‘அண்ணாத்த’ இயக்குனருடன் இணையும் சூர்யா.; மீண்டும் டபுள் ரோல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தை முடித்துவிட்டு சிவா இயக்கவிருந்த அடுத்த படத்தில் நடிக்க காத்திருந்தார் சூர்யா.

இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியானது.

ஆனால் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் சிவா. இதனால் சூர்யாவும் .. “ரஜினி சார் படத்தை முடித்துவிட்டு வாருங்கள் காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.

தற்போது நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டியும் ரஜினியின் அண்ணாத்த படம் வசூல் வேட்டையாடி வருவதால் சிவா தரப்பினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இதனையடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்குவார் என தகவல்கள் பறந்தன. (நம் தளத்தில் அப்படியொரு செய்தி பதிவிடவில்லை)

இந்த நிலையில் ஏற்கெனவே சூர்யாவிடம் சொல்லி ஒப்புதல் பெற்ற படத்தை தற்போது இயக்கவுள்ளாராம் சிவா.

இந்த படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே பேரழகன், வேல், மாற்றான், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் சூர்யா.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இன்றோடு முடித்துக் கொடுத்துவிட்டார் சூர்யா என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Suriya joins with Annaatthe director ?

ரஜினி வழியில் கார்த்தி..; தல-தளபதிக்கு கிடைக்காதது இவருக்கு கிடைக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவை உலகளவில் சேர்த்தவர்களில் பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தான் சாரும்.

இவரது படங்களுக்கு தமிழ்நாடு இந்தியாவை போல உலக நாடுகளிலும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

ஜப்பானில் தர்பார் படம் வசூல் வேட்டையாடியது. அண்மையில் வெளியான அண்ணாத்த படமும் உலகளவில் 200 கோடியை நெருங்கியுள்ளது.

இதற்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்ட படம் என்றால் அது ரஜினிகாந்த் மீனா நடித்த ‘முத்து’ படம் தான்/

முத்து படம் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு அந்த நாட்டில் வெளியாகி மாபெரும் வரவேற்றை பெற்றது.

தற்போது வரை அங்குள்ள ரசிகர்கள் ரஜினியை டான்சிங் மகராஜா என்றும் மீனாவை டான்சிங் மகாராணி என்றுதான் அழைப்பார்கள். “தில்லானா தில்லானா…” பாடலுக்கு அப்படியொரு வரவேற்பு கிடைத்தது.

இந்திய பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காலத்தில் ரஜினி பற்றி ஜப்பான் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். தன் நாட்டு நடிகருக்கு இங்கு இப்படியொரு வரவேற்பா? என வியந்து பேசியிருக்கிறார்.

அன்றிலிருந்து இன்று வரை ரஜினி படங்களுக்கென்றே ஜப்பானில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் ரஜினி படங்களைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்து சூப்பர் ஹிட்டான கைதி படமும் ஜப்பான் மொழியில் வெளியாகவுள்ளது.

இந்த படம் வருகிற நவம்பர் 19-ந்தேதி கைதி டில்லி என்ற பெயரில் அங்கு ரிலீசாகிறது.

ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் அஜித் படங்களுக்கு எடுக்காத முயற்சியை கார்த்தி படத்திற்கு எடுத்துள்ளனர்.

நம் நடிகர்கள் ஜப்பானில் கொடி நாட்டினால் நமக்கு பெருமைதானே… கைதி பட வரவேற்பை பொறுத்திருந்து பார்ப்போம்.

Karthi’s super hit film to release in Japan

நிறைவு பெற்றான் ‘எதற்கும் துணிந்தவன்’..; விஜய்-சூர்யா சந்திப்பு எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார்

இவர்களுடன் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இப்படம் அடுத்தாண்டு 2022 ஜனவரியில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் நடிகர்கள் விஜய்யும் சூர்யாவும் இந்த சூட்டிங் செட்டுக்குள் சந்தித்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை பெருங்குடி என்ற பகுதியிலுள்ள ஒரு பிரபல ஸ்டூடியோவில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ மற்றும் சூர்யா நடித்து வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்புகள் நடைபெற்று வந்துள்ளது.

இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

இந்த படங்களில் சூட்டிங்கில் கிடைத்த ஓய்வு நேரத்தில் விஜய்யும் சூர்யாவும் சந்தித்து பேசிக் கொண்டுள்ளனர்.

Reason behind Vijay Suriya sudden meet?

மெட்ரோ ரயிலில் அஜித்தின் ரீல் சிஸ்டர் குத்தாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கும்கி’ திரைப்படத்தின் மலையாள நடிகை லட்சுமிமேனனை தமிழ் சினிமாவி அறிமுகம் செய்தார் பிரபு சாலமன்.

பாடல்களுடன் படமும் சூப்பர் ஹிட்டான நிலையில் தமிழில் ராசியான நடிகையானார்.

சசிகுமார் உடன் ‘சுந்தரபாண்டியன்’, விஷால் உடன் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், கார்த்தி உடன் கொம்பன், விஜய் சேதுபதியுடன் றெக்க என பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.

தன்னுடைய மேற்படிப்புக்காக சினிமாவில் இருந்து விலகினார்.

இதன்பின்னர் புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் கேரளாவில் கொச்சி மெட்ரோ ரயிலில் இவர் போட்ட ஆட்டம் வைரலாகி வருகிறது.

கிழிந்த ப்ளாக் கலர் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் போட்டுக் கொண்டு இவர் போட்ட டான்ஸ் இப்போது ட்ரெண்ட்டிங்கில் உள்ளது.

Ajith’s reel sister dance goes viral

மோகன்லாலை மான்ஸ்ட்ராக மாற்றும் ‘புலி முருகன்’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவை பிரம்மாண்டமான சினிமாவாக அடுத்த கட்டத்திற்கு சென்ற படங்களில் ஒன்று ‘புலி முருகன்’ என்று சொன்னால் அது மிகையன்று.

மோகன் லால், நமீதா, பாலா, லால், கமாலினி முகர்ஜி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இயக்குனர் வைசாக் இயக்கியிருந்த இந்த படத்தின் கதையை உதயகிருஷ்ணா எழுதியிருந்தார்.

தற்போது மீண்டும் இந்த கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளது.

இந்த படத்திற்கு ‘மான்ஸ்டர்’ என டைட்டில் வைத்து படம் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வமாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார் மோகன்லால்.

அவரின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.

இப்படத்தையும் வைசாக் இயக்க இந்த படத்தின் கதையை உதயகிருஷ்ணா எழுதுகிறார்.

இதில் லக்கி சிங் என்கிற சர்தார்ஜி வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.

அவர் நடிக்கும் கேரக்டர் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

இன்றுமுதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Mohanlal reunites with Puli Murugan team

நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..; புனீத் மறைவிற்கு ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த‌ அக்டோபர் மாதம் 29‍-ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (வயது 46).

இது இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது.

அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புனித் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

இதனால் அவருக்கு இந்த செய்தி தெரிவிக்கப்படவில்லை. அதனால் புனித் மறைவுக்கு அவர் இரங்கலும் தெரிவிக்கவில்லை.

தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னதாகவே ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும் அவர் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் தன் 2வது மகள் சௌந்தர்யா உருவாக்கிய ஹூட் செயலியில் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இது குறித்து அவர் பேசியிருப்பதாவது:

‘நான் மருத்துவமனையில் இருந்தபோது அகால மரணம் அடைந்து விட்டார் புனீத்.

அந்த செய்தி எனக்கு பிறகு தான் சொல்லப்பட்டது. அதை கேட்டு நான் மிக மிக வேதனை அடைந்தேன்.

என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை, புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்திருக்கிறார்.

அவருடைய இழப்பை கன்னட சினிமாத் துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Rajinikanth’s emotional condolence message to Punith Rajkumar

More Articles
Follows