தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘சவுகார்பேட்டை’, ‘பொட்டு’, ‘கன்னியும் காளையும் செம காதல்’ ஆகிய படங்களை இயக்கிவர் வி.சி.வடிவுடையான்.
சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்ட இவர் இயக்கும் புதிய படத்தில் சன்னி லியோன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.
படம் குறித்து நடிகை சன்னி லியோன் கூறுகையில், ”தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் நாயகியாக நான் நடிக்கிறேன்.
தென்னிந்தியாவில் எனக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளாது, குறிப்பாக ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
கிளாமர் ரூட்டில் இனி பயணிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். சரித்திரப் படம் என்பதால் கத்திசண்டை, குதிரையேற்றம் போன்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறேன். படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன்.
இந்தப் படத்துக்குப் பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும்.
இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். வி.சி.வடிவுடையான் இந்தக் கதையை எனக்கு சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்கு தயாராக ஆரம்பித்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார் இந்த கவர்ச்சி புயல்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Sunny Leone to play a warrior queen in Tamil