மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் பெயரில் சாலை & ரவுண்டானா

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் பெயரில் சாலை & ரவுண்டானா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sushant singh rajputகிரிக்கெட் வீர்ர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாக வாழ்ந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

35 வயதான இவர் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட் வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து தற்கொலைக்கான உண்மை காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது இந்தியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பீகாரில் அமைந்துள்ள சுஷாந்தின் சொந்த ஊரான புர்னியாவில் இருக்கும் ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங்கின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

மேலும் அங்கு அமைந்துள்ள போர்டு நிறுவனத்தின் ரவுண்டானாவிற்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் ரவுண்டானா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

பெயர் மாற்றப்பட்ட சாலையை அந்த பகுதி மக்கள் திறந்து வைத்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

சத்யா பட கமல்ஹாசன் கெட்அப் ஏன்..? விஜய்சேதுபதி விளக்கம்

சத்யா பட கமல்ஹாசன் கெட்அப் ஏன்..? விஜய்சேதுபதி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi reveals about Sathya Kamal get up stills சினிமாவில் தான் நடிக்கும் கேரக்டருக்காக தன்னையே மாற்றி கொள்ளும் திறமையான நடிகர்கள் ஒரு சிலரே உள்ளனர்.

அதில் குறிப்பிடும் படியாக வளர்ந்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி.

தனக்கென எந்த ஹீரோ இமேஜ்ஜீம் வைத்துக் கொள்ளாமல் வில்லன், கெஸ்ட் ரோல் என எந்த கேரக்டர் என்றாலும் பின்னியெடுக்கிறார்.

கடந்த மாதத்தில் சத்யா பட கமல்ஹாசன் கெட்டப்பில் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

எனவே கமலின் சத்யா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவியது.

இதுகுறித்து தன் சமீபத்திய பேட்டியில் விளக்கமளித்துள்ளார் விஜய் சேதுபதி.

அதில்… “தென்மேற்கு பருவக்காற்று கிளைமேக்ஸ் காட்சிக்காக மொட்டை அடித்தேன். அதன் பிறகு மணிகண்டன் இயக்கும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது.

எனவே அந்த படத்திற்கான போட்டோஷூட் நடைபெற்றது. அப்போது கொஞ்சம் முடி வளர்ந்திருந்தது.

அப்போது எடுத்த படங்களை சமீபத்தில் நானும் சில நண்பர்களுக்கு அனுப்பினேன். அது சமூகவலைதளங்களில் பரவிவிட்டது” என தெரிவித்துள்ளார் மக்கள் செல்வன்.

Vijay Sethupathi reveals about Sathya Kamal get up stills

கணவர் இப்படி இருக்கனும்..; ரகுல் ப்ரீத் சிங்கின் ‘அடேங்கப்பா’ கன்டிசன்ஸ்

கணவர் இப்படி இருக்கனும்..; ரகுல் ப்ரீத் சிங்கின் ‘அடேங்கப்பா’ கன்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rakul Preet Singh talks about her expectations தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் தன் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

“திருமணம், காதல் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவை மிக அழகானவை. ஒருவரைக் காதலிக்கும் போது முழு மனதுடன் காதலியுங்கள்.

“எனக்கானவர் உயரமாக இருக்க வேண்டும். நான் ஹீல்ஸ் அணிந்திருந்தாலும் அவரை அண்ணாந்து தான் பார்க்க வேண்டும். புத்திசாலித்தனம் உடையவராகவும், வாழ்க்கையில் லட்சியம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Rakul Preet Singh talks about her expectations

சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் மில்டன்.; சூர்யா வாழ்த்து

சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் மில்டன்.; சூர்யா வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Milton joins Kannada Superstar Sivarajkumarசமூகத்தில் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களை மையமாக்கி எடுத்து வெற்றி பெற்ற படம் ‘கோலி சோடா’.

ஒரு சாதாரண மனிதன் எடுக்கும் விஸ்வரூபத்தை கதையாகக் கொண்ட படம் ‘கடுகு’.

இப்படங்களை விஜய் மில்டன் இயக்கி இருந்தார். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் இப்படங்கள் பேசப்பட்டன.

அக்கதைகளின் ஆழத்தை அறிந்த பலரும் பாராட்டினார்கள்.

தமிழில் தனக்கான ஓர் அடையாளத்தைப் பெற்றுள்ள விஜய்மில்டன் இப்போது கன்னடத் திரை உலகத்திற்குள் நுழைகிறார்.

இவர் இயக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் சிவராஜ்குமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “டகரு” ( Tagaru ) . இதில் வில்லனாக நடித்து மக்களிடம் பரபரப்பாக பேசபட்டவர் டாலி தனஞ்ஜெயா. இந்த இருவரும் மீண்டும் சேர்ந்து எப்பொழுது நடிப்பார்கள் என்ற எதிபார்ப்பு மக்களிடம் அதிகமாக இருந்தது.

அதனால், இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க பல பேர் முயர்ச்சித்தார்கள். டைரக்டர் விஜய்மில்டன் சொன்ன கதை பிடித்து போக மீண்டும் சிவராஜ்குமார் – டாலி தனஞ்ஜெயா ( dolly dhananjeya ) இப்படம் மூலம் ஒன்றாக இணைகிறார்கள். இதை கேள்விபட்ட கன்னட திரை உலகில் இப்போதே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இப்படத்தைத் தமிழில் ‘கோலிசோடா’ , கடுகு’ போன்ற படங்களைத் டைரக்ட் செய்த விஜய்மில்டனின் – ரஃப் நோட் (rough note ) தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த நிறுவனம் முதன் முறையாக கன்னடத்தில் , கிருஷ்ண சர்தக்கின் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி. விஜய்மில்டன். இசை ஜெ.அனூப் சீலின்.

இதன் அறிவிப்பை, சிவராஜ்குமார் பிறந்த நாளான இன்று ஜூலை 12 நடிகர் சூர்யா வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

Vijay Milton joins Kannada Superstar Sivarajkumar

மனைவியின் முன்னாள் காதலன்.; பெப்சி சிவா வெளியிட்ட ‘கள்ளக்காதல்’

மனைவியின் முன்னாள் காதலன்.; பெப்சி சிவா வெளியிட்ட ‘கள்ளக்காதல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FEFSI launches Article 497 Kalla Kaadhal Short film“கள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை” என்ற செய்திகள் எல்லாம் தற்போது மிகச்சாதரணமாக நம்மைக் கடந்து செல்கிறது.

ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியான மனநிலைக்கு இச்சமூகத்தின் கலாச்சார மீறல் நம்மை தள்ளிவிட்டது.

அது ஆபத்தானது என்பதை அறிவுறுத்த வந்திருக்கும் ஒரு நேர்த்தியான குறும்படம் தான் “ஆர்டிகள் 497 கள்ளக்காதல்”

நெக்ஸ்ட் லெவல் புரொடக்சன் தயாரித்துள்ள இப்படத்தை சிலம்புச் செல்வன் எழுதி இயக்கி இருக்கிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் மிகச்சிறப்பாக உருவாகியுள்ள தமிழரசன் படத்தைத் தயாரித்துள்ள பெப்சி சிவா தனது tamizh media yutube சேனலில் இக்குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.

இளைய தலைமுறையில் சமுதாய சிந்தனையுள்ள படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக தயாரிப்பாளர் பெப்சி சிவா இப்படியான குறும்படங்களை வெளியிடுகிறார்.

இது நிச்சயமாக வளரும் இளம் படைப்பாளிகளுக்கு பெரும் உந்துதலாக இருக்கும்

ஒரு போலீஸ் விசாரணையோடு துவங்கும் படம் பல்வேறு திருப்பங்களோடு பயணிக்கிறது.

கள்ளக்காதலில் ஆண்/பெண் இருபாலருமே தவறுகள் செய்வதை சுட்டிக்காட்டும் இக்குறும்படம் பெண்களுக்கான பாதிப்பு அதிகம் என்பது போலவே ஆண்களுக்கான பாதிப்பும் அதிகம் என்பதைப் பேசுகிறது. பெண்களுக்கு அதிக சலுகைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெண்களுக்கு பொறுப்பும் மிக அவசியம் என்பதை படம் பேசியுள்ளது.

படத்தில் வயதான பின் திருமணம் ஆகி மனைவியின் பழைய காதலனால் ஏற்படும் இயலாமையைச் சுமக்கும் பாத்திரத்தில் நாயகன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவர் படத்தின் இறுதியில் தனக்குள் இருக்கும் மனிதத்தன்மையை வெளிப்படுத்தும் போது கவர்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசை எல்லாம் குறும்படம் என்பதைத் தாண்டி ஒரு பெரும்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

வசனங்களிலும் காட்சியமைப்பிலும் நன்றாக கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் சிலம்புச் செல்வன். நேற்று யூட்யூபில் வெளியான இக்குறும்படம் 20 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து பாசிட்டிவான பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சரியான நேரத்தில் வெளியாகியுள்ள தரமான படம் இது.

மேலும் இந்த “ஆர்ட்டிகள் 497 கள்ளக்காதல்” என்ற குறும்படம் பேசும் அறம் சார்ந்த விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்திற்கு நிகராக இப்படத்திற்கான விளம்பரங்களைச் செய்துள்ளார் பெப்சி சிவா.

பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையான போஸ்டர் டிசைனிங், பெரிய பத்திரிகைகளில் விளம்பரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட நிறைய மாவட்டங்களில் படத்தின் போஸ்டர்கள் என இக்குறும்படத்தைப் பெரிதாக ரீச் செய்துள்ளார் பெப்சி சிவா

FEFSI launches Article 497 Kalla Kaadhal Short film

அமிதாப் & அபிஷேக்பச்சனுக்கு கொரோனா; அப்போ ஐஸ்வர்யா ராய் ரிசல்ட்?

அமிதாப் & அபிஷேக்பச்சனுக்கு கொரோனா; அப்போ ஐஸ்வர்யா ராய் ரிசல்ட்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amitabh Abhishek found Covid 19 positive Aishwarya result negativeபாலிவுட்டின் BIG B என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப்பச்சன்.

இவர் சற்றுமுன் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியளவில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் மும்பையும் முக்கியமானது.

அங்கு இதுவரை 91,745 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,244 பேர் வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அவரே ட்விட்டரில் தெரிவித்து அதற்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார்.

அதாவது… தனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதன் ரிசல்ட் பாசிட்டிவ் என வந்திருப்பதாக அவரே பதிவிட்டுள்ளார்.

அவரது ட்வீட்டில், “எனக்கு கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த 10 நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து சில மணி நேரங்களில் அமிதாப்பின் மகனும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான நடிகர் அபிசேக்பச்சனும் தனக்கு கொரோனா தொற்று ரிசல்ட் பாசிட்டிவ் என வந்துள்ளதாக அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனால் இவர்களது குடும்பம் தனிமைப்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.

இதனிடையில் அபிசேக்பச்சனின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. அதாவது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

அதே போல் ஐஸ்வர்யா ராயின் மகளுக்கும் கொரோனா தொற்று இல்லை. அதுபோல் அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சனுக்கும் ரிசல்ட் நெகட்டிவ் என உறுதியாகியுள்ளது.

Amitabh Abhishek found Covid 19 positive Aishwarya Jaya result negative

More Articles
Follows