ரஜினிகாந்த்-விஜய் இடத்திற்கு வந்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கும் சிங்கம் 3 (எஸ் 3) படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

வருகிற டிசம்பர் 16ஆம் தேதி படம் ரிலீஸ் என்றும் அறிவித்துவிட்டர்.

எனவே இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஆந்திராவில் உள்ள தலகோன் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது.

இது அடர்ந்த காட்டு பகுதியாகும். தற்போது இங்கு இதன் க்ளைமாக்ஸ் காட்சிகளை படம் பிடித்து வருகிறார்களாம்.

இங்குதான் விஜய்யின் புலி படத்தின் காட்சிகளை எடுத்துள்ளனர்.

மேலும் ரஜினியின் 2.0 படத்தின் சில காட்சிகளை இங்கு எடுத்தார்களாம்.

‘ஜெயலலிதா உடல்நிலை; அரசியலில் ரஜினி..’ – சத்யநாராயணா பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா தனது குடும்பத்துடன் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு இன்று வருகை தந்தார்.

அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் ரூ.25 ஆயிரம் செலுத்தி, காசி விஸ்வநாதர் சன்னதியில் 1008 வெள்ளி கலசாபிஷேக பூஜை நடத்தினார்.

தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறியதாவது…

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டியும், காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட்டு, தமிழக-கர்நாடக மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியும் கலசாபிஷேக பூஜை நடத்தினேன்.

அதன்பின்னர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு…

அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லை. ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்” என்றார்.

‘கார்மேக குழலி’ ரித்திகா சிங்கின் டார்லிங் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இறுதிச்சுற்று என்ற தன் முதல் படத்தின் மூலம் தேசிய விருதை வென்று இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் ரித்திகா சிங்.

இதனையடுத்து மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார்.

இதில் இவர் ஏற்ற கார்மேக்குழலி என்ற கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் தொடர்பான ஒரு பேட்டியில், விஜய்சேதுபதி என் டார்லிங். சூட்டிங் ஸ்பார்ட்டில் அவருடைய சர்ப்போர்ட் மறக்க முடியாது என்றார்.

தற்போது லாரன்ஸ் உடன் சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார் இந்த கார்மேக அழகி ரித்திகா.

விஜய்-அட்லி கூட்டணியில் இணைவாரா அவர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா ராணி மற்றும் தெறி படங்களை அட்லி இயக்கினார்.

இவை இரண்டிலும் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் விஜய்யை மீண்டும் அட்லி இயக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு அவர் தயாராக இருப்பதாக ட்விட்டரில் ரசிகருக்கு பதிலளித்திருக்கிறார்.

ஏஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் இவர் விஜய்யுடன் இணைந்து பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரி, ஆண்டவன் கட்டளை… வசூல் நிலவரம் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த செப். 22ஆம் தேதி தனுஷ் நடித்த ‘தொடரி’ படமும் செப். 23ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படமும் வெளியானது.

தொடரி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

ஆனால் ஆண்டவன் கட்டளை படத்திற்கு பெரும்பாலும் பாஸிட்டிவ்வான விமர்சனங்களே வந்துக் கொண்டிருக்கின்றன.

இந்த 4 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1,60,06,132 வசூல் செய்துள்ளது தொடரி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதல் நாளே ரூ 4.45 கோடியையும் இரண்டாவது நாளில் ரூ 3.72 கோடியையும், மூன்றாவது நாளில் ரூ. 4.06 கோடியையும் வசூலித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையிலும், ரூ. 4 கோடியை நெருங்கி உள்ளதாக தெரிகிறது.

எனவே இதுவரை ரூ. 15 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்டவன் கட்டளை தமிழக அளவில் முதல் நாளில் ரூ. 2.60 கோடி வசூல் செய்துள்ளது.

அதனை அடுத்து செப். 24ஆம் தேதியில் ரூ. 3.49 கோடியையும் ஞாயிற்றுக்கிழமை (செப். 25) ரூ. 3.80 கோடியையும் ஈட்டியுள்ளது.

ஆக மொத்தம் முதல் மூன்று நாட்களில் ரூ. 10 கோடியை எட்டியுள்ளது.

‘ரெமோ’ அப்டேட்ஸ்; வேற லெவல் விளம்பரங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் ரெமோ.

இப்படம் வெளியாக இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், இன்று சென்சாருக்கு சென்றுள்ளது.

அண்மையில் வெளியான இதன் ட்ரைலரை இதுவரை 45 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்து வருகிறது.

எனவே படத்தின் புரோமோஷனை சிறந்த முறையில் செய்து வருகிறார் இதன் தயாரிப்பார் ஆர்.டி.ராஜா.

எனவே, தமிழகத்தில் உள்ள முக்கிய தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றில் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள மன்மதன் சிலைகள் (CUPID) வைக்கப்பட்டுள்ளன.

இத்துடன் குழந்தைகள் முதல் இளைஞர்கள் செஃல்பி எடுத்து வருகின்றனர்.

மேலும் மக்கள் அதிகம் சேரும் இடங்களிலும் ரெமோ விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

More Articles
Follows