தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 25 வருடங்களாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த வாரம் ரஜினி பேசிய அரசியல் பேச்சு, தற்போது அதிகளவில் சூடுபிடித்துள்ளது.
இதனிடையில் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பா.ஜ.க-வில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
ஆனால் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என நாம் தமிழர் கட்சி சீமான் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.
அதுபோல் தமிழர் முன்னேற்றப்படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி தலைமையிலும் ரஜினி எதிராக போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று, ரஜினியை எதிர்ப்பவர்களை கண்டித்து ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, சீமான், வீரலட்சுமி ஆகியோர் உருவபொம்மையை எரிக்க ரசிகர்கள் முயன்றனர். இதையடுத்து ரசிகர்கள் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
Super Star Rajini fans protest against Seeman and Veeralakshmi