாயிகள் பிரச்சினைக்காக நடிகர்கள் ஜிவி. பிரகாஷ், ஆரி, அபி சரவணன் ஆகியோர் தங்களால் இயன்ற வரை போராடி வருகின்றனர்.

அண்மையில் விவசாயிகள் சம்பந்தமாக ஒரு விழாவினை நடிகர் ஆரி நடத்தினார்.

அதில் கலந்துக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது…

“இங்கே விவசாயம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

எனவே எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

என் வீட்டில் கொய்யா, சப்போட்டா, வாழை போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன்.

வருங்காலத்தில் விவசாயம் செய்ய முற்படுவேன்.” என்று பேசினார்.

வேலைக்காரன் படத்தின் போது இனி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என பகிரங்கமாக தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உணவுகளை வாங்கி கொடுக்காதீர்கள் எனவும் கூறியிருந்தார்.

அதனை தன் வீட்டிலும் கடைப்பிடித்து வருகிறார்.

இதுவரை தனது மகள் ஆராதனாவுக்கு சிக்கன் பர்கர், பீட்சா போன்ற உணவுகளை அவர் வாங்கி கொடுத்தது இல்லையாம்.

Sivakarthikeyan wont buy Pizza for his daughter Aaradhana

More Articles
Follows