தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை மரணமடைந்தார்.
எனவே, கலைஞருக்கு திரையுலகினர் சார்பில் வரும் 13-ஆம் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் கலை, இலக்கிய, திரைத்துறை பிதாமகனுமான கலைஞர் மு.கருணாநிதிக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது.
வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணாசாலை, காமராஜர் அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவை கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil film Industry decided to conduct homage event for Late Karunanidhi