தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் உள்ள எம்ஜி சாலையில், புதிய மொபைல் கடை திறப்பு விழாவுக்காக பாலிவுட் நடிகை சன்னி லியோன் வந்திருந்தார்.
அவரைக் காண ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலை முதலே அந்த கடை இருக்கும் பகுதியில் திரண்டனர்.
இதனால் அந்த பகுதியே மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
கட்டிடங்கள், பேருந்துகள், மெட்ரோ ரயில் தூண்களின் மீதும் ஏறி சன்னி லியோனை காண ரசிகர்கள் காத்திருந்தனர்.
சன்னி லியோன் மேடை ஏறிய பேசத் தொடங்கியதும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தன.
இந்த ஆரவாரத்தை பற்றி சன்னி லியோன் கூறியதாவது… ”கடவுளின் சொந்தப் பிரதேசமான கேரளத்தை நிச்சயம் மறக்க மாட்டேன்.
ரசிகர்களாகிய உங்களின் அன்பு மற்றும் ஆதரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
ஆனால் அங்கு கூடியிருந்த கூட்டத்தையும், வாகன நெரிசலையும் சமாளிக்க முடியாமல் திணறிய போலீசார் அந்த மொபைல் கடை நிர்வாகத்தின் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sunny Leone gets resounding welcome in Gods Own country Kerala