தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெரும்பாலும் சினிமா துறையில் ஒரு நடிகரின் வாரிசு அல்லது ஓர் இயக்குனரின் வாரிசு அவ்வளவாக ஜொலிப்பதில்லை.
ஆனால் எஸ்ஏசி – விஜய் இருவரும் தங்கள் துறைகளில் பல உயரங்களை அடைந்துள்ளனர்.
அதுபோல் சிவகுமாரின் மகன்கள் இருவரும் சில உயரங்களை தொட்டு வருகின்றனர்.
சூர்யா & கார்த்தி இருவருக்கும் தமிழ் & ஆந்திரா சினிமாவில் நல்ல மார்கெட் உள்ளது.
ஒரே படத்திற்காக மீண்டும் சூர்யாவுடன் இணையும் பாலா & சுதாகொங்கரா
ஆனால் பெரும்பாலான இவர்களது ரசிகர் மன்றங்கள் ஒன்றாகவே இயங்கி வந்தன.
ஆனாலும் தங்கள் சமூக சேவை பணிகளை தனித்தனி அறக்கட்டளை மூலமே நடத்தி வந்தனர்.
சூர்யா அகரம் பவுண்டேஷனையும், கார்த்தி உழவன் அறக்கட்டளையையும் தனித்தனியாக நடத்துகின்றனர். சூர்யா கல்விக்காகவும் கார்த்தி விவசாயத்திற்காகவும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கள் அறக்கட்டளைகளை போல ரசிகர் மன்றங்களையும் தனியாக பிரித்து செயல்பட அறிவுறுத்தி உள்ளனர்.
இது தங்கள் படங்களின் தனி தனி வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Suriya and Karhi separates his fan clubs