தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கி, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் 2017 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.
இதே நாளில் கௌதம்கார்த்திக் நடித்துள்ள ஹர ஹர மகாதேவகி படமும் வெளியாகும் என அறித்துள்ளனர்.
இந்தப் போட்டியில் தற்போது சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும் இணைந்துள்ளது.
இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா ஆகியோர் நடிக்க இமான் இசையமைத்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியள்ள இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ளார்.
இதன் ரிலீஸ் குறித்து சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எங்களுடைய இத்திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். நாங்கள் மெர்சலை எதிர்த்து வரவில்லை.
‘மெர்சல்’ உடன் வருகிறோம். 2013-ம் ஆண்டு ‘பாண்டியநாடு’ திரைப்படத்தை அஜித் சார் படமான ‘ஆரம்பம்’ படத்தோடு வெளியிட்டோம். ‘ஆரம்பம்’ படமும் வெற்றி பெற்றது. எங்கள் படமும் வெற்றி பெற்றது.
என்று தான் எழுதிய கடிதத்தை பதிவிட்டுள்ளார்.