தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100வது படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
சுந்தர் சி இயக்கவுள்ள இப்படமானது ரூ. 100 கோடி செலவில் தயாராகிறது.
இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாக்கவுள்ளனர்.
சரித்திர படமான இப்படத்தில் நாயகனாக சூர்யா நடிப்பார் என சமீபகாலமாக செய்திகள் வந்தன.
இதுகுறித்து சூர்யா தரப்பில் விசாரிக்கையில்…
“ஒரு படத்தில் கமிட் ஆவதற்கு முன்பு நிறைய விஷயங்களை ஆலோசிக்க வேண்டியுள்ளது.
அதிகாரப்பூர்வ செய்தி வரும் வரை எதையும் நம்பாதீர்கள்” என தெரிவித்திருக்கிறார்கள்.
சென்னை 28 இரண்டாம் பாகத்திலும் தான் நடிக்கவில்லை என சூர்யா அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.