தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எம்ஜிஆர் கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகியோர் முயற்சி செய்தும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்க முடியவில்லை என்பது நாம் அறிந்த செய்திதான்.
தற்போது பொன்னியின் செல்வன் நாவலை பிரம்மாண்டமாக திரைப்படமாகியுள்ளார் மணிரத்னம்.
இந்த திரைப்படம் இந்த மாதம் செப்டம்பர் 30ல் வெளியாகிறது.
இந்த நிலையில் இதே போன்று மற்றொரு நாவலை படமாக்க உள்ளார் இயக்குனர் ஷங்கர்.
இதில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளாராம்.
மதுரையில் நடைபெற்ற ‘விருமன்’ பட விழாவில் எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் ஒரு சுவாரஸ்ய பயணம் ஆரம்பித்து விட்டதாக பேசி இருந்தார். எனவே அந்த பயணம் இதுதான் என்பதாக கூறப்படுகிறது.
கூடுதல் தகவல்..
இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் தனுஷ் – வெற்றிமாறன் ஈடுபட்டதாக முன்னதாக கூறப்பட்டது.
தற்போது வெற்றி மாறன் இயக்கி வரும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதுவும் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.
சிவாவுடன் சூர்யா இணையும் படமும் 3டி-யில் சரித்திரப் படமாக உருவாகி வருவது இங்கே கவனிக்கத்தக்கது.