தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிஜிட்டல் திரையிடல் க்யூப்புக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால் கடந்த 3 வாரங்களாக தமிழகத்தில் எந்த ஒரு புதுப்படங்களும் வெளியாகவில்லை.
புதுப்படங்கள் வெளியாகாத காரணத்தால் தியேட்டர்களும் மூடும் சூழ்நிலையும் ஏற்பட்டது.
ஆனால் சென்னையில் மட்டும் பழைய ஹிட்டான படங்களை திரையிட்டு வந்தனர்.
இவையில்லாமல் எந்த தமிழ் பட சூட்டிங்கையும் நடத்த கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனால் ஒட்டுமொத்த திரையுலமே முடங்கியது.
தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா துறை சார்ந்த மற்ற துறையினரும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தனர்.
இன்று சற்று நேரத்திற்கு முன் தமிழக அமைச்சர்களை சினிமா பிரபலங்கள் சந்தித்துள்ளனர்.
அதன்படி நாளை மார்ச் 23முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்கும் என சென்னை தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ உத்தரவாதம் அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் என அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு எந்தெந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது என்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.
Tamil film industry strike over From 23rd March all theaters will be opened