தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில தினங்களுக்கு முன் மதுரை மாவட்ட ரசிகர்களை சந்திக்கும்போது.. உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போட ஆசை. ஆனால், ராகவேந்திரா மண்டபம் சைவ மண்டபம் என்பதால் முடியவில்லை.
எனவே விரைவில் கிடா விருந்தளிப்பேன் என பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.
ஆனால் ரஜினி செய்வதற்கு முன்பே, அவரது மதுரை ரசிகர்கள் கிடா வெட்டி விருந்து வைத்துவிட்டனர்.
மதுரை அழகர் கோயில் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு, பொதுமக்களுக்கு ஆட்டுக்கறி விருந்தளித்து விழாவை நடத்தியுள்ளனர்.
பொது இடத்தில் கிடாக்களை மொத்தமாக வெட்டுவதை தவிர்க்கவும் என்று பீட்டா அமைப்பு கேட்டுக் கொண்டதால், ஆட்டுக்கறி கடையில் இருந்து கறி வாங்கி சமைத்து விருந்து வைத்துள்ளனர்.
இந்த விழாவை தொடங்கி வைக்க வந்த ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது…
“கார் துடைத்துக் கொண்டிருந்த என்னை நடிகராக்கி அழகு பார்த்தவர் ரஜினிகாந்த்.
எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அவர். மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால், எனது மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் குத்திக் கொண்டே இருக்கும் என்று ரஜினி சார் கூறியதைப் போல், என்னை வாழவைத்த ரஜினி அவர்களுக்கு, மக்களை பாதுகாக்க செல்லும் போது, அவருக்கு ஆதரவாக நான் நிற்கவில்லை என்றால், என் மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ விடாது”
ரஜினி அவர்களின் ஆன்மீக அரசியலில், நான் அவரின் காவலனாக இருப்பேன்.
கட்சி, சின்னம், கொள்கை எதுவும் அறிவிக்காமல் இருக்கும் போதே இவ்வளவு பரபரப்பு என்றால், அவற்றையெல்லாம் ரஜினி அறிவித்த பிறகு தான் உண்மையில் அரசியல்வாதிகளுக்கு தலை சுத்தப் போகிறது.
நடிகர்களை மக்கள் ஏற்கிறார்களா? இல்லையா? என்பதை தேர்தலுக்கு பின்பு தெரியும்.
தற்போது அரசியலை சாக்கடை என்கிறார்கள். ரஜினி வந்ததும் அரசியல் சுத்தமாகும். அவர் வந்தால் கோட்டையை பிடிப்பது உறுதி என்றார்.
Sure Rajinikanth will became Chief Minister of TN says Actor Lawrance