ரஜினியா வெடிக்காத பட்டாசு..? சீமானுக்கு எஸ்வி சேகர் சூப்பர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆரம்பம் முதலே சீமான் எதிர்த்து வருகிறார்.

எந்த பேட்டி என்றாலும் அதில் ரஜினியை சாடி வருகிறார்.

அவர் அரசியலுக்கு வரவே கூடாது என்கிறாரோ தவிர அவருடன் மோதி பார்ப்போம் என்று கூறவில்லை.

அண்மையில் ‘ரஜினி மிகப்பெரிய பட்டாசாக இருந்தாலும் அது வெடிக்காமல் புஸ்ஸாகும் என்று கிண்டலாக சொல்லியிருந்தார்.

சீமானின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டரில் பக்கத்தல் கூறியுள்ளதாவது…

S.VE.SHEKHER‏ @SVESHEKHER
“ரஜினிகாந்த் வெடிக்காத தீபாவளி பட்டாசு ஆகிவிடுவார்” : சீமான். நமுத்துப்போன ஊசி பட்டாசின் அழுகை.

SVe shekar support Rajinikanth against Seeman statement

விவேகத்துடன் மோதும் தேசிய விருது இயக்குனரின் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விவேகம்.

இப்படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி நிச்சயம் வெளியாகிவிடும் என்ற நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், JSK பிலிம்ஸ் சார்பாக சதீஷ் தயாரித்துள்ள தரமணி படத்தையும் அன்றைய தினத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.

தங்க மீன்கள் படத்திற்காக தேசிய விருதை பெற்ற ராம் இயக்கியுள்ள படம் தரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடல் ஆகிய விருதுகளை தரமணி பெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நயன்தாரா; சம்பளம் எவ்வளவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தன் சினிமா பயணத்தில் 100 படங்களை கடந்துவிட்டார்.

இவரின் 102வது படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கவுள்ளார்.
இதில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடிக்க நயன்தாராவை அனுகியுள்ளனர்.

ஏற்கனவே ‘சிம்மா’, ‘ஸ்ரீராமராஜ்யம்’ படங்களில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த புதிய படத்தில் நடிக்க ரூ. 4 கோடியை சம்பளமாக கேட்டாராம் நயன்.

இதனை தயாரிப்பு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை சி.கல்யாண் தயாரிக்கிறார்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய ஆதவன் படத்தில் சூர்யா, நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்-சன் டிவி-முருகதாஸ் கூட்டணியின் இசையமைப்பாளர் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் என்பதை பார்த்தோம்.

எந்திரன் படத்திற்கு பிறகு இப்படத்தை நேரிடையாக தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

விஜய், முருகதாஸ் முதலில் இணைந்த துப்பாக்கி படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

அதன்பின்னர் அவர்கள் இணைந்த கத்தி படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த இரு படத்தின் பாடல்களும் ஹிட்டடித்தது.

எனவே, விஜய் 62 படத்திற்கு யார் இசையமைப்பார்? என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளதாம்.

ரஜினி படத்திற்கு 6 கோடி; சிரஞ்சீவி படத்திற்கு 9 கோடி; ஐஸ்வர்யாராய் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமணம், குழந்தை பிறப்பு என சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் ஐஸ்வர்யா ராய்.

பின்னர் ஜாஜ்பா, சரப்ஜித், ராவண் உள்ளிட்ட படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

ஷங்கர் இயக்கிய ரஜினியின் எந்திரன் படத்தில் நடித்த போது ரூ 6 கோடியை அவர் சம்பளமாக பெற்றார் என கூறப்பட்டது.

இந்நிலையில் ராம்சரண் தயாரிக்கவுள்ள சிரஞ்சீவியின் ’உய்யலவட நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடிக்க 9 கோடியை சம்பளமாக கேட்டுள்ளாராம்.

அதற்கு படக்குழுவும் சம்மதித்து அட்வான்ஸ் வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Aishwarya Rai Demands Rs 9 Cr for Chiranjeevi movie Uyyalawada Narasimha Reddy

‘அப்பா என்ன முடிவெடுத்தாலும் நாங்க இருப்போம்..’ சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்பதால் நிச்சயம் அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவார் என்றே தெரிகிறது.

இதுபற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் இயக்கியுள்ள விஐபி2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தன் அம்மா லதாவுடன் கலந்துக் கொண்டார் சௌந்தர்யா ரஜினி.

அப்போது ரஜினியின் அரசியல் வருகை பற்றி அவரிடம் கேட்டபோது…

‘அப்பா என்ன முடிவெடுத்தாலும் அவருடன் நாங்கள் இருப்போம்.

அரசியல் பற்றி அவர் என்ன சொல்ல நினைக்கிறாரோ, அதை அவர்தான் சொல்ல வேண்டும்.

அரசியல் உட்பட எல்லா விஷயங்களையும் நாங்கள் அப்பாவுடன் விவாதிப்போம்.

அவரது அரசியல் வருகை பற்றி நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது.’ என்றார் சௌந்தர்யா ரஜினி.

Soundarya Rajini talks about Rajinis Political entry

More Articles
Follows