தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘என்.ஜி.கே’ மற்றும் ‘காப்பான்’ ஆகிய படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.
இப்படத்தை சூர்யாவே தயாரிக்கவுள்ளார் என்பதையும் பார்த்தோம்.
இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது அனைத்து பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.
இப்பட பாடல்கள் அனைத்தையும் கேட்ட சூர்யா, ஜி.வி.பிரகாஷை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அவருக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து அனுப்பி அதில் “ஜிவி ப்ரோ, பாடல் கேட்டு சிலிர்த்துவிட்டேன். சூப்பர் பாடல்கள்” என்று தன் கைப்பட எழுதியிருக்கிறார்.
இதனை போட்டோ எடுத்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Suriya send bouquet and note to GV Prakash and praises his songs