சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை; பிரகாஷ்ராஜுக்கு எஸ்வி.சேகர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனை போல் பிரகாஷ்ராஜ் அவர்களும் அண்மைக்காலமாக அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

கர்நாடகாவில் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் தொடர்பாக தனது கண்டத்தை தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் மற்றொரு பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி தன்னை விட சிறந்த நடிகர் என பேசியிருந்தார்.

இதனையடுத்து ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகை பற்றி கேட்டபோது… நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு பேரழிவு என தன் கருத்தை பகிரங்கமாக வெளியிட்டார்.

இந்நிலையில் பிரகாஷ்ராஜிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்வி சேகர் தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜின் செய்தி வெளியான நாளிழை பதிவிட்டு அதற்கு சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SVe Shekar reaction to Prakashraj about political speech

மெர்சலை ஓட்டிய தியேட்டருக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பூர் முருங்கபாளையத்தில் சரண் சினிமா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரின் உரிமத்தை புதுப்பிக்குமாறு வருவாய்த்துறை சார்பில் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் உரிமத்தை அவர்கள் உரிய காலத்திற்குள் புதுப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திரைப்படம் திரையிடக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

எனவே அந்த சினிமா தியேட்டரில் படம் திரையிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதி இல்லாமலும், உரிமம் புதுப்பிக்கப்படாமலும் தியேட்டரில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரையிடப்பட்டது.

இதனை அறிந்த அதிகாரிகள் சரண் சினிமா தியேட்டருக்கு சென்று ‘சீல்’ வைத்தனர்.

இதையடுத்து தியேட்டர் மூடப்பட்டு சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

விஜய்யுடன் போட்டோ எடுத்தது குத்தமா? இப்படி பண்றாங்களே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள பலரும் ஆசைப்படுவது உண்டு.

அதுபோல் நடிகையும் பைக் ரேசருமான அலிஷா அப்துல்லா நடிகர் விஜய்யுடன் ஒரு போட்டோ எடுத்துள்ளார்.

அதை தன் வாட்ஸ்அப்பில் புரொபைல் பிக்சராக வைத்துள்ளார்.

அதை அவரது அனுமதியில்லாமல் எடுத்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது ஊரெல்லாம் பரவ, தற்போது அதற்கு தன் கண்டத்தை தெரிவித்துள்ளார் அலிஷா.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அலிஷா கோபத்துடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

It gets very annoying when you don’t have your privacy! People steal your display picture .. why? For what ? Without your knowledge

— Alisha abdullah (@alishaabdullah)

விவேகம் நஷ்டத்தை ஈடுகட்ட சம்பளத்தை குறைத்த அஜித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீரம் மற்றும் வேதாளம் படங்களின் வெற்றியால் தனது அடுத்த படமான விவேகம் படத்தையும் சிவாவே இயக்க வாய்ப்பு கொடுத்தார் அஜித்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.

ஆனால் இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தது.

இதனால் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிவா மற்றும் அஜித் கூட்டணி 4வது முறையாக புதிய படத்திற்காக இணையவுள்ளனர்.

இப்படத்தையும் சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கும் என கூறப்படுகிறது.

எனவே விவேகம் ஏற்படுத்திய நஷ்டத்தை இப்படத்தின் சம்பளத்தில் குறைத்து அதை ஈடுகட்ட அஜித் சம்மதம் தெரிவித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

நகுல் நடிக்கும் செய் படத்தில் பாகிஸ்தான் பாடகர் அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்ற சூஃபி பாடலை பாடியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி.

ஏற்கெனவே பல பாகிஸ்தானி பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் ஆதிஃப் அலி பாடியிருக்கிறார் என்பதோடு, ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஜூலி 2’ படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழில் பாடுவது இதுவே முதல்முறை என்பதை அறிந்த ஆதிஃப் அலி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகரான சபதஸ்வரா ரிஷுவும் ‘இறைவா….’ பாடலை பாடியுள்ளார்.

கேட்டவுடன் அனைவருக்கும் பிடித்துப்போகும் பாடலாகவும், நீண்ட நாட்கள் ஒலிக்கும் பாடலாகவும் இந்த சூஃபி பாடல் இருக்குமென தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிக்ஸ் லோபஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.

மேலும் ‘செய்’ ஆல்பத்தில் பிரபல முன்னணி பாடகர்களான ஷங்கர் மகாதேவன், சோனு நிகம், ஷ்ரேயா கோஷல், பென்னிதயாள் மற்றும் அறிமுக பாடகி கீதாஞ்சலி ஆகியோர் பாடியிருக்கும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

‘ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை மன்னு மற்றும் உமேஷ் இணைந்து தயாரித்துள்ளார்கள். டிசம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது.

Pakistan play back singer introducing in Sei movie

2.0 பட டீசர்-டிரைலர் தாமதம்; குழப்பத்தில் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி-ஷங்கர் இணைந்துள்ள 2.0 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் 2 பாடல்கள் வெளியாகியுள்ளது.

மீதமுள்ள ஒரு பாடலை விரைவில் வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து நவம்பர் 22ம் தேதி ஹைதராபாத்தில் டீஸர் ரிலீஸ் மற்றும் டிசம்பர் 12ம் தேதி சென்னையில் டிரைலர் வெளியீடு என கூறப்பட்டது.

இந்நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் ஆகிவருவதால், இதன் டீசர் மற்றும் டிரைலர் வெளியீடும் தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

Rajini fans in confusion with release date of 2point0 teaser and trailer

More Articles
Follows