தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அரசியல் வருவது உறுதி. ஆனால், கட்சியை இப்போது அறிவிக்க மாட்டேன் என ஆணித்தரமாக சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்.
அண்மையில் நடந்த காலா இசை வெளியீட்டில் கூட அரசியல் அறிவிப்பு இருக்கும் என பலர் எதிர்பார்த்தனர்.
ஆனால், நல்ல நேரம் வரும் போது சொல்வேன் என பேசினார்.
இது ஒரு புறமிருந்தாலும், ரஜினியின் அரசியல் பல பேருக்கு அடிவயிற்றை கலக்கி வருகிறதாம்.
சில தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு ரஜினி சென்றிருந்தார்.
அப்போது 234 சட்டசபை தொகுதிகளிலும், ரஜினிக்கு செல்வாக்கு எப்படி உள்ளது? என்ற, ‘சர்வே’ உளவுத்துறை தரப்பில் எடுக்கப்பட்டதாம்.
அதில், 150 தொகுதிகளில், ரஜினிக்கு கணிசமான ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதாவது, தலித் சமுதாய ஓட்டுகள் 15%; மொழி வாரியாக உள்ள சிறுபான்மையினர் ஓட்டுக்கள் 8%; மற்ற சமுதாய ஓட்டுகள் 15% அவருக்கு கிடைக்குமாம்.
அதாவது, 35 முதல், 40 சதவீத ஓட்டுக்கள், ரஜினி கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது அந்த சர்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசியலை எதிர்க்கும் அரசியல்வாதிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்களாம்.
முக்கியமாக இந்த சர்வே ஆளுங்கட்சிக்கு இது பேரதிர்ச்சியாம்.
எனவே ரஜினியை விமர்சிக்க கட்சியினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
அதன்படிதான் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ‘ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது, காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்’ என, கிண்டலாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
அவரின் அந்த பேச்சுக்கு ஒரு சமுதாயத்தினரின் எதிர்ப்பு தெரிவிக்க அதன் பின்னர் அவர் மனோரமா ஆச்சி பற்றிதான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார்.
இனி இதுபோன்ற கடும் விமர்சனங்களை ரஜினி சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.
Survey Report Rajinis political party will win in 150 constituency in TN election