தெய்வமே.. தலைவா.. ரசிகர்கள் கோஷம்..; ரஜினி-கமல் புத்தாண்டு வாழ்த்து

தெய்வமே.. தலைவா.. ரசிகர்கள் கோஷம்..; ரஜினி-கமல் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 2022 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் தங்கள் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் தன் ரசிகர்கள் வீட்டின் முன்பு கூடியதால் ரஜினிகாந்த் தன் வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.. ரஜினியை கண்ட ரசிகர்கள் தெய்வமே .. என்றும் தலைவா என்றும் கோஷம் எழுப்பி புத்தாண்டு வாழ்த்துக்கள் ‘தலைவா’ என ரசிகர்கள் வாழ்த்தினர்.

ரஜினி தனது ட்விட்டரில். “அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ” என பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன் அறிக்கையில்..

நம் குடும்பத்தார்க்கு, பிறக்கும் இந்தப் புதிய ஆண்டும் நாம் கை குலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறும் ஆண்டு மட்டும் அல்ல. கரம் கோத்துக் களமாட வேண்டிய ஆண்டு. கடந்த ஆண்டு நம் கட்சிக்கு வளரிளம் ஆண்டு. பயமறியா இளங்கன்றாய், கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் பார்லிமென்ட் தேர்தலில் தனித்துக் களம் கண்டு, நாம் வென்றிருப்பது, மூன்றாவது பெரிய கட்சி எனும் பெயர் மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கையையும் தான். வரும் ஆண்டு நமக்கும், தமிழகத்துக்கும் முக்கியமான ஆண்டு.

தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல நேர்மையான, அறிவார்ந்த தலைமை வேண்டும் என்ற நம் சிந்தனை, செயல் வடிவம் பெற வேண்டிய ஆண்டு. பார்லிமென்ட் தேர்தலில் செய்ததைவிடப் பல மடங்கு பணி நமக்குக் காத்திருக்கிறது.

இன்னும் ஓராண்டில் வரப்போகும் சட்டசபை தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி, தமிழகம் வளர்ச்சியை விரும்புகிறது என உலக அரங்கிற்கு நாம் விடுக்கப்போகும் அறை கூவல்.

நீங்கள், நான், நாம் அனைவரும் இணைந்து களம் கண்டால் தரணியில் தமிழகம் தழைத்தோங்கி, பாரதி கனவு கண்டது போல, வான் புகழ் கொண்ட தமிழகமாக மீண்டும் ஆக்கலாம்.

இன்று தொடங்குவது புத்தாண்டு மட்டுமல்ல. நம் வெற்றிப் பயணமும் தான். வெற்றிக்குத் தயாராகுங்கள். நாளை நமதே. அனைவருக்கும் நம் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

என கமல் பதிவிட்டுள்ளார்.

நடிகர்கள் விஜயகாந்த், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tamil Cinema Celebrities 2022 New Year wishes

நான்தான் அஜித்.. தல-ன்னு அழைக்காதீங்க.; நடிகரின் செயலுக்கு தலைவணங்கும் ராஜமௌலி

நான்தான் அஜித்.. தல-ன்னு அழைக்காதீங்க.; நடிகரின் செயலுக்கு தலைவணங்கும் ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு மேலும் மேலும் எதிர்பார்ப்பு உருவாகும் நிலையில் இப்படக்குழுவினர் புரோமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு டிவி நேர்காணலில் அஜித் குறித்து ராஜமௌலியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு ராஜமவுலி பதிலளித்தாவது…

“ஒருமுறை அஜித்தை ஹோட்டலில் சந்தித்தேன். என்னை பார்த்த அஜித், சாப்பிடுவதை விட்டுவிட்டு எழுந்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார்.

அப்போது என் மனைவியிடம் நான் அஜித் என்று அறிமுகம் செய்துக்கொண்டார். இந்த பழக்கம் எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்தில் தல என கூப்பிட்வேண்டாம், அஜித் அல்லது ஏகே என கூப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த விஷயத்திற்கு உண்மையாகவே தலை வணங்குகிறேன்” என பதிலளித்தார் ராஜமௌலி.

RRR director Rajamouli praises Ajith kumar

கரை வேஷ்டி அமைச்சரின் காதல் கதையை சொல்லும் திரைப்படம்

கரை வேஷ்டி அமைச்சரின் காதல் கதையை சொல்லும் திரைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் T.ஜெயலஷ்மி தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கும் புதிய திரைப்படம் “அமைச்சர்”.

கதைச்சுருக்கம் : கரை வேஷ்டி கட்டிய ஒரு அமைச்சரின் கறைபடாத ,கண்ணியமான காதல் கதை. போலீஸ் பயிற்சி முடித்த ஒரு இளைஞன் அதிர்ஷ்ட வசத்தால் உள்துறை அமைச்சராகிறார்.

தன் வசத்தில் உள்ள போலீஸ் இலாகாவை பயன்படுத்தி மூத்த குடிமக்களுக்கு நன்மையும், சமத்துவத்தை பற்றி பேசும் அமைச்சராக திகழும் இவர் வாழ்க்கையில் மலரும் கண்ணியமான காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே கதை.

கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் ,கதாநாயகியாக அட்சயா கண்டமுத்தன் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரமேற்று நடிக்கும் விஜயகுமார் ராமகிருஷ்ணா படத்திற்கு பிறகு ஜெய் ஆகாஷுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் தேவிகா, பிர்லாபோஸ், ஸ்ரேவன் இவர்களுடன் நகைச்சுவை நட்சத்திரங்களாக ‘கலக்க போவது யாரு’ மைக்கேல் அகஸ்டின், திவாகர் , ஈரோடு பிரபு’, விளையாட்டு வீரர் முனைவர் மா .ரா.சௌந்தராஜன்,A.P சேகர் ,திடியன் ஆகியோர் நடிக்கின்றனர் .

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் , திருத்தணி , சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது .

தேனிசை தென்றல் தேவா இசையமைப்பில் இனிய பாடல்கள் இடம்பெறுகிறது. மேலும் சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளும் இடம் பெறுகிறது .அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது..

தொழிட்நுட்ப கலைஞர்கள் :

இயக்கம் – ஜெய் ஆகாஷ்

திரைக்கதை, வசனம் – T.ஜெயலஷ்மி

இசை – தேனிசை தென்றல் தேவா

ஒளிப்பதிவு – வே .இ ராஜா

பாடல்கள் – சினேகன், மதன் கார்க்கி

எடிட்டர் – ஆண்டனி, ரியாஸ்

நடனம் – ஸ்ரீதர் ,தினா

ஸ்டண்ட் – விஜய்

கலை – பூபதி

மக்கள் தொடர்பு – செல்வரகு

Actor Jai Akash turns director with Amaichchar

மலையாளத்தில் ஹிட்டடித்த ரஜிஷாவின் ‘ஜூன்’ படம் தமிழ் & தெலுங்கில் தயாராகிறது

மலையாளத்தில் ஹிட்டடித்த ரஜிஷாவின் ‘ஜூன்’ படம் தமிழ் & தெலுங்கில் தயாராகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷுடன் ‘கர்ணன்’, சூர்யாவுடன் ‘ஜெய்பீம்’ ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிஷா விஜயன்.

தற்போது கார்த்திக்கு ஜோடியாக ‘சர்தார்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 2019ல் மலையாளத்தில் ரஜிஷா விஜயன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘ஜூன்’ என்கிற படம் தற்போது தமிழில் தயாராகி வருகிறது.

மலையாளத்தில் ஹிட்டான ஜோசப் படம் மூலம் புகழ்பெற்று தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்த ஜோஜு ஜார்ஜ் இந்தப்படத்தில் ரஜிஷா விஜயனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அஹமது கபீர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை நவீன் முத்துசாமி எழுதியுள்ளார்.

ஆன்ட் அண்ட் எலிபன்ட்ஸ் சினிமாஸ் (Ants to elephants cinemas) நிறுவனம் சார்பில் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.

சென்னை-28 படம் முதல் நட்பு கூட்டணியாக வலம்வரும் இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி மற்றும் எடிட்டர் பிரவீன் கே.எல் ஆகியோர் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் ஜன-1 புத்தாண்டு தினத்தன்று வெளியிடுகின்றனர்.

இந்தப்படம் பற்றி தயாரிப்பாளர் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் கூறும்போது, “மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான இந்தப்படம் நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும்..

பாடல்கள் அனைத்தும் அங்கே மிகப்பெரிய ஹிட்.. இங்கே தமிழில் பிரபல முன்னணி பாடகர்கள் இந்த பாடல்களை பாடியுள்ளனர். இந்த படம் இளைஞர்களை கவர்வது மட்டுமல்ல, குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய ஒரு ஃபீல் குட் படமாகவும் இருக்கும்.

குறிப்பாக மலையாளத்தில் எப்படி நிவின்பாலிக்கு ஒரு பிரேமம் படம் அமைந்ததோ அதேபோல ரஜிஷா விஜயனுக்கு இந்த படம் நிச்சயமாக அமையும்.

விரைவில் ரிலீசாகும் விதமாக இந்தப்படம் தயாராகி வருகிறது. தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் இந்தப்படம் வெளியாக உள்ளது” என்று கூறியுள்ளனர்.

Rajisha Vijayan’s June will release in Telugu and Tamil

கோர்ட்டில் விவாகரத்து வரிசை.; திருமண சர்ச்சையில் சிக்கிய அபிசரவணன் அடுத்தவர்களுக்கு அட்வைஸ்

கோர்ட்டில் விவாகரத்து வரிசை.; திருமண சர்ச்சையில் சிக்கிய அபிசரவணன் அடுத்தவர்களுக்கு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016-ல் வெளியான பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகன் நாயகியாக இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். தற்போது சரவணன் விஜய் விஷ்வா என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல அதிதி மேனன் தற்போது மிர்னா மேனன் என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.

பட்டதாரி படத்தில் நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்கிற தகவலும் வெளியானது. திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் அபி சரவணனுக்கும் தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்றும் ஆனால் போலியான சான்றிதழ்களை வைத்து தன்னை அவர் மிரட்டுகிறார் என்றும் காவல்துறையில் புகார் அளித்தார் மிர்னா மேனன்.
அபி சரவணனுக்கு முன்பே பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அந்த புகாரில் கூறியிருந்தார் மிர்னா மேனன்.

இதுகுறித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மிர்னா மேனன் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அபி சரவணன் கொடுத்த அந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்றத்திற்கு மனு செய்தார் மிர்னா மேனன். தற்போது டிசம்பர் 22 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ளது

இதுகுறித்து நடிகர் அபிசரவணன் இன்று மீடியாக்களை அழைத்து தனது இருப்பு குறித்த விபரங்களை தெரிவித்தார்.

“எனக்கும் மிர்னா மேனனுக்கும் 2016ல் பட்டதாரி படத்தில் நடிக்கும்போது அறிமுகம் ஏற்பட்டது. அப்போது எனது வீட்டிற்கு அழைத்துச்சென்று என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தினேன் அப்போது நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என் வீட்டிலும் கூறினார்கள்.

மிர்னா மேனனின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்ததால் அவர்களிடம் வீடியோ சேட்டிங்கில் அனுமதியும் வாழ்த்தும் பெற்று 2016 ஜூன் 9ஆம் தேதி மதுரையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.. அதன்பின் மதுரையிலும் அதைத் தொடர்ந்து சென்னை வந்த பின்பு தனியாக வீடு எடுத்து ஒரே வீட்டிலும் கடந்த மூன்று வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.

கடந்த 2018 நவம்பர் மாதம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக நான் சென்றிருந்த நிலையில், என்னை விட்டு மிர்னா மேனன் விலகி விட்டார். அதன் பின்னர் அது குறித்து விசாரிக்க சென்றபோதுதான், என் மீதும் நான் செய்துவரும் சமூக பணிகள் குறித்தும் அவதூறான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினார்

இரண்டு வருடத்திற்கு முன்பு பத்திரிகையாளர்களை நான் சந்தித்தபோது எனக்கும் எனது மனைவிக்குமான பிரச்சனையை சட்டபூர்வமாக அணுகி கொண்டிருக்கிறேன் என்றும் எங்கள் திருமணம் சட்டப்பூர்வமானதா இல்லையா என்பது பற்றி சட்டபூர்வமான விசாரணை போய்க்கொண்டிருக்கிறது என்பதால் .அதைப்பற்றி இப்போது பேச விரும்பவில்லை என்றும் கூறினேன் இப்போது அந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில் அது குறித்த விபரங்களை உங்களுக்கு தெரியப்படுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்..

அபி சரவணனுக்கும் எனக்கும் திருமணம் நடக்கவில்லை நாங்கள் இருவரும் நண்பர்களாகவே பழகி வந்தோம் ஆனால் அவர் போலியான திருமண சான்றிதழை காட்டி என்னை மிரட்டுகிறார் என்று என்னையும் சமூகம் சம்பந்தமான எனது பணிகளையும் கொச்சைப்படுத்தி, என்னை அளவுக்கதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார் மிர்னா மேனன்.

இந்த சமூகத்தில் எனக்கு இருந்த நற்பெயரை கெடுத்து விட்டார். அந்த நிலையில் அவர் என் மனைவிதான் என்பதற்கான ஆதாரங்களை குடும்பநல நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவர் மீது வழக்கு தொடர்ந்தேன்.

ஆனால் அதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் மிர்னா மேனன். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அதிதி மேனன் மீது நான் தாக்கல் செய்திருந்த வழக்கிற்கு முகாந்திரங்கள் இருக்கிறது என்றும் இந்த வழக்கை குடும்பநல நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டு மிர்னா மேனன் மனுவையும் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அந்த தீர்ப்பில் மிர்னா மேனனும் நானும் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்றும் இரண்டு மாதத்திற்குள் மிர்னா மேனன் அபி சரவணனுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்..

அபி சரவணனும் நானும் திருமணம் செய்யவில்லை என்று கூறியுள்ள மிர்னா மேனன் எதற்காக தன்னுடைய கடன் விண்ணப்ப பத்திரங்களில் தன்னுடைய கணவர் பெயர் அபி சரவணன் என்று குறிப்பிட்டுள்ளார்..

எனக்கு தமிழ் தெரியாததால் அபி சரவணன் பல டாக்குமெண்ட் களிலும் வெற்று பேப்பர்களிலும் கையெழுத்து பெற்றுக்கொண்டார் என்று மிர்னா மேனன் கூறியுள்ளது ஏற்புடையது அல்ல.. ஒரு பொறியியல் பட்டதாரியான அவர் இப்படி எந்த ஒரு டாக்குமெண்டையும் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

நாங்கள் ஒன்றாக கணவன் மனைவியாக வாழ்ந்ததை நேரடி சாட்சியாக கண்ட எனது பெற்றோர் மற்றும் தனது வீட்டில் வேலை பார்த்த நபர்கள் அனைவரும் அளித்த வாக்குமூலங்கள் உண்மைதான் என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் மிர்னா மேனனோ இந்த திருமணம் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களையும் தன் தரப்பு சாட்சிகள் எதையுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை

இப்படி சில காரணங்களை கூறி மிர்னா மேனன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன் எனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தீர்ப்பும் தற்போது கிடைத்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மிர்னா மேனன் என்னுடன் தான் வாழவேண்டும் என ஒருபோதும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.. ஆனால் அவருக்காக எப்போதும் நான் காத்திருப்பேன்.. ஏனென்றால் என் காதல் உண்மையானது.. உண்மையான என் காதலை புரிந்துகொண்டு அவர் மீண்டும் என்னிடம் திரும்பி வந்தால் என்னைவிட சந்தோஷப்படும் நபர் வேறு யாருமில்லை என்று கூறினார் அபி சரவணன்.

மேலும் அவர் கூறும்போது,…

இந்த வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட முப்பது முறை வாய்தாவுக்காக நீதிமன்றம் சென்று வந்துள்ளேன். அந்த சமயங்களில் எல்லாம் பல இளைஞர்கள், இளம் தம்பதியினர் கணவன்-மனைவியாக விவாகரத்திற்கு விண்ணப்பித்து அந்த வழக்கை சந்திப்பதற்காக வரிசையில் நிற்பதையும் பார்க்கும்போது மிகுந்த வருத்தத்திற்கு ஆளானேன்.. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணத்திற்கு பிறகும் அதே காதலை தொடர வேண்டும் என்பதுதான் நான் இப்போது சொல்ல விரும்பும் விஷயம்..

அதேபோல கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான பிரச்சனைகளை அவர்களை பேசி தீர்த்துக்கொண்டால் இது போன்ற வழக்குகளுக்கு வேலையே இருக்காது. சமூகத்தில் அவர்களது பெயருக்கும் களங்கம் ஏற்படாது. எனவே விவாகரத்து செய்ய நினைப்பதற்கு முன் கணவன் மனைவியர் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமல் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்வது தான் நல்லது என்றும் கூறியுள்ளார் அபி சரவணன்.

Abi saravanan marriage controversy continues

இளமை மாறாத ராஜா..; இளையராஜா பதிவிட்ட வீடியோ பாடலுக்கு கமல் கருத்து

இளமை மாறாத ராஜா..; இளையராஜா பதிவிட்ட வீடியோ பாடலுக்கு கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய இசை உலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இளையராஜா.

பல இந்திய மொழிகளில் 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.

அவர் ஆன்மிக பயணம் சென்றுள்ளார் என அவரது உதவியாளர் அறிவித்தார்.

இந்த நிலையில் புத்தாண்டு வாழ்த்து கூறுவது போல இளையராஜா பாட்டு பாடி வீடியோ பதிவிட்டுள்ளார்.

இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‛சகலகலா வல்லவன்’ படத்தில் இடம் பெற்ற

‛‛HAPPY NEW YEAR இளமை இதோ இதோ….” என்ற புத்தாண்டு வாழ்த்து பாடலை பாடியுள்ளார். இளமை இதோ, இனிமை என்று பாடி கடைசியில் ‛இதெப்படி இருக்கு’ என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வதந்திகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் இளையராஜா.

இந்த நிலையில் இளையராஜாவின் வீடியோவை டேக் செய்து கமல்ஹாசன் தன் ட்விட்டரில்….

இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன். இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.

அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன்.

மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year..

எனப் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

Kamal Haasan responds Ilayaraaja’s tweet

More Articles
Follows