நீட் ரிசல்ட்டுக்கு பின் சூர்யா நிலைப்பாட்டில் மாற்றம் வரும்..- முன்னாள் IPS அண்ணாமலை

நீட் ரிசல்ட்டுக்கு பின் சூர்யா நிலைப்பாட்டில் மாற்றம் வரும்..- முன்னாள் IPS அண்ணாமலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

annamalai suriyaநீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

மாணவர்களின் தற்கொலையால் நடிகர் சூர்யா சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில்…

கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள்.

மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும்.

நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது.

மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கக் கூடாது. சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.

என்று வேதனையுடன் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் கர்நாடக சிங்கம் என வர்ணிக்கப்பட்ட முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை சூர்யா பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

நீட் ரிசல்ட்டுக்கு பின் சூர்யா நீட் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்.

நடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நீட் தேர்வு ரிசல்ட் பதில் தரும் என பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இவர் அண்மையில்தான் பாஜக. கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya will change his stance on NEET after results says BJP leader annamalai

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு..; இப்படி ஒரு நடிகையா?

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு..; இப்படி ஒரு நடிகையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shalu shamuகோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருவதோடு, மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஷாலு ஷம்மு ரசிகர்களுக்காக செய்த ஒரு விஷயத்தால், தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். பொதுவாக ரசிகர்கள் தான் தங்களது மனம் கவர்ந்த நடிகர், நடிகைகளின் பிறந்தநாளை கொண்டாடுவார்கள்.

ஆனால், ஷாலு ஷம்முவோ தனது ரசிகர்கள் இருவரது பிறந்தநாளை கொண்டாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.

சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இயங்கும் ஷாலு ஷம்மு, அவ்வபோது தனது ரசிகர்களிடம் பேசுவது உண்டு. அப்படி பேசும் போது இரண்டு ரசிகர்கள் தங்களது பிறந்தநாளுக்காக அவரை வாழ்த்த சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்து கூறிய ஷாலு ஷம்மு, அவர்கள் பற்றி கேட்கும் போது, அவர்கள் அவருடைய வீட்டின் அருகே வசிப்பது தெரிந்திருக்கிறது. உடனே அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து, கேக் வெட்டி அவர்களின் பிறந்தநாளை தனது வீட்டிலேயே கொண்டாடியிருக்கிறார்.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த இரண்டு ரசிகர்களும் உற்சாகமாக ஷாலு ஷம்முவுடன் தங்களது பிறந்தநாளை கொண்டாடியதோடு, இதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாலு ஷம்முவை பாராட்டி வருகிறார்கள்.

Actress shalu shamu given surprise for her fans

யோகி பாபுவை அடுத்து போண்டா மணியும் ஹீரோவாகிறார்

யோகி பாபுவை அடுத்து போண்டா மணியும் ஹீரோவாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu bonda maniஇலங்கையை பூர்விகமாக கொண்டவர் நடிகர் போண்டா மணி.

சென்னையில் சினிமா வாய்ப்பு தேடிய போது இயக்குனர் கே.பாக்யராஜ் கண்ணில் பட்டு நடிகரானார்.

வடிவேலுவின் காமெடி கேங்கில் இவர் நிச்சயம் இடம் பெற்றிருப்பார்.

போண்டா மணியை பார்த்து… மூக்கு முடைப்பா இருந்தா இப்படிதான் யோசிக்க தோனும் என ஒரு படத்தில் வடிவேலு சொல்வார்.

இந்த நிலையில் போண்டா மணியும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம்.

சின்ன பண்ணை பெரிய பண்ணை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இவருடன் ஆதேஷ்பாலா, இயக்குனர் பகவதி பாலா, ஷர்மிளா, பிரமோஸ் தாஸ், கண்ணாயிரம், கேபிள் சங்கர், செளந்தர் உள்பட பலர் நடிக்கின்றனர்.

எஸ்.பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை எஸ்.பகவதி பாலா இயக்குகிறார்.

காமெடியனாக வலம் வந்த வடிவேலு, சந்தானம், யோகி பாபு உள்ளிட்டோர் தற்போது நாயகனாக நடித்து வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

comedy actor bonda mani turns hero

இதான் தலைவர்.. பாசிட்டிவ் எண்ணம்.. லவ் யூ தலைவா… – லாரன்ஸ்

இதான் தலைவர்.. பாசிட்டிவ் எண்ணம்.. லவ் யூ தலைவா… – லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raghava lawrence rajinikanthமும்பையைச் சேர்ந்த ரஜினி ரசிகரான முரளி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இனி தான் உயிர் பிழைப்போமா? என்ற சந்தேகம் அந்த ரசிகருக்கு வரவே தன்னுடைய ட்விட்டரில்.. ‘தலைவா எனது இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிப்பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு மக்களின் தனிநபர் வருமானம் 25,000 ரூபாய் என்ற நிலையை உருவாக்கிக் கொடுங்கள்.

உன்னை அரியணையில் ஏற்ற விடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் தான் எனக்கு உள்ளது என தன் மகன் (தர்ஷன்) ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் முரளி.

இதனையறிந்த நடிகர் ரஜினிகாந்த்.. தைரியமாக இருங்கள். உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். நீங்க நலமுடன் வீடு திரும்பியவுடன் எனது வீட்டிற்கு வாருங்கள்’ என்று ஆடியோ அனுப்பியிருந்தார்.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த ஆடியோவை நடிகர் ராகவா லாரன்ஸ் தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார், அதில்..

இதுதான் எங்கள் தலைவர். தலைவரின் ஆடியோவை கேட்கும்போதே பாசிட்டிவான எண்ணத்தையும் பாசத்தையும் ஊட்டுகிறது. இதைக் கேட்ட அந்த ரசிகர் அதனை எப்படி உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். லவ் யூ தலைவா! குருவே சரணம்’ என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார் லாரன்ஸ்.

Raghava lawrence praises Rajinikanth

சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு.; செருப்பு மாலை அணிவிக்க முயற்சி

சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு.; செருப்பு மாலை அணிவிக்க முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hindu makkal katchiகடந்த வாரம் நீட் தேர்வு தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருந்தார் நடிகர் சூர்யா.

மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

அவரின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதித்ததாக சிலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சூர்யா மீது எந்த அவமதிப்பு வழக்கும் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் சூர்யா அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சூர்யா மாணவர்களை தவறாக வழி நடத்துவதாகவும், நீட் தேர்வை அரசியலாக்க முயல்வதாகவும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடதிதினர்.

மேலும் சூர்யாவின் படத்தை கிழித்து, செருப்பால் அடித்து, செருப்பு மாலை அணிவிக்க முயன்றனர்.

இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து செருப்பு மாலைகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தர்மா என்பவர் சூர்யாவை விமர்சித்துள்ளார்.

நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுப்பார் எனவும் பேசியிருக்கிறார்.

One lakh reward announced by hindu makkal katchi if trashing actor surya

டபுள் மீனிங் படத்தில் கிராமத்து இளைஞனாக நடிகர் சிம்பு..?

டபுள் மீனிங் படத்தில் கிராமத்து இளைஞனாக நடிகர் சிம்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள ’மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

இந்த படத்தின் சூட்டிங் கொரோனா பிரச்சினைக்கு பிறகு தொடங்கவுள்ளது.

இந்த படத்திற்கு சிம்புவை இயக்கவுள்ள ஓரிரு இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் தற்போது சுசீந்திரன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுசீந்திரன் சொன்ன கிராமத்து கதை சிம்புவை கவர்ந்துவிட்டதாகவும் விரைவில் அந்த படத்தில் நடிப்பார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.

சிம்புவின் படங்கள் பெரும்பாலும் சிட்டி சப்ஜெக்ட் படங்களாவே இருக்கும்.

சிம்பு நடிப்பில் கோவில் மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே கிராமத்து படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

STR – Susenthiran new movie updates

More Articles
Follows