ரசிகையின் மரணத்தால் மனமுடைந்த நடிகர் சூர்யா

ரசிகையின் மரணத்தால் மனமுடைந்த நடிகர் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது.

கடந்த மே 6-ஆம் தேதி மாலை இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது.

வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த ஐஸ்வர்யா உயிரிழந்தார்.

இவர் ஐதராபாத் உள்ள சரூர் நகரை சேர்ந்த மாவட்ட நீதிபதி தட்டிகொண்டா நர்சிரெட்டியின் மகள் ஆவார்.

ஐஸ்வர்யாவின் மரணம் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஐ.டி. நிறுவனத்தின் மேலாளர் ஐஸ்வர்யா நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை ஆவார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் ஐஸ்வர்யாவின் புகைப்படம் ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், ஐஸ்வர்யாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கடிதம் எழுதி அனுப்பியதுடன், தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Suriya’s heartfelt condolences to his diehard fan

என்டிஆர் பிறந்தநாளில் ‘DEVARA’ பர்ஸ்ட் லுக்.; ஜான்வீ கபூர் & சயிஃப் அலிகானுடன் கூட்டணி

என்டிஆர் பிறந்தநாளில் ‘DEVARA’ பர்ஸ்ட் லுக்.; ஜான்வீ கபூர் & சயிஃப் அலிகானுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘என்டிஆர்30’ என்று பெயரிடப்பட்டது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கின.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமவுலி, க்ளாப்போர்ட் அடித்து படத்தின் பணிகளை தொடங்கி வைத்தார்.

ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான இன்று மே 19ம் தேதியன்று இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியாகியுள்ளது.

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்திற்கு ‘தேவரா’ (Devara) என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், ‘தேவரா’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘DEVARA’ first look on NTR’s birthday; Teaming up with Janhvi Kapoor & Saif Ali Khan

ரஜினி – ஸ்ரீதேவியின் ரீல் அம்மா நடிகை வசந்தா காலமானார்

ரஜினி – ஸ்ரீதேவியின் ரீல் அம்மா நடிகை வசந்தா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜா பாகவதர் அவர்களது நாடக குழுவில் இடம் பெற்ற பழம் பெரும் நடிகை V.வசந்தா.

இன்று மாலை 3.40 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். 82 வயதான இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

நாடகத்திலிருந்து திரையுலகில் நுழைந்த இவர், ‘இரவும் பகலும்’ படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாகவும் , ‘கார்த்திகை தீபம்’ படத்தில் அசோகனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

மேலும் ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாக, ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிகாந்த்தின் அம்மாவாக நடித்துள்ளார்.

மேலும் மூன்று முகம் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

திரை உலகை சேர்ந்தவர்களும் நடிகர் சங்க நிர்வாகிகளும் இவரது மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாளை (மே-20) பிற்பகல் 1:30 மணி அளவில் இவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது.

*முகவரி*
Gugan, 6383 362 323
18A/15, V.D.Loganathan street
West k k nagar
Chennai -78

Senior Actress Vasantha passes away

மரியாதைக்குரிய கபில்தேவ் உடன் நடிப்பது கௌரவம்.; ரஜினி் நெகிழ்ச்சி

மரியாதைக்குரிய கபில்தேவ் உடன் நடிப்பது கௌரவம்.; ரஜினி் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் படம் ‘லால் சலாம்’.

இதில் விஷ்ணு விஷால் & விக்ராந்த் கதை நயாகர்களாக நடிக்க ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இவரின் தங்கையாக முன்னாள் நடிகை ஜீவிதா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவலை பார்த்தோம்.

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த முன்னாள் கிரிக்கெட் வீர கபில்தேவ் உடன் இணைந்து நடிப்பது குறித்து நடிகர் ரஜினி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

“முதன்முறையாக உலகக் கோப்பை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய மரியாதைக்குரிய, அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகவும், கவுரவுமாகவும் கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

It is my honour and privilege working with the Legendary, most respected and wonderful human being Kapildevji., who made India proud winning for the first time ever..Cricket World Cup!!!
#lalsalaam
#therealkapildev

I feel proud to work with Kapil Dev says Rajinikanth

சிம்புவே ரூட்டை மாத்திட்டாரூ.. ஹிப் ஹாப் ஆதி வந்துட்டாரூ.; ஒர்க் அவுட் ஆகுமா.?

சிம்புவே ரூட்டை மாத்திட்டாரூ.. ஹிப் ஹாப் ஆதி வந்துட்டாரூ.; ஒர்க் அவுட் ஆகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் படம் ‘வீரன்’.

மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த மின்னல் முரளி பட பாணியில் மின்னல் சார்ந்த சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இதில் ஆதி, ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தீபக் டி மேனன் ஒளிப்பதிவில் ஜி.கே. பிரசன்னா, படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் ‘வீரன்’ படத்தை வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்து தயாரித்துள்ளனர்.

பிரபல சக்தி ஃபிலிம் பேக்டரி தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு உரிமையை பெற்றுள்ளது

இந்த ‘வீரன்’ படம் ஜூன் 2, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் நாளை மே 20 ஆம் தேதி சென்னையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் சிம்புவின் விரல் வித்தை பாணியில் நடிகர் ஆதியும் விரல் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது சிம்புவே அவரது ஸ்டைலை மாற்றி உள்ள போது சிம்பு ஸ்டைலுக்கு ஆதி வந்துள்ளார். இது ஒர்க் அவுட் ஆகுமா.? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Be there to Witness the GRAND TRAILER launch of Namma Tamil Super Hero #Veeran at EXPRESS AVENUE MALL ( chennai ),
6PM onwards with @hiphoptamizha & Veeran team ⚡🎉🥁

#VeeranTrailerTomorrow

@ArkSaravan_Dir @VinayRai1809 @saregamasouth @SakthiFilmFctry @SathyaJyothi https://t.co/FglUeJEYk7

Hip hop aadhi follows simbu way. Will it work?

சாப்ட்வேர் இன்ஜினியரை மணக்கும் நடிகர் சர்வானந்த்.; வதந்திக்கு முற்றுப்புள்ளி.!

சாப்ட்வேர் இன்ஜினியரை மணக்கும் நடிகர் சர்வானந்த்.; வதந்திக்கு முற்றுப்புள்ளி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2004ம் ஆண்டு ‘இடவா தரீக்கு’ படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகர் சர்வானந்த்.

நடிகர் சர்வானந்த் தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’, ‘நாளை நமதே’, ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வந்தார்.

சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிச்சயதார்த்தம் சில காரணங்களால் நின்று போனதாக தெலுங்கு இணைய தளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் பரவி வந்தது.

இதனை சர்வானந்த் குடும்ப நண்பர் ஒருவர் மறுத்து இருந்தார்.

சர்வானந்த் 40 நாட்கள் லண்டனில் படப்பிடிப்புக்காக சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பி இருக்கிறார் என்றும், திருமண வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

ஆனாலும் நிச்சயதார்த்தம் நின்றுபோனதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது திருமண தேதியை சர்வானந்த் அறிவித்து இருக்கிறார்.

ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வானந்த்

Sharwanand And Rakshita Shetty Wedding In Jaipur On June 3

More Articles
Follows