‘தர்பார்’ & ‘கர்ணன்’ பட ஸ்டைலில் சூர்யாவின் 40வது பட ஸ்டில் வெளியானது

‘தர்பார்’ & ‘கர்ணன்’ பட ஸ்டைலில் சூர்யாவின் 40வது பட ஸ்டில் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya 40 (1)‘சூரரைப் போற்று’ படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார் சூர்யா.

இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க தனது 40-வது படத்தில் ஒப்பந்தமானார் சூர்யா.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

இவர்களுடன் சத்யராஜ், வினய், சரண்யா, இளவரசு, சுபு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இப்பட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் தொடங்கிய போது சூர்யா கொரோனா தொற்றினால் வீட்டில் தனிமையில் இருந்தார்.

விரைவில் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்வார் என கூறப்பட்ட நிலையில் இன்று ஏப்ரல் 9 முதல் சூட்டிங்கில் நடித்து வருகிறார்.

அந்த பட ஸ்டில்லை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கையில் ஒரு வாளோடு நிற்கிறார் சூர்யா.

கடந்த வருடம் ரிலீசான ‘தர்பார்’ படத்தில் ரஜினியும் இன்று ரிலீசாகியுள்ள ‘கர்ணன்’ படத்தில் தனுஷும் இதே போன்று மிகப்பெரிய வாளோடு நிற்கும் காட்சிகள் ஸ்டில்கள் வெளியானது.

தற்போது சூர்யாவும் அதே போல் நிற்கும் பட ஸ்டில் வைரலாகி வருகிறது.

Sun pictures shares shooting spot pic of Suriya 40

ஜார்ஜியாவில் ‘தளபதி 65’..; வைரலாகும் விஐய் & நெல்சன் ஸ்டில்ஸ்

ஜார்ஜியாவில் ‘தளபதி 65’..; வைரலாகும் விஐய் & நெல்சன் ஸ்டில்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 65 (2)நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர் படக்குழுவினர்.

விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க அபர்ணா தாஸ் முக்கியக் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்பட பூஜை சமீபத்தில் சென்னையில் போடப்பட்டது.

இந்த நிலையில் ஏப்ரல் 6 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு படக்குழுவினர் ஜார்ஜியாவுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு 3 வாரங்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

ஜார்ஜியா செல்வதற்கு முன் சென்னை ஏர்போர்டில் விஜய் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

தற்போது ஜார்ஜியாவில் தளபதி விஜய்யுடன் நெல்சன் நிற்கும் புகைப்படத்தை படக்குழுவினர் பகிர அதை இணையத்தில் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Thalapathy 65 shooting spot pic goes viral

ஹைதராபாத் பறந்தார் ‘அண்ணாத்த’.; டென்ஷனில் ரஜினி ரசிகர்கள்.!

ஹைதராபாத் பறந்தார் ‘அண்ணாத்த’.; டென்ஷனில் ரஜினி ரசிகர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ், சூரி. சதீஷ் ஆகியோரும் உள்ளனர்..

‘அண்ணாத்த’ 2021 தீபாவளியில் திரைக்கு வருகிறது.

2020 கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் படப்பிடிப்பை நிறுத்தப்பட்டது.

ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

இருந்த போதிலும் சில நாட்கள் ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என் அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.

30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார்.

தற்போது கொரோனா 2வது அலை காலத்தில் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் அவரது ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

Superstar Rajinikanth leaves to Hyderabad for the shooting of his next film Annaatthe

தியேட்டர்களில் 50% சீட் அனுமதி.; ‘கர்ணன்’ ரிலீசாகுமா..? கலைப்புலி தாணு விளக்கம்

தியேட்டர்களில் 50% சீட் அனுமதி.; ‘கர்ணன்’ ரிலீசாகுமா..? கலைப்புலி தாணு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalaipuli thanuகலைப்புலி தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ’கர்ணன்’.

இதில் தனுஷுடன் லால், யோகி பாபு, நட்டி, அழகம் பெருமாள், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பட பாடல்களும் ’கர்ணன்’ டீசரும் பெரும் வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் படம் ரிலீசாவதால் ‘கர்ணன்’ படத்திற்கு ஏதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

‘கர்ணன்’ நாளை ஏப்ரல் 9ல் ரிலீசாகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கையாக ஏப்ரல் 10 முதல் தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் ‘கர்ணன்’ பட ரிலீஸில் சிக்கல் எழுமோ? திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா? என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் உருவானது.

இதற்கு விளக்கம் அளித்துள்ளார் கர்ணன் படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

அவரது ட்விட்டர் பதிவில்…

As promised #Karnan will arrive to theatres tomorrow. As per the need guidelines of our Govt #Karnan will be screened with 50% capacity in theatres along with proper safety measures. I kindly request everyone to provide your support for #Karnan

சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், #Karnan திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh #KarnanFromTomorrow

Kalai Puli S Thanu opens on Karnan theatrical release

கொரோனா 2வது அலை..: ஏப்ரல் 10 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள்..; கூடுதல் தகவல்கள்..

கொரோனா 2வது அலை..: ஏப்ரல் 10 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள்..; கூடுதல் தகவல்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டை 2020 என்று சொல்வதை விட கொரோனா ஆண்டு என்றே சொல்லலாம்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கிட்டத்தட்ட 6-7 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பின்னர் சில தளர்வுகள் இருந்தாலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டது.

தற்போது 2021லும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை தடுக்க தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

*தமிழக அரசின் கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் இதோ…*

திருவிழா , மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்.10 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது – தமிழக அரசு.

திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும் –

அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி –

பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.

ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மரண இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி.

ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு.

*கொரோனா கூடுதல் தகவல்கள்…*

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 1,26,789 பேருக்கு கொரோனா.

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்ட பிறகும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று.

கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு – சென்னை மாநகராட்சி.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 16,68,62 பேர் உயிரிழந்துள்ளனர் – மத்திய சுகாதாரத்துறை

கொரோனாவிலிருந்து மேலும் 59,258 பேர் குணமடைந்துள்ள நிலையில் 9,10,319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடன் தொடர்பில் இருந்த முக.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை.

கொரோனா பரவல் எதிரொலி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் மட்டும் ரத்து. ரூ 300 ஆன்லைன் முன்பதிவு உண்டு – திருப்பதி தேவஸ்தானம்.

மதுரையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் – மாநகராட்சி ஆணையர்.

கொரோன தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை தற்காலிக தடை – நியூசிலாந்து அரசு அறிவிப்பு

கொரோனாவை வீழ்த்த நம்மிடம் இருக்கும் சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று – பிரதமர் மோடி

கொரோனா தொற்று காரணமாக இயக்குநர் எஸ்பி.முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி.

பெங்களூருவுக்கு தமிழக அரசு பேருந்துகள் 2வது நாளாக இயக்கப்படவில்லை.

பிரதமர் மோடிக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி நீக்கம்.

மத்தியப் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாத 258 பேர் சிறையில் அடைப்பு.

வடகொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை – அதிபர் கிம் ஜாங் உன்.

Here’s everything about TN Lockdown 2021

ஏ ஆர் ரஹ்மான் தயாரித்துள்ள முதல் பட ’99 சாங்ஸ்’ பரிசுப்போட்டி.; ஜெயிச்சா வேற லெவல் சான்ஸ்.!

ஏ ஆர் ரஹ்மான் தயாரித்துள்ள முதல் பட ’99 சாங்ஸ்’ பரிசுப்போட்டி.; ஜெயிச்சா வேற லெவல் சான்ஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது முதல் தயாரிப்பான 99 சாங்ஸ் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், பரவசமூட்டும் போட்டி ஒன்றை இசை ரசிகர்களுக்காக ஏ ஆர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்..

“99 சாங்ஸ் திரைப்படத்தின் பாடல்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை ரசிகர்கள் தேர்ந்தெடுத்து, அதை அவர்கள் பாடி பதிவு செய்து அனுப்பலாம் என்று கூறியுள்ளார்.

போட்டியில் பங்கேற்பவர்கள், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பாடலை பதிவு செய்து, அதை யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் #99SongsCoverStar எனும் ஹேஷ்டாகை பயன்படுத்தி பதிவேற்ற வேண்டும். ரஹ்மானையும் (@arrahman) அவர்கள் டேக் செய்ய வேண்டும்.

பத்து வெற்றியாளர்கள் ஏ ஆர் ரஹ்மானையும், 99 சாங்ஸ் குழுவினரையும் காணொலி மூலம் சந்தித்து உரையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.

அதோடு, ஒரு வெற்றியாளருக்கு ஏ ஆர் ரஹ்மானோடு இணைந்து பணியாற்றும் மாபெரும் வாய்ப்பு வழங்கப்படும்.

இணைப்பு: https://twitter.com/arrahman/status/1379853398170726401?s=19

சமூக வலைதளங்களில் உள்ள ரசிகர்கள் மற்றும் கலைஞர்களை இந்த அறிவிப்பு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களது பாடல் பதிவுகளை பலரும் அனுப்பி வருகின்றனர்.

2021 ஏப்ரல் 16 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தியா முழுவதும் ‘99 சாங்ஸ்’ வெளியாகிறது.

ஜியோ ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.

AR Rahman announces a contest for all music lovers to celebrate 99 Songs

More Articles
Follows