தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சூரியின் ‘விடுதலை’ படத்தில் வெற்றிமாறன் பிஸியாக இருப்பதால் சூர்யா தன் அடுத்த படத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார்.
இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
இதில் சூர்யா உடன் ஜோதிகா நடிக்கவுள்ளார் என்ற செய்தியை நாம் பார்த்தோம்.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது
ஏற்கனவே லிங்குசாமி இயக்கும் ’தி வாரியர்’ என்ற படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.
‘உப்பெனா, ஷியாம் சிங்க ராய்’ ஆகிய தெலுங்கு படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Suriya and Jyothika joins for a new film directed by Bala