மறக்க முடியாத பிறந்தநாள் பரிசை செந்திலுக்கு கொடுத்தார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோர் நடித்து வருகின்றனர். இசை அனிருத்.

இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங் நடுவே செந்தில் அவர்களின் பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

அப்போது வாழைப்பழம் போன்ற கேக் ஒன்றை டிசைன் செய்து, அதை செந்திலுக்கு கொடுத்து மகிழ்வித்துள்ளார் சூர்யா.

கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்த வாழைப்பழ காமெடி என்றைக்கும் மறக்க முடியாத ஒன்று.

அதை கொடுத்து தற்போது செந்திலின் இந்த பிறந்தநாளையும் மறக்கமுடியாமல் செய்துவிட்டனர் தானா சேர்ந்த கூட்டம் படக்குழுவினர்.

Suriyas Birthday gift to Comedy Actor Senthil

ராஜமவுலியின் பாகுபலி விழாவில் ரஜினிகாந்த்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி 2 படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் சாதனை படைத்துள்ளது.

ஒரே நாளில் மட்டும் இந்த ட்ரைலரை மட்டும் 50 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இதில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோகினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இப்படத்தை உலகம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி இப்படத்தின் தமிழ் பதிப்பு பாடல்களை வெளியிடவிருக்கிறார்களாம்.

சென்னையில் நடைபெறும் இவ்விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது.

எழுத்தாளர் அசோகமித்ரன் மறைவுக்கு கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உடல்நலக்குறைவால் பிரபல எழுத்தாளர் அசோகமித்ரன் (85) காலமானார்.

இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தன் இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில்…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு.

அசோக்மித்திரன் பற்றி சில குறிப்புகள்…

1931ம் ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் தியாகராஜன்.

இவரது தண்ணீர் நாவல் வாசகர்களிடையே மிகப்பிரபலமானது.

அப்பாவின் சினேகிதர் என்ற சிறுகதை தொகுப்பிற்கு 1996ல் சாகித்ய அகாடமி விருதை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர், மானசரோவர், ஒன்றன் உள்ளிட்ட 15 நாவல்களையும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

சாரல் இலக்கியச் சிந்தனை, அக்சரா உள்ளிட்ட இலக்கிய விருதுகளை அவர் வென்றுள்ளார்.

சிவகார்த்திகேயனின் ’வேலைக்காரன்’ குறித்து ஸ்னேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், பஹத்பாசில் உள்ளிட்ட நட்சத்திர பட்டளாமே நடித்து வருகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மே 1ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் சினேகா கூறியதாவது…

‘பஹத் பாசில் உடன் ஏற்கனவே மலையாளப் படத்தில் நடித்திருக்கிறேன்.

அவரது ரசிகையான நான் இதில் அவருடன் ஜோடியாக நடிக்க உள்ளேன்.

இந்தப் படத்தின் கேரக்டருக்காக உடல் எடையை குறைத்துள்ளேன்.

என் கேரக்டர் இப்போதே சொல்வது நன்றாக இருக்காது.’ என்றார்.

உங்க சினிமா ஸ்டார்ஸ் எவ்வளவு வரி கட்டுறாங்க..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் டாப் ஹீரோஸ்க்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் பத்துக்கும் மேற்பட்ட பட்ஜெட் படங்களை எடுத்துவிடலாம் என்பார்கள்.

எனவே, கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் இவர்கள் முறையாக வரி கட்டுகிறார்களா? என்ற சந்தேகம் நிச்சயம் ரசிகர்களிடைய எழத்தான் செய்யும்.
இந்நிலையில் இந்தியாவில் அதிகமாக சம்பளம் பெறும் இந்தி நடிகர்கள், தங்கள் வருமான வரியை முன்கூட்டியே செலுத்தி வருகிறார்களாம்.

அதன்படி கிடைத்துள்ள தகவல்களின் படி…

சல்மான்கான் வருமான வரியாக ரூ. 44.5 கோடி இந்தாண்டு செலுத்தி இருக்கிறார். கடந்த முறை இவர், ரூ. 32.2 கோடி வரியாக செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷய்குமார் ரூ.29 கோடியையும், ஹிருத்திக் ரோஷன் ரூ.25.5 கோடியையும் வரியாக செலுத்தி உள்ளனர்.

கோச்சடையான் புகழ் நடிகை தீபிகா படுகோன் ரூ.10 கோடி வரி செலுத்தி இருக்கிறார்.

நடிகை அலியா பட் முன் கூட்டியே வரி செலுத்தும் பட்டியலில் இந்த வருடம்தான் இணைந்திருக்கிறார். இவர் ரூ.4.33 கோடி செலுத்தியுள்ளார்.

‘நான் பிழைப்பேனா….?’ யாரிடம் மாட்டிக் கொண்டார் தனுஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் இயக்கம். மறுபக்கம் நடிப்பு என பிஸியாக இருக்கிறார் தனுஷ்.

தான் இயக்கியுள்ள பவர் பாண்டி படத்தை வெளியிடும் முயற்சியில் இருக்கும் தனுஷ், மற்றொரு புறம் கெளதம் மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் தனுஷ் உடன் மேகா ஆகாஷ், ராணா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன், இப்படத்தில் இடம் பெற்ற ‘மறுவார்த்தை பேசாதே’ என்ற பாடல் டீசர் வெளியாகி ஹிட்டானது.

ஆனால் படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற தகவல் மட்டும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்நிலையில் மார்ச் 25ஆம் தேதி இந்த படத்தின் அடுத்த பாடலான
‘நான் பிழைப்பேனா?’ என தொடங்கும் பாடலை வெளியிட இருக்கிறார்களாம்.

அது இருக்கட்டும்… யாரிடம் மாட்டிக் கொண்டு நான் பிழைப்பேனா? என தனுஷ் கேட்கிறார் என்பதுதான் தெரியவில்லை.

More Articles
Follows