ராம் சரண் – ஜுனியர் என்.டி.ஆர் – அஜய் தேவ்கன் – சமூத்திரகனி நடிக்கும் “ஆர் ஆர் ஆர்”

ராம் சரண் – ஜுனியர் என்.டி.ஆர் – அஜய் தேவ்கன் – சமூத்திரகனி நடிக்கும் “ஆர் ஆர் ஆர்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RRR press meet stillsஇந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் “ஆர்.ஆர்.ஆர்”

300 கோடி ரூபாய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.

அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் “ஆர் ஆர் ஆர்” படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க, உடன் சமூத்திரகனி நடிக்கின்றார். நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நாட்டின் நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் நடிக்கின்றனர்.

இரண்டு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 1920 களின் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகின்றது.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் இத்திரைப்படம் ஜூலை 30, 2020 உலகெங்கும் வெளியாகவுள்ளது.

“RRR” என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் படத்தலைப்பு. இருப்பினும், மொழிகளுக்கு ஏற்றவாறு படத்தின் தலைப்பு சுருக்கப்பட்டிருக்கும். ரசிகர்கள் படத்தின் தலைப்பை விரிவாக்கம் செய்து அவர்களது அபிமான படத்தலைப்புகளை #RRRTitle என்ற ஹஷ்டக்குடன் ட்வீட் செய்யலாம். அவர்களின் தலைப்பு படத்திற்கு சரியாக தலைப்பாக இருந்தால் அதையே படத்தின் தலைபாக சூட்டுவோம் என்கின்றனர் படக்குழுவினர்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா தமிழரசன் படத்தில் நடிக்கிறார்

இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா தமிழரசன் படத்தில் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sangeethaஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ”

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

மற்றும் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். மிக முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார்…இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து தூள் கிளப்பிய சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார்.

இது பற்றி சங்கீதாவிடம் கேட்டோம்…

எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன்.

இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப் படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம் இது. இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது என்றார்..

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்

இசை – இளையராஜா

பாடல்கள் – பழனிபாரதி, ஜெய்ராம்

கலை – மிலன்

ஸ்டண்ட் – அனல் அரசு

எடிட்டிங் – புவன் சந்திரசேகர்

நடனம் – பிருந்தா சதீஷ்

தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்

தயாரிப்பு – கெளசல்யா ராணி

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது…

யோகிபாபு நடிக்கும் “பட்டிபுலம்”

யோகிபாபு நடிக்கும் “பட்டிபுலம்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu in pattibulamசந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு
“பட்டிபுலம்” என்று பெயரிட்டுள்ளனர்…

இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார்

கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்…இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர்…

மற்றும் சேரன் ராஜ் சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ..ஆர்.கே.வர்மா

இசை..வல்லவன்

எடிட்டிங்…ஆர்.ஜி.ஆனந்த்

கலை..வீரசமர்..

நடனம் …விஜய் ரக்‌ஷித்

ஸ்டண்ட்.. மகேஷ்

பாடல்கள்..மா.கா.பா.ஆனந்த்..வல்லவன் கானா ராஜேஷ் கானா வினோத்

தயாரிப்பு மேற்பார்வை…அயன்புரம் ராஜு

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ்…இவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றியவர்…

தயாரிப்பு …திருமுருகன்…

படம் பற்றி இயக்குனர் சுரேஷிடம் கேட்டோம்…

நான் ஷக்திசிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன்…

அந்த பார்முலா படி யோகி பாபுவௌ இந்த பட்டிபுலத்தில் பயன் படுத்திக் கொண்டேன். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை ..படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார்.. அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப் படுத்தி இருக்கிறார்.

கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கு..அந்த ஊரில் உள்ள சில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது …ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பது தான் கதை…

இதை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம்..

படத்தில் யோகி பாபுவுக்கு பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம்..

படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது..என்றார்.

ஹீரோ யார்..? சிவகார்த்திகேயன்-விஜய் தேவரகொண்டா மோதல்

ஹீரோ யார்..? சிவகார்த்திகேயன்-விஜய் தேவரகொண்டா மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarhtikeyan and vijay devarakondaமிஸ்டர் லோக்கல் படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதன் பின்னர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சிவாகார்த்திகேயன்.

இப்பட பூஜை நேற்று போடப்பட்டது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என்று புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“நான் காக்கா முட்டை படத்துக்கு வசனம், குற்றமே தண்டனை படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளேன்.

தற்போது என் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஹீரோ படத்தை இயக்க இருக்கிறேன்.

படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இப்பட தலைப்பை ஒரு வருடத்திற்கு முன்பே பதிவு செய்துள்ளேன்.

ஆனால் திடீரென்று சிவகார்த்திகேயன் படத்துக்கு ஹீரோ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

ஹீரோ தலைப்பு எங்களுக்கே சொந்தம். யாருக்கும் விட்டுத்தர முடியாது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் எழுதவுள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயம் ரவியின் 26வது படத்தை இயக்கும் அஹமது

ஜெயம் ரவியின் 26வது படத்தை இயக்கும் அஹமது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam ravi 26ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அடங்க மறு’.

இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ‘கோமாளி’ படத்தில் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்க வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இதில் ஹீரோயின்களாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, கோவை சரளா, பிரேம்ஜி அமரன், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோரும் நடிக்க ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து ஜெயம் ரவியின் 25-வது படமாக ‘தனி ஒருவன் 2’ படம் உருவாகவுள்ளது. இப்படத்தை அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்குகிறார்.

இதனையடுத்து ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களை இயக்கிய அஹமது இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம் ஜெயம் ரவி.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan romance with Aishwarya Rajesh in Pandiraj directionநடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது உருவாகவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் விவரம் வருமாறு…

‘Mr. லோக்கல்’ படத்தை முடித்து விட்டு மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் ஷூட்டிங், நேற்று தொடங்கியது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஏப்ரல் இறுதியில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.

இதில் தான் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Sivakarthikeyan romance with Aishwarya Rajesh in Pandiraj direction

More Articles
Follows