ப்ப்ப்பா… இன்னா ஒரு ஆட்டம்..; கமலுக்கு ஓட்டு போட நடுரோட்டில் மகள்கள் ஆட்டம்

ப்ப்ப்பா… இன்னா ஒரு ஆட்டம்..; கமலுக்கு ஓட்டு போட நடுரோட்டில் மகள்கள் ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 6ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவரின் அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அதுபோல் கமலின் 2வது மகளும், நடிகையுமான அக்ஷராஹாசனும் பிரச்சாரம் செய்தார்.

அப்போது கமலுக்கு ஓட்டு போட சொல்லி அக்ஷராவும் சுஹாசினியும் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டனர்.

அதனை வீடியோ படம் பிடித்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவிட அது இப்போது வைரலாகி வருகிறது.

Suhashini and Aksharahassan road dance for Kamal MNM Campaign

மக்களுக்காக ஓடி ஓடி உழைச்ச எங்க அப்பாவை ஒழிச்சிட்டீங்க.. – விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரம்

மக்களுக்காக ஓடி ஓடி உழைச்ச எங்க அப்பாவை ஒழிச்சிட்டீங்க.. – விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijaya prabakaran (2)ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ்நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க வேட்பாளராக மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பாஸ்கரன் என்பவர் போட்டியிடுகிறார்.

ஆரணி அருகே தே.மு.தி.க வேட்பாளர் பாஸ்கரனை ஆதரித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரம் செய்தார்.

அவர் பேசியதாவது…

“40 ஆண்டு காலம் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்தவர் எங்கள் அப்பா.

அவரை நீங்கள் (மக்கள்) எல்லாம் சேர்ந்து ஒழித்துவிட்டீர்கள்.

எனக்காவது வாய்ப்பு கொடுங்கள்.

தே.மு.தி.க வேட்பாளர் பாஸ்கரனை வெற்றி பெற வைத்தால் இங்கேயே 3 மாதம் தங்கி தொகுதிக்காக நான் பாடுபடுவேன்.

விருத்தாசலத்தில் தேமுதிக வெற்றி பெற்றால் விஜயகாந்த் தன்னுடைய சொந்த பணத்தில் நலதிட்டங்கள் செய்தது போல் என்னுடைய சொந்த பணத்தில் ஆரணி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்வேன்.”

என பேசினார் விஜயபிரபாகரன்.

Vijaya Prabakaran speech during election campaign

கமல் அண்ணன் சந்திரஹாசனின் கடைசி படம்.; கை கொடுக்கும் விஜய்சேதுபதி

கமல் அண்ணன் சந்திரஹாசனின் கடைசி படம்.; கை கொடுக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் அண்ணன் சந்திரஹாசன் மற்றும் சாருஹாசன்.

சில வருடங்களுக்கு முன்பு சாருஹாசன் 90 வயதில் நாயகனாக நடித்த ‘தாதா 87’ படம் வெளியானது.

அதுபோல் மற்றொரு அண்ணன் சந்திரஹாசன் கடைசியாக நடித்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

தயாரிப்பாளருமான சந்திரஹாசன் கடந்த 2017ல் மார்ச் மாதத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.

அந்த வயதிலும் அவர் நாயகனாக நடித்த படம் தான் ‘அப்பத்தாவ ஆட்டய போட்டாங்க’.

இந்த வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்ட படத்தினை ஸ்டீபன் ரங்கராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

சந்திரஹாசனுடன் இளவரசு, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் சந்திரஹாசனுக்கு ஜோடியாக, நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலா நடித்துள்ளார்.

இவர்களுடன், காத்தாடி ராமமூர்த்தி, ஷண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரவீன் குமார்.என்.,
இசை – அஸ்வமித்ரா,
படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம்,
பாடல்கள் – செல்வகுமார், கலை – ஏ.கே.முத்து, இணை தயாரிப்பு – செல்வகுமார், தயாரிப்பு – பிரான்சிஸ் ஆல்பர்ட், ஆண்டனி, வி.எஸ்.ராஜ்குமார், எழுத்து, இயக்கம் – என்.ஸ்டீபன் ரங்கராஜ்.

ஒரு முதியோர் இல்லத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி.. அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள்.. காதலை காப்பாற்ற கைக்கொடுக்கும் நண்பர்கள்.. இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை நகைச்சுவையாக புதுமுக இயக்குநரான ஸ்டிபன் ரங்கராஜ் சொல்லியிருக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நாளை 2021 ஏப்ரல் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு இப்பட டிரைலரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிடுகிறார்.

Vijay Sethupathi releases the trailer of Appaththava Aattaya Pottutanga

நம் தட்டுக்கு ரசிகர்களே உணவு அளிக்கின்றனர்..; சூடானார் ‘சுல்தான்’ படத் தயாரிப்பாளர்

நம் தட்டுக்கு ரசிகர்களே உணவு அளிக்கின்றனர்..; சூடானார் ‘சுல்தான்’ படத் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ‘சுல்தான்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேற்று தியேட்டர்களில் ரிலீசானது.

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விவேக் மெர்வின் இசையமைக்க ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்த படம் தெலுங்கில் நல்ல வசூல் வேட்டையாடி வருகிறது.

நேற்று நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ‘வைல்டு டாக்’ படத்துடன் மோதியது.

அந்த படம் முதல் நாளில் 1 கோடி வசூலித்த நிலையில், ‘சுல்தான்’ படமும் அதற்கு நிகரான வசூலை அள்ளியுள்ளதாம்.

இந்த நிலையில் இந்த தமிழ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் & நெகட்டிவ் விமர்சனங்களை ஏற்பதாக படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டரில்…

” கார்த்திக்கு ‘சுல்தான்’ படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் சிறந்த ஓபனிங் படம். “பெரிய ஓபனிங் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மொத்த திரையுலகத்திற்கும் இப்படம் சுவாசம் அளித்துள்ளது. மொத்த ஹவுஸ்புல் காட்சிகளும் எங்கள் இதயத்தில் மகிழ்வை நிரப்பியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

அவரது அடுத்த ட்வீட் பதிவில்..

“எங்களது பல படங்கள் விமர்சகர்களின் ஆதரவைப் பெற்றவை. அவர்களுக்கு எப்போதுமே நன்றி.

ஆனால், ‘சுல்தான்’ பற்றி சிலருக்கு வேறு கருத்துக்கள் உள்ளது., அதையும் மதிக்கிறேன். ஆனாலும், வார்த்தைகளில் கொஞ்சம் கண்ணியம் இருக்கலாம். இது வெறும் சினிமா தான், ஆனால் ரசிகர்கள் தான் நமது தட்டுக்களுக்கு உணவை அளித்து வருகின்றனர்,” எனப் பதிவிட்டுள்ளார்.

So happy and grateful to audience for giving us a grand opening. Indeed a career best opening for #Sulthan @Karthi_Offl. It has become a breather for the whole film industry in this difficult time. All full shows makes our heart filled with joy! Thanks again! #JaiSulthan

Many of our films have been supported by reviewers. I am always thankful to them. Few may have other opinions about #Sulthan. I value that. But let’s keep some decency in our choice of words. After all it is CINEMA and AUDIENCE who bring food to (y)our plates! #SulthanReview

Sulthan producer tweets on negativity

எப்படி இருந்த சிம்பு இப்படி மாறிட்டாரே..; எளிய மனிதர் STRஐ பாராட்டிய வெங்கட் பிரபு

எப்படி இருந்த சிம்பு இப்படி மாறிட்டாரே..; எளிய மனிதர் STRஐ பாராட்டிய வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிம்பு… இவரை சுற்றி எப்போதுமே பல சர்ச்சைகள் இருக்கும்.. காதல் கிசு கிசு முதல் பீப் சாங் வரை பல ப்ளாஷ்பேக் கதைகள் உள்ளன.

இவையில்லாமல் சூட்டிங்க்கு லேட்டாக வருதல், கால்ஷீட் சொதப்பல், சூட்டிங்கில் லீவு கேட்பது என பல வகைகளில் இவரது பெயர் கெட்டப் பெயரானது.

ஆனால் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு முற்றிலும் மாறிவிட்டார் சிம்பு.

ஒரே மாதத்தில் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ படத்தை முடித்து கொடுத்தார்.

தற்போது ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பு தளத்தில் கேரவன் கூட கேட்காமல் மண் தரையில் படுத்து தூங்கியுள்ளார் சிம்பு.

இந்நிலையில் இப்பட இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை “எளிய மனிதர்.. நடிகர்களின் வாழ்க்கை…” என குறிப்பிட்டு 2 புகைப்படங்களை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

ஒரு படத்தில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்குகிறார்.

மற்றொரு படத்தில் சிம்புவின் பக்கத்தில் நின்று எஸ்.ஜே.சூர்யா பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படங்களை சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்குகின்றனர்.

Actors life!!! Man of simplicity!!! #nightshoot #Maanaadu in between shots!! @SilambarasanTR_ @iam_SJSuryah #candidshot https://t.co/rCtrpD97cV

STR Maanaadu (1)

STR Maanaadu (2)

STR’s recent pic goes viral

‘கர்ணன்’ இடைவேளை காட்சியில் எழுந்திரிச்சி நின்னு கை தட்டுவீங்க… க்ளைமாக்ஸ் வேற லெவல்..; சொன்னது யார்..?

‘கர்ணன்’ இடைவேளை காட்சியில் எழுந்திரிச்சி நின்னு கை தட்டுவீங்க… க்ளைமாக்ஸ் வேற லெவல்..; சொன்னது யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhilip subbarayanமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’.

கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஓரிரு பாடல்கள் சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக ‘பண்டாரத்தி…’ என்ற பாடல் சர்ச்சையில் சிக்கியதால், அந்த வார்த்தையை ‘மஞ்சனத்தி…’ என மாற்றிவிட்டனர்.

இதில் உரிமைக்காக போராடும் அடித்தட்டு மனிதனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

இப்படம் அடுத்த வாரம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது.

எனவே காலம் குறைவாக இருப்பதாலும் மேலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க நினைப்பதாலும் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

‘கர்ணன்’ படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து ஸ்டண்ட் மாஸ்டரும் நடிகருமான திலீப் சுப்ராயன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

“காலத்திற்கு பேர் சொல்லும் படமாக கர்ணன் இருக்கும்.. 16 வயதினிலே படத்தை இன்று வரை கொண்டாடுகிறோம்.

அதுபோல தனுஷ் மாரி செல்வராஜுக்கு ‘கர்ணன்’ படம் இருக்கும்.

இடைவேளை காட்சிகளில் எழுந்திரிச்சி நின்னு கை தட்டுவீங்க… க்ளைமாக்‌ஸ் காட்சி இடைவேளையை விட 3 மடங்கு வேற லெவலில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

This popular stunt director praises Karnan the movie

More Articles
Follows