தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மார்ச் மாதம் தொடங்கியது முதல் தமிழ் திரையுலகம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
தற்போது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் தினம் தினம் நடந்து வருகிறது.
தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்திற்கு திடீரென சிம்பு வந்தார்.
அவரின் வருகையை நடிகர் விஷால் உட்பட பலரும் பாராட்டினர்.
அவர் பேசும்போது…
தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். கடவுள் புண்ணியத்தில் அதில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.
அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் மட்டும் பிரச்சினை சரியாகாது. நான் இலவசமாகக் கூட நடித்துக் கொடுப்பேன்.
அப்போதுதான் ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது சம்பந்தப்பட்ட ஹீரோக்களுக்கும் தெரியும்.
கறுப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்” என்று பேசியிருக்கிறார்.
ஹீரோக்கள் அதிகம் சம்பளம் கேட்பதால் பட்ஜெட் அதிகமாகிறது என்று சில தயாரிப்பாளர்கள் கூறிவந்த நிலையில், சிம்புவின் எதிர்பாராத இந்த பதில் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதாம்.
STR aka Simbu open talk about Heros salary and Black money issue