திமுக விழாவில் பங்கேற்க ரஜினி-கமலை அழைத்த ஸ்டாலின்

திமுக விழாவில் பங்கேற்க ரஜினி-கமலை அழைத்த ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalinவருகிற ஆகஸ்ட் 10ஆம்தேதி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முரசொலி நாளிதழின் பவளவிழா நடைபெறவுள்ளது.

இதில் பல அரசியல் பிரமுகர்கள் கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள்.

இந்நிலையில் இதில் கலந்துக் கொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு முக.ஸ்டாலின் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இருவரும் கலந்துக் கொள்வார்கள் என்றே சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினியும், தமிழக அரசியலில் ஊழல் பெருத்துவிட்டது என கமலும் கூறி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவின் எதிரிக்கட்சியான திமுக விழாவில் இவர்கள் கலந்துக் கொள்ள இருப்பதால், இவ்விழா பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது

நிஜத்திலும் துப்பறிவாளன் ஆகி திருடனை கண்டுபிடித்த விஷால்

நிஜத்திலும் துப்பறிவாளன் ஆகி திருடனை கண்டுபிடித்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal stills in thupparivalanவிஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. இதில் விஷாலுடன் பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

மிஷ்கின் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் விஷால் பேசும்போது, ‘பாண்டிய நாடு’ படம் ஒரு சிறந்த தயாரிப்பாளராக எனக்கு பெயர் பெற்று கொடுத்தது.

அதைவிட சிறந்த பெயரை ‘துப்பறிவாளன்’ எனக்கு பெற்று தரும். 8 வருஷமா நானும் மிஷ்கினும் படம் பண்ண வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டே இருந்தோம்.

ஆனால், சில காரணங்களால் நடக்கவில்லை. தற்போதுதான் அது நடந்திருக்கிறது. 2 சைக்கோவும் சேர்ந்து எப்படி பண்ண போகிறார்கள் என்று நிறைய பேர் பேசிக்கொண்டார்கள்.

துப்பறிவாளன் படத்தில் சண்டைக் காட்சி சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தில் என்னை அழகாக காண்பித்திருக்கிறார்கள் என்றால், அது ஒளிப்பதிவாளரைத்தான் பாராட்ட வேண்டும்.

நான் பார்த்த வியந்த நடிகை சிம்ரன். அவருடன் இப்படத்தில் நடித்தது மறக்க முடியாத நாள். அதற்கு மிஷ்கினுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

இணைய தளத்தில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் என்பவரை துப்பறிந்து விட்டேன். அவன் யார் என்று எனக்கு தெரியும். இன்னும் 2 வாரங்களில் மக்கள் மத்தியில் சொல்லிவிடுவேன்.

என்னை காமராஜ் என்று அழைக்கிறார்கள். ஆனால், அவரை மாதிரி நேர்மையாக இருப்பேன். அவரைப்போல் கல்யாணம் பண்ணாமல் இருக்க முடியாது. லட்சுமிகரமானவர் என்னிடம் சண்டைக்கு வருவார்’ என்றார்.

யார் அந்த லட்சுமியோ..?

தமிழ் தலைவாஸ் அணியின் தூதரானார் கமல்ஹாசன்

தமிழ் தலைவாஸ் அணியின் தூதரானார் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan at tamil thalaivas eventவிவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது.

11 மாநிலங்களில் இருந்து 12 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் 130 ஆட்டங்கள் சுமார் 13 வார காலம் நடைபெற உள்ளன.

இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

சச்சின் டெண்டுல்கர் இணை உரிமையாளராக உள்ள தமிழ்நாடு அணி ‘தமிழ் தலைவாஸ்’ என்ற பெயரில் களமிறங்குகிறது.

இந்த அணியின் பயிற்சியாளராக பாஸ்கரனும், கேப்டனாக அஜய் தாகூரும் உள்ளனர். இந்த தொடரின் பரிசுத் தொகை ரூ.8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டம் வரும் 28-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இதில் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கபடி விளையாட்டுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன். முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். என் அருமை தலைவாஸ், உங்கள் மனதில் பெருமை பொங்க, கோட்டை தாண்டி புகழை சூடிடுங்கள்” என்றார்.

இதற்கிடையே தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா இன்று பிற்பகலில் சென்னையில் நடைபெறுகிறது.

கமல்ஹாசன் ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்து உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

பிக்பாஸில் ஓவியா திட்டிய வார்த்தையே பாடலானது

பிக்பாஸில் ஓவியா திட்டிய வார்த்தையே பாடலானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss Oviyaவிஜய் டிவியில் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்கேற்ற ஓவியா, ஒரு முறை மற்ற போட்டியளாரை பார்த்து ஷட்டப் பன்னுங்க என பேசினார்.

இது வார்த்தை படு பாப்புலராகி ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் இந்த வார்த்தையை கொண்டு ஒரு புதிய பாடலை உருவாக்கியிருக்கிறார்களாம்.

ஜெய், அஞ்சலி நடித்துள்ள பலூன் என்ற படத்தில்தான் இந்த பாடல் இடம்பெறுகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடல் ப்ரோமோ பாடல் என கூறப்படுகிறது.

நல்ல கணவராக இல்லாத கமல் எப்படி நல்ல தலைவராக முடியும்… ஓ.எஸ்.மணியன்

நல்ல கணவராக இல்லாத கமல் எப்படி நல்ல தலைவராக முடியும்… ஓ.எஸ்.மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and Minister OS Manianதமிழக அரசியல் மற்றும் ஊழல் குறித்து கமல்ஹாசன் பேசியதால், தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

கமலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமலுக்கு நடிக்கத் தெரியும் ஆனால் அரசியல் தெரியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார்.

மேலும் மற்ற அமைச்சர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கட்சியை சேர்ந்த ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளதாவது…

“தன் மனைவிக்கு நல்ல கணவராக கமல் இல்லை. அவரின் பிள்ளைகளுக்கும் நல்ல தந்தையாக இல்லை.

மொத்த்த்தில் அவர் ஒரு நல்ல குடும்பஸ்தனாக இல்லை.

பின்பு அவர் எப்படி மக்களுக்கு நல்ல தலைவராக முடியும்.” என்று பேட்டியளித்துள்ளார்.

பாலுமகேந்திராவின் உதவியாளர் ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’

பாலுமகேந்திராவின் உதவியாளர் ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Balu Mahendra Asst Arumugam directed Puyalaai Kilambi Varom movie

பாலு மகேந்திராவின் உதவியாளர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’ படம்
ஜூலை 28-ல் வெளிவருகிறது.

ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி.ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ‘ புயலாய் கிளம்பி வர்றோம்’.
இது மதுரை மண் சார்ந்த கதை.

படித்து விட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் கோழைகள் அல்ல. அவர்களைச் சீண்டி விட்டால் தாங்க முடியாது என்று சொல்கிற கதை.

நாயகனாக தமன், நாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளனர். தவிர இயக்குநர் ஆர்.என்.ஆர். மனோகர், சிங்கம்புலி, திருமுருகன், அழகன் தமிழ்மணி, ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ள ஜி.ஆறுமுகம் பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சில குறும்படங்கள் இயக்கிய அனுபவமும் கொண்டவர்.
இயக்குநரிடம் படம் பற்றிக் கேட்ட போது,

” இது படித்த இளைஞர்களின் கோபத்தின் முன் எப்படிப் பட்ட பலசாலியும் வீழ்ந்து விடுவான் என்று சொல்கிற கதை.

இது மதுரைப் பகுதியில் நடக்கும் கதை என்றாலும் மதுரை, சென்னை, கொடைக்கானல், பாண்டிச்சேரி போன்ற பல ஊர்களில் படப்பிடிப்பு நடந் துள்ளது. பல நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம்.

31 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தோம்.” என்றவர் தயாரிப்பாளரை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

” தயாரிப்பாளருக்கு இதுதான் முதல் படம். நானும் அறிமுக இயக்குநர் தான். இருந்தாலும், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு ஒரு நாளும் அவர் வந்ததில்லை.

படத்தில் வேலை பார்த்தவர்களுக்கே நான் தான் தினமும் பணப்பட்டுவாடா செய்தேன். அந்த அளவுக்கு என்னிடம் நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்தவர் அவர். ” என்கிறார்.

இப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் விஜய்.வி., இசையமைத்திருப்பவர் சார்லஸ் தனா இருவருக்கும் இதுவே முதல் படம். எடிட்டிங் – எஸ்.சதிஷ் குமார், வசனம் கே.நந்தகுமார், கலை இயக்கம் – முத்துவேல், நடனம் -பாலாஜி, தினா, ராதிகா. ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ், தயாரிப்பு நிர்வாகம் -ஒய்.எஸ்.டி. சேகர்.

படத்துக்குத் தணிக்கை முடிந்து யூ சான்றிதழ் கிடைத்து இருக்கிறது.

‘ புயலாய் கிளம்பி வர்றோம் ‘படம் ஜூலை 28-ல் வெளியாகிறது.

Balu Mahendra Asst Arumugam directed Puyalaai Kilambi Varom movie

Puyalaai Kilambi Varom movie stills

 

More Articles
Follows