தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சினிமா சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமானவர் கனல் கண்ணன்.
இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
கனல் கண்ணன் சமீபத்தில் ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.
அதில், மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர், இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோவும், அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அதில் வெளிநாட்டு மத கலாசாரம் இது தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன்பின்னர் மதப் பிரச்சனையை தூண்டும் வகையில் பதிவிட்டதற்காக, கைது செய்யப்பட்டார் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன். இதனையடுத்து நீதிமன்ற காவலில் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டதாக, காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Stunt choreographer Kanal Kannan arrested remanded to jail custody