இதற்கு முன் OTT-யில் படமே ரிலீஸாகலையா..? சூர்யாவை மட்டும் எதிர்ப்பது ஏன்?

இதற்கு முன் OTT-யில் படமே ரிலீஸாகலையா..? சூர்யாவை மட்டும் எதிர்ப்பது ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya movie release issue and List of OTT release moviesசூர்யா தயாரிப்பில் ஜோதிகா நாயகியாக நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக இணையத்தில் வெளியிட உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு முடிந்தாலும் தியேட்டர்கள் திறக்க இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும். மேலும் மற்ற நாடுகளில் தியேட்டர்கள் திறக்க இன்னும் 6 மாதங்கள் கூட ஆகலாம்.

அதுவரை படத்தை ரிலீஸ் செய்யாமல் இருந்தால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாம்.

எனவே தான் படத்தை பல எதிர்ப்புகளை மீறியும் இணையத்தில் வெளியிட உள்ளனர்.

இதற்கு முன் வேறு படங்கள் இணையத்தில் வெளியாகவில்லையா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

நிறைய படங்கள் ரிலீஸாகியுள்ளதே. அப்படியென்றால் சூர்யாவுக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்பதுதானே உங்கள் அடுத்த கேள்வி..?

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படமும் இதுபோல் நேரிடையாக இணையத்தில் வெளியானால் தியேட்டர்களின் நிலை என்னாவது? என்பதுதான் இந்த எதிர்ப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

காரணம் சூர்யா ஒரு முன்னணி நடிகர். அவரின் படங்கள் தியேட்டரில் வெளியானால் தியேட்டர்களுக்கு லாபம் கிடைக்கும்.

ஒருவேளை புது முயற்சியாக சூர்யா ஓடீடீ (இணையத்தில்) படத்தை வெளியிட்டால் அவரை தொடர்ந்து பல முன்னணி தயாரிப்பாளர்களும் இந்த நிலையை தொடர வாய்ப்புள்ளது.

இதனால் தியேட்டர்களை ஒரேடியாக மூடும் நிலை உருவாகலாம் என்ற பயமும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

எனவே இந்த விவகாரத்தில் சூர்யா என்ன நிலையை எடுக்க போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்கு முன் நேரிடையாக இணையத்தில் வெளியான படங்கள் எவை..?

பிரகாஷ்ராஜ் நடித்த ‘சில சமயங்களில்’ படம் 2018ல் நெட்பிளிக்சில் வெளியானது. வெங்கட் பிரபுவின் ‘ஆர்கே நகர்’ என்ற படம் 2019ல் நெட்பிளிக்ஸில் வெளியானது.

2019ம் ஆண்டு ஜீ 5 இணையத்தளத்தில் ‘சிகை, களவு, இக்லூ’ ஆகிய படங்கள் வெளியானது.

இந்த படங்களுக்கு எல்லாம் எந்தவித எதிர்ப்பையும் தியேட்டர்காரர்கள் காட்டவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இவை ஒரு புறம் இருந்தாலும் டாப் ஹீரோஸ் படங்களை மட்டுமே ஓடீடீ வெளியிட நிறுவனங்கள் காத்திருக்கிறது.

சின்ன பட்ஜெட் படங்களை அவர்கள் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.

அப்படியிருக்கையில் தியேட்டர்களை முற்றிலுமாக தயாரிப்பாளர்களால் புறக்கணிக்கவும் முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

Suriya movie release issue and List of OTT release movies

ரஜினி பட கடையை கூட டைட்டிலாக்கிய சார்லி & கோமாளி டைரக்டர்

ரஜினி பட கடையை கூட டைட்டிலாக்கிய சார்லி & கோமாளி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

19 year old Karuppaiah directed Shanmugam Saloonபி. வாசு இயக்கிய குசேலன் படத்தில் ரஜினி, மீனா, பசுபதி, வடிவேலு, சோனா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் வடிவேலுவின் பெயர் சண்முகம். இவர் சலூன் வைத்திருப்பார்.

ஒரு காட்சியில் கூட சலூன் கடை சண்முகம் என்று வடிவேலுவை ரஜினி அழைப்பார்.

தற்போது சண்முகம் சலூன் என்ற பெயரே ஒரு சினிமாவுக்கு டைட்டில் ஆகியுள்ளது.

இந்த படத்தில் சார்லி மற்றும் கோமாளி பட டைரக்டர் பிரதீப் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

19 வயதான இளைஞர் கருப்பையா ராம் என்பவர் இயக்க பிரணவ் முனிராஜ் இசையமைக்கிறார்.

கிருஷ்ணா சக்தி ஒளிப்பதிவு செய்ய அருண் எடிட்டிங் செய்துள்ளார்.

சொக்கலிங்கம் மற்றும் உண்ணாமலை ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தை மே 1 ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு யூடிப்பில் ரிலீஸ் செய்கின்றனர்.

19 year old Karuppaiah directed Shanmugam Saloon

BREAKING சூர்யா படங்களை இனி தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாது.; வலுக்கும் எதிர்ப்பு (வீடியோ)

BREAKING சூர்யா படங்களை இனி தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாது.; வலுக்கும் எதிர்ப்பு (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theatre Owners Association decides they wont release Suriya moviesநடிகர் சூர்யா தயாரிப்பில் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.

இந்த படம் மார்ச் இறுதியில் திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வெளியாகவில்லை.

மார்ச் 17ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கு விரைவில் தளர்த்தப்பட்டாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான தியேட்டர்களை நிச்சயம் திறக்க விடமாட்டார்கள்.

மேலும் பல படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பதால் தியேட்டர் கிடைப்பதிலும் சிக்கல் உருவாகும்.

இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தை திரையில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக OTT இணையதளமான அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலர் பன்னீர் செல்வம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்…

பொன்மகள் வந்தாள் படத்தை நேரிடையாக இணையத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

தொடர்பு கொண்ட போது தயாரிப்பாளர் நமது கோரிக்கைகளை ஏற்பதாய் இல்லை.

ஆதலால் இனி அந்த தயாரிப்பாளர் (சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்) மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT Platformல் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

R Panneerselvam
General Secretary
Tamil Nadu Theatre Owners Association

Theatre Owners Association decides they wont release Suriya movies

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா ஜோடியாக நடித்துள்ள படம் சூரரைப் போற்று. ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தையும் சூர்யாவே தன் சொந்த பட நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். எனவே இந்த படத்தின் ரிலீசுக்கு பிரச்சினை வர வாய்ப்புள்ளது.

Watch the video here…

BREAKING உண்மையை சொன்னால் சிறையா.? தமிழக அரசை கேட்கும் கமல்

BREAKING உண்மையை சொன்னால் சிறையா.? தமிழக அரசை கேட்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal supports Media and slams Tamil Nadu Governmentகோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கேன்டீனில் பணியாற்றிவந்த சமையல்காரர் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், முன் ஏற்பாடு இன்றி கேன்டீனை கல்லூரி நிர்வாகம் மூடியது.

இதனால், 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உணவு இன்றி தவித்து வந்தனர்.

தங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க கல்லூரி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளையாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தும் தற்போதைய சூழலில் கல்லூரி நிர்வாகத்தால் செய்து தர முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து மருத்துவர்கள் தங்களுக்கு உணவு, தண்ணீர் வேண்டும் என்று கேட்டு போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு சில தினங்கள் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டதாக கூறி, கோவையிலிருந்து செயல்படும் டிஜிட்டல் ஊடகத்தின் ஆசிரியர், செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தனர்.

விசாரணைக்கு பிறகு செய்தியாளர், ஒளிப்பதிவாளரை விடுவித்த காவல்துறையினர், டிஜிட்டல் ஊடகத்தின் ஆசிரியர் சாம் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளதாவது…

கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்… என கமல் கேட்டுள்ளார்.

Kamal supports Media and slams Tamil Nadu Government

மன்னிப்பு கேட்டு அசிங்கப்படுத்திடாதீங்க.. ஜோதிகாவுக்கு சுரேஷ் காமாட்சி அட்வைஸ்

மன்னிப்பு கேட்டு அசிங்கப்படுத்திடாதீங்க.. ஜோதிகாவுக்கு சுரேஷ் காமாட்சி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suresh Kamatchi supports Jyothika in Tanjore Temple controversy கோயில்களுக்கு செலவு செய்வதை விட பள்ளிகள் மருத்துவமனைகள் கட்ட செலவு செய்வதே மேல் என அண்மையில் நடிகை ஜோதிகா ஒரு விழாவில் பேசியிருந்தார்.

இதனை கண்டித்து பலர் விமர்சித்து இருந்தனர். சிலர் ஜோதிகாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

‘இந்த நிலையில் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சியும் தன் ஆதரவை ஜோதிகாவுக்கு தெரிவித்துள்ளார்.

அதில்….

திருமதி ஜோதிகா மதம் கடந்தவர். அவரின் பிறப்பை வைத்து அவரது பொது அறிவை எடைபோடும் சிலரைப் பார்த்தால் உங்களை இன்னும் எத்தனை கொரானா தின்றாலும் திருந்த மாட்டீங்கடான்னுதான் சொல்லத் தோணுது.

இஸ்லாமிய பெண்ணானவர், ஒரு இந்துவைத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால்-

அந்த இந்து ஆண், முஸ்லிம் ஆகி.. சுன்னத் செய்து வேறு பெயர் வைத்த பின்தான் சாத்தியம்.

ஆனால் திருமதி ஜோதிகா காதலித்தவரை எந்த மாற்றமும் செய்யாமல் காதலுக்காக காதலனை மட்டுமே திருமணம் செய்துகொண்டவர்.

ஒரு இந்து இறை நம்பிக்கை அதிகம் கொண்ட குடும்பத்தில் இணைந்துகொண்டு அவர்களோடு அவர்களாக பல ஆண்டுகளாக வாழ்பவரை எது திடீரென முஸ்லிமாக நினைக்க வைத்தது?

உங்கள் வழிக்கே வருவதாக இருந்தாலும் கிட்டத்தட்ட அவர் ஒரு கன்வெர்ட்டட் இந்துவாகத்தானே இருக்கிறார்?

அவர் எப்படி ஒரு மதம் சார்ந்து பேசியிருக்கக்கூடும்?? அவரின் அடிப்படை மனிதத்தன்மையில் இருந்து யோசித்துப் பேசியதை நீங்கள் மத அடிப்படையில் எடுத்துக் கொண்டது உங்களின் அடிப்படைத் தவறு.

நீங்கள் யாரையாவது அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற இலக்கில் உள்ளதால் சிக்கியவர் யாராயிருந்தாலும் அடி என்ற வெறித்தனத்தில் அடித்துள்ளீர்கள்.

அவர் பேசியது உங்கள் மூளைக்கு உறைக்கவில்லையா? உங்கள் குழந்தைகளுக்காகவும்தான் பேசியிருக்கிறார்…

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்..!”

என்ற பாரதியின் புதுமைப் பெண்ணாகத்தானே பேசியிருக்கிறார்?

எந்தக் கோவில்களைப் பற்றியும் அவதூறு செய்யாத அழுத்தமான தேவையான பேச்சு அது…

ஆனால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது என்றால்… இவனுகளெல்லாம் கல்வி கற்று அறிவுக் கண் திறந்துவிட்டால் எங்கே நம் மத வியாபாரம் படுத்துவிடுமோன்னு பயம்!!??

கல்விதான் வருங்காலத் தலைமுறையின் விடியலுக்கான ஆயுதம். அந்த ஆயுதத்தை வலிமையானதாக உணர்ந்ததால்தான் திருமதி ஜோதிகா அதைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். அந்த ஆயுதத்தை மொன்னையாக்கியேத் தீருவோம் என்பது உங்கள் போராட்டம் என்றால் கல்வி எங்களின் தலைமுறைக்குத் தேவையான ஆயுதமாக அல்ல… பேராயுதமாகச் செய்வோம் என்பது தமிழர்கள் ஏற்கும் உறுதியாக இருக்க வேண்டும்.

கோவில்கள் சர்ச்சுகள் மசூதிகளுக்கு கொண்டு கொட்டுவதைவிட கல்வியை இலவசமாகத் தர மதம் தாண்டி மனிதர்கள் முன் வரவேண்டும்.

கோவில்களும் சர்ச்சுகளும் மசூதிகளும் மூடிக்கிடக்கும் இவ்வேளையில்கூட உங்கள் மத அரசியல் எதை நிலை நிறுத்தப் போராடுகிறது…?

திருமதி. ஜோதிகா அவர்களின் பேச்சை நிதானமாகக் கவனியுங்கள். ஆழ்ந்து யோசியுங்கள். அவர் வேறு ஏதாவது ஒன்றிற்கு அந்தப் பணத்தைக் கொடுங்கள் என்று சொல்லியிருந்தால் நீங்கள் கொதிப்பதில் நியாயம் இருக்குன்னு கூட எடுத்துக்கலாம்.

கல்வி நிலையங்களுக்குத் தாருங்கள்னு கேட்டதைப் போய் இவ்வளவு மோசமான அரசியல் செய்கிறீர்களே? கொஞ்சமாவது நியாயம் இருக்கா இதில்? ?

நீங்கள் இப்படி வெறுப்பை உமிழ உமிழ, மத வெறியைக் கொட்டக் கொட்ட நாம் சார்ந்திருக்கும் மதத்தின் மீது நமக்கே வெறுப்பு ஏற்பட்டுவிடக்கூடும் நண்பர்களே…!!

அவர்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை கல்விக்காக செலவு செய்துகொண்டிருப்பவர்கள்.

எத்தனையோ குடும்பங்களுக்குப் படிப்பின் மூலம் விளக்கேற்றி வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

அவர்கள் செய்வதை வைத்தாவது அவர்கள் மத நோக்கில் பேசியிருக்க மாட்டார்கள் என உணர வேண்டாமா?

திருமதி. ஜோதிகாவே இந்த சூழ்நிலையில்தான் தன் பிறப்பினை திரும்பிப் பார்த்திருக்கக்கூடும்.
“ஓ நாம் அங்கிருந்து வந்தவரோ” என்பதாக யோசித்துக் கலங்கியிருக்கக்கூடும். நமது நன்றிகெட்ட தனத்தை எண்ணி வெட்கியிருக்கக் கூடும்..

பாரதியின் வாக்கைப் பேசியுள்ளீர்கள் திருமதி ஜோதிகா அவர்களே!

துணிந்து நில்லுங்கள். தணிந்து மன்னிப்புக் கேட்டு உங்களை அசிங்கப்படுத்தி விடாதீர்கள்.

நாளைய தலைமுறையின் வாழ்த்துக்களுக்காக இன்றைய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும்… அசிங்கமான தூற்றல்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் படங்களில் பேசப்படும் பெண்ணியம் இங்கும் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.

உங்கள் பேச்சினைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ளும்வரைக் காத்திருங்கள்.

சமூக மாற்றங்கள் ஒரே இரவில் நிகழ்ந்து விடாது. அது படிப்படியாகக் கல்வியை பெற்றுக் கொள்வதில் இருக்கிறது என்ற உங்கள் கருத்தை, நான் சார்ந்துள்ள மதமாச்சர்யங்களைத் தாண்டி ஏற்றுக் கொள்கிறேன்.

யாவற்றையும் விட கல்வியே சிறந்தது. உங்கள் கல்விப் பணி தொடரட்டும்.

அன்புடன்

சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/ இயக்குநர்

Suresh Kamatchi supports Jyothika in Tanjore Temple controversy

பொன்மகள் வந்தாள் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்ய சூர்யா திட்டம்?

பொன்மகள் வந்தாள் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்ய சூர்யா திட்டம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas Ponmagal Vandhal will be released in OTT Platformநடிகர் சூர்யா தயாரிப்பில் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.

இந்த படம் மார்ச் இறுதியில் திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வெளியாகவில்லை.

இதன் வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி வாங்கியிருந்தது.

மார்ச் 17ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கு விரைவில் தளர்த்தப்பட்டாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான தியேட்டர்களை நிச்சயம் திறக்க விடமாட்டார்கள்.

மேலும் பல படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பதால் தியேட்டர் கிடைப்பதிலும் சிக்கல் உருவாகும்.

இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக OTT இணையதளமான அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

கிட்டதட்ட ரூ. 4 கோடியில் தயாரான இந்த படத்தை 9 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் வாங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மே மாதம் ரிலீஸ் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Suriyas Ponmagal Vandhal will be released in OTT Platform

More Articles
Follows