2 கோல்டு-2 சில்வர்… சுட்டுத் தள்ளிய சூர்யாவின் பார்ட்னர்

2 கோல்டு-2 சில்வர்… சுட்டுத் தள்ளிய சூர்யாவின் பார்ட்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya rajasekar pandiyanதான் நடிக்கும் படங்கள் மட்டுமில்லாமல் மற்ற படங்களையும் தன் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் சார்பாக தயாரித்து வருகிறார் சூர்யா.

இந்நிறுவனத்தின் பார்ட்னராக ராஜசேகர் பாண்டியன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சாம்பியன் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போட்டியில் நடைபெற்ற 3 பிரிவுகளில் இரண்டு தங்க பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறாராம்.

இவர் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருமுகனை கேரளாவில் தொடங்கும் விக்ரம்; நயன்தாரா வருவாரா?

இருமுகனை கேரளாவில் தொடங்கும் விக்ரம்; நயன்தாரா வருவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram nayantharaமுதன்முறையாக விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் இணைந்துள்ள படம் இருமுகன்.

ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் கருணாகரன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தெலுங்கில் Inkokkadu (இன்னொருத்தன்) எனப் பெயரிட்டுள்ளனர்.

தெலுங்கு உரிமையை நீலம் கிருஷ்ண ரெட்டி, ரூ. 11 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை நாளை சென்சாருக்கு அனுப்ப உள்ளனர்.

செப்டம்பர் 8ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் இதன் புரோமோஷன் பணிகளுக்காக நாளை கேரளா செல்கிறார் விக்ரம்.

அங்கேயாச்சும் நயன்தாரா வருவாங்களா சீயான்?

‘தளபதி 60’ – விஜய்யை விட சதீஷுக்கு ரொம்ப ஸ்பெஷலாம்

‘தளபதி 60’ – விஜய்யை விட சதீஷுக்கு ரொம்ப ஸ்பெஷலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sathishகுறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்த சதீஷ், இயக்குனர் விஜய்யின் இயக்கத்தில் மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவுடன் நடித்தார்.

அதன்பின்னர் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து, இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடியனாகி விட்டார்.

இந்நிலையில் கத்தி படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இது சதீஷின் 25வது படமாம். எனவே இப்படத்தை மிகவும் எதிர்பார்க்கிறாராம்.

எனவே, தன்னுடைய வளர்ச்சிக்கு உதவிய ஹீரோக்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவர்க்கும் தன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

சதீஷின் பட வரிசைப்பட்டியல்…

 

sathish movie list

சூர்யாவின் சிங்கம் 3 பற்றிய புதிய தகவல்கள்

சூர்யாவின் சிங்கம் 3 பற்றிய புதிய தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya singam 3மாபெரும் வெற்றி பெற்ற சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ராதாரவி, நாசர் விவேக், சூரி, ரோபோ சங்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க, இவருக்கு அம்மாவாக ராதிகா நடிக்கிறாராம்.

ஹரி இயக்கத்தில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

போஸ்ட் புரோடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்ததும், அக்டோபர் மாதத்தில் படம் தயாராகிவிடுமாம்.

எனவே இனி சிங்கத்தின் விநியோகம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சேரனின் ‘கன்னா பின்னா’ பேச்சுக்கு சீமான் கண்டனம்

சேரனின் ‘கன்னா பின்னா’ பேச்சுக்கு சீமான் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cheran and seemanகடந்த வாரம் தியா இயக்கி நடித்திருக்கும் கன்னா பின்னா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சேரன் பேசும்போது, இணையங்களில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதற்கு இலங்கை தமிழர்களும் ஒரு காரணம் என பேசியிருந்தார்.

இதனால் பல்வேறு தரப்பினரும் அவருக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் கூறியதாவது…

சேரன் அப்படிப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் நடிகர் சங்கம்..? விஷால் ரியாக்ஷன் என்ன?

ஊழல் குற்றச்சாட்டில் நடிகர் சங்கம்..? விஷால் ரியாக்ஷன் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal birthday photosவிஷால் தனது பிறந்தநாளை முன்னிட்ட நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்டார்.

அங்கே அவர் பேசியதாவது…

“அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே அழைத்து வந்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறேன்.

நடிகர் சங்கத்தை பற்றி குறைக் கூறுபவர்கள் ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும்.

இதற்கு முன் சங்கத்தில் நடைபெற்ற பழைய முறைகேடுகள் பற்றிய எல்லா தகவல்களையும் இன்னும் 10 நாட்களில் நாங்கள் வெளியிடுவோம்.

வாராஹியிடம் ஏதாவது ஆதாரம் இருப்பின் அவர் என்னை வந்து நேரடியாக சந்திக்கட்டும்.

நாங்கள் இன்னும் நடிகர் சங்கக் கட்டிடத்துக்கான டெண்டரை விடவில்லை. எங்களுக்கு இன்னும் சி.எம்.டி.ஏ அப்ரூவல் வரவில்லை.

மேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைவேற்றிருக்கும் தீர்மானம் குறித்து எனக்கு எந்தவொரு கடிதமும் வரவில்லை. நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை” என்று பேசினார் விஷால்.

முன்னதாக நடிகர் சங்க உறுப்பினர் வாராஹி, விஷால், நாசர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் இதுவரை 3 கோடி அளவில் ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows