ஹன்ஷிகா மோத்வானியின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ஶ்ரீகாந்த் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண் கதாப்பாத்திரத்தை முன்னணி பாத்திரமாக கொண்டு திரில்லர் பாணியில் உருவாகும் “மகா” படத்தில் ஹன்ஷிகா மோத்வானி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. தற்போது இப்படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிகர் ஶ்ரீகாந்த் நடிக்கிறார். வித்தியாசமான வேடங்களை தேடிப்பிடித்து நடிக்கும் ஶ்ரீகாந்த் “மகா” படத்தில் ‘விக்ரம்’ எனும் பாத்திரத்தில் போலீஸ் கமிஷ்னராக நடிக்கிறார். மிக ஆச்சர்யம் என்னவெனில் இவரது கதாப்பாத்திரம் படம் முழுதும் பயணிக்கும்படியானது. இவர் பங்குபெறும் பகுதிகள் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார்த்தி வைக்கும் திரில் தருணங்களை கொண்டிருக்கும். ஶ்ரீகாந்த் நடித்திருக்கும் காட்சிகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீகாந்த் இக்கதாப்பாத்திரத்திற்காக தந்திருக்கும் உழைப்பு இப்படத்தை அவர் சினிமா வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக மாற்றியுள்ளது. இப்படத்தில் நடிகர் கருணாகாரன், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Etcetera Entertainment சார்பில் V. மதியழகன் இப்படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் U.R. ஜமீல் இப்படத்தை இயக்குகிறார். ஹன்ஷிகா மோத்வானி மற்றும் சிம்பு ஜோடியாக நடிக்கிறார்கள் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடியுள்ளது. படத்தின் புகைப்படங்கள் வைரலாக பரவி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் வரும் 2020 மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி 21ல் மோதும் பாரதிராஜா-அருண் விஜய்-நட்டி-போஸ் வெங்கட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வாரம் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 21ல் மோதவுள்ள படங்கள் என்ன? என்ன என்பதை பார்ப்போம்.

பாரதிராஜா நடித்துள்ள மீண்டும் ஒரு மரியாதை படம் வெளியாகிறது.

பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை இயக்கியுள்ளார்.

வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதை தான் இந்த படம்.

இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு முதலில் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டது.

இப்போது முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது.

என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார்.

இதனையடுத்து லைகா தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள மாஃபியா படம் வெளியாகவுள்ளது.

இதில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

நட்டி நட்ராஜ் மற்றும் லால் இணைந்து நடித்துள்ள காட்ஃபாதர் படமும் வெளியாகவுள்ளது.

ஜெகன் ராஜ்சேகர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நட்டி நட்ராஜ் அதியமான் என்ற கேரக்டரிலும் லால் மருது சிங்கம் என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

‘பர்ஸ்ட் கிளாப் எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் ‘ஜி.எஸ்.ஆர்ட்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு நவீன் ரவிந்திரன் இசை அமைக்க, என்.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பை கவனிக்க அருண் சங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார்.

நடிகராக ஜொலித்த போஸ் வெங்கட் முதன்முறையாக இயக்கியுள்ள கன்னி மாடம் படமும் வெளியாகிறது.

ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் குட்டி தேவதை என்ற படமும் வெளியாகவுள்ளது.

கார்த்திக் நரேன் தான் அடுத்த ரவிக்குமார்-ஹரி-சுந்தர் சி… பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் நரேன்.

அதன்பின்னர் நரகாசூரன் படத்தை எடுத்தார். இவருக்கும் அப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பிரச்சினையால் அப்படம் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது 3வது படமாக லைகா தயாரிப்பில் மாஃபியா படத்தை எடுத்துள்ளார்.

இந்த படம் வருகிற பிப்ரவரி 21ல் வெளியாக உள்ளது.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரசன்னா பேசியதாவது…

“இந்தப் படத்தை 33 நாட்களில் முடித்துவிட்டார் கார்த்திக் நரேன்.

இதன் கிளைமாக்ஸ் காட்சிக்காக பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 2 லட்ச ரூபாய் வாடகை கொண்ட ஒரு சூட்டில் படப்பிடிப்பு நடந்தது.

அங்கு மூன்று நாட்களில் எடுக்க வேண்டிய ஒரு காட்சிகளை ஒரே நாளில் எடுத்து முடித்தார். இவர் எப்படி எடுப்பார் என காத்திருந்த அனைருவருக்கும் அதிர்ச்சி.

3 நாள் படப்பிடிப்பு செலவை தயாரிப்பாளருக்கு மிச்சப்படுத்தினார்.

இதற்கு முன் கே.எஸ்.ரவிக்குமார், ஹரி சுந்தர் சி ஆகியோரின் திட்டமிடல் இப்படிதான் இருக்கும். அதான் அவர்கள் இன்றும் படங்களை இயக்குகிறார்கள்.

எனவே என்னை பொறுத்த கார்த்திக் நரேன் தான் அடுத்த கே.எஸ்.ரவிக்குமார், ஹரி சுந்தர் சி” என்பேன்.

ஹர்பஜன்சிங் & லாஸ்லியா கூட்டணியில் இணைந்தார் அர்ஜுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஹர்பஜன் சிங்.

இவர் முதன்முறையாக ‛பிரண்ட்ஷிப்’ என்ற படத்தின் முமூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

ஷேண்டோ ஸ்டுடியோஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா தயாரிக்கிறார்கள்.

இதில் ஹர்பஜன்சிங்குக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லொஸ்லியா நடிக்கிறார்.

தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார்.

இவர் வழக்கம்போல போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

உங்க இஷ்டத்துக்கு கோர்ட் செய்யனுமா..? தர்பார் டைரக்டருக்கு நீதிபதி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் இணைந்த ‘தர்பார்’ படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியானது.

இந்தியளவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் தமிழகத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சில விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் ரஜினி மற்றும் முருகதாஸை சந்திக்க சென்றனர்.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், பதில் அளிக்கும்படி போலீஸ் கமி‌‌ஷனருக்கு உத்தரவிட்டு இருந்தார் என்பதை பார்த்தோம்.

இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது

அப்போது முருகதாஸின் வக்கீல், ‘போலீசார் பதிவு செய்த வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை’ என கூறினார்.

முதலில், ‘பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வார்கள். பதில் அளிக்க போலீசுக்கு ஐகோர்ட்டும் உத்தரவிடும்.

போலீசாரும் அதன்படி வழக்குப்பதிவு செய்வார்கள். அதன்பின்னர் நடவடிக்கை வேண்டாம். என்று கூறினால், இந்த ஐகோர்ட்டு மனுதாரர் (முருகதாஸ்) விருப்பப்படி செயல்படனுமா’ என்று கண்டனம் தெரிவித்தார்.

பின்னர், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

விவேக் & சார்லியின் ‘வெள்ளைப்பூக்கள்’ 2ஆம் பாகம் தயாராகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய கதை எதுவும் கிடைக்காவிடில் ஏற்கெனவே ஹிட்டான படங்களை ரீமேக் செய்வது அல்லது ஹிட்டான படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதை சில இயக்குனர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இரண்டாம் பாக படங்கள் பெரும்பாலும் தோல்வியை தழுவி வருகிறது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியான படம் வெள்ளைப் பூக்கள்.

இதில் விவேக் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க இவரின் நண்பராக சார்லி நடித்திருந்தார்.

அமெரிக்கா செல்லும் விவேக் அங்கு நடக்கும் மர்ம கொலைகளை கண்டுபிடிப்பதாக கதை இருக்கும்.

இந்த படத்தை விவேக் இளங்கோவன் இயக்கி இருந்தார்.

தற்போது 2ஆம் பாகத்துக்கான கதையை இவர் எழுதியுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

More Articles
Follows