தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் 2023 பொங்கல் பண்டிகைக்கு திரையில் மோத உள்ளன .
இரு படங்களும் படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால் இந்த படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் உதயநிதி தான் ‘வாரிசு’ படத்தையும் ஐந்து ஏரியாக்களில் வெளியிடுகிறார்.
ஆனாலும் மற்ற ஏரியாக்களிலும் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியன் இந்த மோதல் குறித்து தன் கருத்தை தெரிவித்தார்..
அவர் கூறியுள்ளதாவது… “அஜித் – விஜய் ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது.
‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எனவே இரு படங்களுக்கும் சரிசமமாக பிரித்து தியேட்டர்களை ஒதுக்க வேண்டும்.
அந்தப் படத்தின் கதை தான் வெற்றியை தீர்மானிக்கும்” என தெரிவித்துள்ளார்.