தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த படம் ஜெய்பீம்.
இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்.
ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் புகழ்ந்து வருகின்றனர். இப்படியொரு படத்தை சமீபத்தில் நாங்கள் பார்க்கவில்லை எனவும் தங்கள் பாராட்டினை பக்க பக்கமாக எழுதி வருகின்றனர்.
பிரபலங்களாலும் மக்களாலும் இந்த படம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் சில காட்சிகளில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்துவிட்டதாக கூறி சம்பந்தப்பட்ட பிரிவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பாமக கட்சியினர் சூர்யாவுக்கு எதிராக புகார்களையும் குற்றச்சாட்டுக்களையும் தினம் தினம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தான் சூர்யாவுக்கு ஆதரவாக ஒரு சில பிரபலங்கள் குரல் கொடுத்த தொடங்கியுள்ளனர்.
இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர், அமீர், நடிகர் சத்யராஜ், உள்ளிட்டோர் ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”அன்புள்ள அனைவருக்கும், ‘ஜெய் பீம்’ படத்துக்குக் கிடைத்துள்ள இந்த அன்பு திக்குமுக்காடச் செய்கிறது. இதை நான் இதற்கு முன்பு கண்டதில்லை. நீங்கள் எங்களுக்குக் கொடுத்த இந்த நம்பிக்கைக்கும், உத்வேகத்துக்கும் நான் எவ்வளவு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. எங்களோடு நின்ற அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்”.
எனத் தெரிவித்துள்ளார் சூர்யா.
Surya thanks fans ‘for standing by us’ amid police protection at his Chennai house